Monday 22 April 2019

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறெலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க ! உத்தமனாகுக !! ஓங்குக !!!


* தீபம் அறக் கட்டளையின் தினசரி சமுதாயப்பணிகள் :

*காலையில் அருட் கஞ்சி( மூலிகை கஞ்சி) தயாரித்து 20 தர்ம       சாலைகள் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பசியாற்றுவித்தல்.

*12 மணி அளவில் குளிர்ந்த நீர் மோர் தயாரித்து தண்டீஸ்வரம் ஆர்ச்   அருகில் கோடைக்கால தாகம் தணிக்க நீர்மோர் தருதல். 

* மதியம் 12.30 மணி அளவில் நடமாடும் தர்மசாலை மூலம் கங்கை   அம்மன் திருக்கோவிலில் அரசமரத்தடியில் அன்னம் தருதல்.

* சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மதியம்   நூற்றுக்கணக்கானவர்களுக்கு வயிறார அன்னம் பாலித்தல்.

* மதியம் ஒரு மணி அளவில் சைதை சன்மார்க சங்க     சன்மார்க்கிகளுக்கு சிறப்பு அன்னம் அளித்தல்.

* மாலை 6 மணியளவில் அந்தி கடை சார்பாக தினமும் அன்னம்       பாலித்தல்.

தீபத்தின் மற்ற சமுதாய திருப்பணிகள்:

a)வசதியற்ற ஏழை எளிய  மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவுதல்.

 b)மாதந்தோறும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு    வாழ்வாதார உதவி செய்தல் 

c) ஏழை நோயாளிகளின் டயாலிசிஸ் மருத்துவ சிகிச்சைக்கு     நிதியளித்தல் 

d) ஒவ்வொரு மாதமும் பூச நாளிலே  வடலூர் சத்திய   தருமச்சாலையில் அன்னதான தொண்டு செய்தல் 

e) ஒவ்வொரு வியாழனன்றும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ   வாராந்திர வழிபாடு மற்றும் அன்னப் பிரசாதம் வழங்குதல் 

f) மாதந்தோறும் முதல் சனிக்கிழமை மாலையில் சான்றோர்களின்   ஆன்மீக சொற்பொழிவுகளை  நடத்துதல் 

g) ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச மருத்துவ   முகாம்கள் நடத்துதல்.

தொடர்ந்து நடைபெறும் இந்த அன்னதான அருட்பணியில், திருப்பணியில், சமுதாயப் பணியில்  அன்பு உள்ளங்கள் கலந்துகொண்டு, நிதியாகவோ, பொருளாகவோ, 
உடல் உழைப்பாக தொண்டு செய்து ஆன்ம லாபத்தை பாகம் செய்து கொள்ளுமாறு தீபம் அன்போடு அழைக்கிறது.

Donations are Welcome !!!
Volunteers are Welcome !!! 

தொண்டு செய்வோம் ! 
நீண்டு வாழ்வோம்!

வாழ்க தர்மம் 
வளர்க தர்மம் !!!

தர்மம் செய்வோம் 
தயவுடன் வாழ்வோம்!!!

திருச்சிற்றம்பலம்

நிறுவனர் 
தீபம் அறக் கட்டளை
-  இது ஓர் அரசு பதிவு பெற்ற  80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட அற தொண்டு நிறுவனம்.

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...