Monday 22 April 2019

அன்பும், கருணையும், தயவும் நிறைந்த ஆன்மநேய உள்ளங்களே,


சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் தினசரி பசியாற வருகைதரும் அன்பர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. அது மட்டுமல்லாமல் 20 தர்மசாலைகள் மூலம்  தினமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு  அருட் கஞ்சியும் மூலிகை கஞ்சியும் தரப்பட்டு கொண்டிருக்கிறது.

அதனால் நித்ய பசியாற்றுவித்தல் சமையல் பணிக்கு தேவைப்படும் மளிகை பொருட்களின் எண்ணிக்கையும் 
( அரிசி பருப்பு எண்ணெய்)
அதிகரித்து வருகிறது.

எனவே இனிவரும் காலங்களில் சமுதாய பணிகள் தர்ம பணிகள் தொடர்ந்து தங்கு தடையின்றி மிக சிறப்பாக நடைபெற தங்களின் மேலான பங்களிப்பும், ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. தயா உள்ளம் கொண்ட ஆன்மநேய சொந்தங்களே, தாங்களும் இந்த புண்ணிய தொண்டில் பங்கு பெற்று கிடைப்பதற்கரிய இந்த மானிடப் பிறவியின் பெரும்பயனை அடையவும், ஆன்மலாபம் பெற வேண்டியும் தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...