Tuesday 19 March 2019

தீபநெறி 2019 - மார்ச் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.


இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை 94440 73635 /  044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுபினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.





















அரசு பதிவு பெற்ற நிறுவனமா?
ஆம், தீபம் அறக்கட்டளை அரசு பதிவு பெற்ற சமுதாய தொண்டு நிறுவனம். அரசு பதிவு எண் - 2035/07

தீபம் அறக்கட்டளையின் நோக்கம் என்ன?
Please visit http://deepamtrust.org/profile/

எவ்வாறு நன்கொடை அளிப்பது?
அலுவலகத்திலும், நித்ய தீப தருமசாலையிலும் நேரில் வந்து நன்கொடை அளிக்கலாம். அன்னதானத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கலாம்.

நேரில் வரமுடியாதவர்கள் அலுவலக முகவரிக்கு Deepam Trust என்ற பெயரில் காசோலை(Cheque) / வரைவோலை(DD)  அனுப்பலாம்.

தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்யலாம்.

எவ்வளவு தொகை நன்கொடை அளிக்கலாம்?
ஒருநாள் அன்னதானத்திற்கு ஆகும் செலவு இந்த பக்கத்தில்( http://deepamtrust.org/donate-now/) குறிப்பிடப்பட்டுள்ளது, மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி, etc… போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை தந்து மகிழலாம்!

நன்கொடைகளுக்கு ரசீது வழங்கப்படுமா?
வழங்கப்படும். 5 வேலை நாட்களுக்குள் தங்களுடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் ரசீது அனுப்பி வைக்கப்படும். ரசீது பெற வில்லை என்றால் 94440 73635 / 044-2244 2515 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

வருமான வரிவிலக்கு பெறலாமா?
1961 வருமான வரி சட்டம் 80G ன் படி வருமான வரிவிலக்கு பெற்ற தொண்டு நிறுவனம்.

வெளி நாடுகளில் இருந்து நன்கொடை அளிக்கலாமா?
வெளிநாட்டு பணமதிப்பில் நன்கொடையளிக்க முடியாது. ஆனால் இந்தியா பண மதிப்பில் வங்கி பரிமாற்றம் செய்யலாம்.

தங்களுடைய சேவைகளை எவ்வாறு தெரிந்து கொள்வது?
மாதந்தோறும் தீபநெறி என்ற மாதஇதழ் வெளியிடப்படுகிறது, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இணையதளம், சமூக ஊடகம், மற்றும் குறுந்தகவல் மூலம் சேவைகள் பகிரப்படுகிறது.

Wednesday 6 March 2019


திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பாலாஜி குடும்பத்தினரின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு  கடந்த 6 ஆண்டுகாலமாக மாதந்தோறும் 25Kg அரிசி (1 சிப்பம்)  இன்று வழங்கப்பட்ட காட்சி.

தீபத்தின் தீபமாக ஒளிவீசி பிரகாசித்துக் கொண்டிருக்கும் தீபங்களுக்கு, தீபத்தின் பணிவான வணக்கங்களும்... வந்தனங்களும்...


தீபம் அறக்கட்டளையில் அன்றாட நடக்கும் அயராத அறப்பணிகளை நிர்வாகிகளும் தொண்டர்களும் நன்கு அறிவீர்கள்.

தீபம் அறக்கட்டளையின் தருமச்சாலைக்கு நாம் சொந்த இடம் பெறவேண்டிய,
வாங்க வேண்டிய,
அடைய வேண்டிய, நிர்பந்தத்தில் உள்ளோம்.
இன்னும் சில மாதங்களில் குத்தகை காலம் முடிவடைய இருக்கிறது.

மீண்டும் நாம் தர்மசாலை கட்டிடத்திற்கு நிதி திரட்ட வேண்டிய அவசர நிலையில் உள்ளோம்.

மார்ச் 1ஆம் தேதி முதல் மீண்டும் தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களை  நேரில் சந்திக்கவும் அவர்களிடம் நமது நிலையை நேரில் சந்தித்து உண்மை நிலையை எடுத்துக் கூறவும் முடிவு செய்துள்ளோம்.

இந்த பணியில் தீபம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒவ்வொருவரும்
முழு ஈடுபாடோடும் 
முழு அக்கறையோடும் 
முழு உத்வேகத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இந்த அரிய பெரிய பணியில் தாங்களும் தங்கள் குடும்பமும் ஒவ்வொரு நாளும் பங்குபெற்று தீபம் அறக்கட்டளையின் நித்திய தீப தருமச்சாலைக்கு 
சென்னை வேளச்சேரியில் சொந்த கட்டிடம் அமைய 
உறுதி எடுத்துக் கொள்ளுமாறு அடியேன் தங்களிடம் விண்ணப்பம் செய்கிறேன்.

தாங்கள் செய்ய வேண்டியவை அல்லது தங்களுடைய பங்களிப்பு

1)தீபம் அறக்கட்டளையின் ஒவ்வொரு நிர்வாகியும் அவரவர் சக்திக்கேற்ப தர்மசாலை கட்டுவதற்கு உடனடியாக நிதி வழங்குதல் ...

2)தங்களை சார்ந்த நண்பர்கள் சுற்றத்தார் 
உடன் பணிபுரிவோர் அவர்களிடம் நிதி திரட்ட அழைத்துச் செல்லுதல்...

3) ஒவ்வொருவரும் குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து பேரை யாவது புதியதாக அறிமுகம் செய்தல்...

செய்தால் இந்த கட்டிட பணி மிக எளிதாகவும்... விரைவாகவும் ...
இறைவன் நமக்கு நடத்தித் தருவார் ...
அமைத்துத் தருவார்... பெற்றுத்தருவார் ...
தருமச்சாலையை வாங்கி தருவார்.
இது இறைவன் மீது ஆணை.

நிறுவனர்
 தீபம் அறக்கட்டளை

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சன்மார்க்க சொற்பொழிவு





 சென்னை வேளச்சேரி
  தீபம் அறக்கட்டளையின் சன்மார்க்க சொற்பொழிவு

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதாந்திர முதல் சனிக்கிழமை சன்மார்க்க சொற்பொழிவு நேற்று (02-03-2019) மாலை 6-30 மணியளவில் 15 மாத சொற்பொழிவாக வள்ளுவரும், வள்ளலாரும் என்கிற தலைப்பில் திருக்குறள் திருத்தொண்டர்  தயவுமிகு. வள்ளுவப் வாடாப்பூ அவர்கள் உரையாற்றினார்கள்.
பக்தி மார்க்கத்துடன் கூடிய சமய மார்க்க சொற்பொழிவாக அமைந்தது. ஏராளமான அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பசியாற்றுவித்தல் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் தீபம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அடுத்த மாதம் முதல் சனிக்கிழமை சொற்பொழிவு நடைபெறும் நாள்: 06-04-2019

தலைப்பு: கைவிடமாட்டான் என்று ஊதூது சங்கே
உரை நிகழ்த்துபவர்: 
சன்மார்க்க சீலர், ஆன்மநேய உறவினர்
தயவுமிகு. M.சந்திரசேகர் அவர்கள்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், திருச்சி
அனைவரும் வருக!
அருளமுதம் பெறுக!

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறவித் திருநாள்






தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறவித் திருநாளை முன்னிட்டு வேளச்சேரி பகுதி தி.மு.கழகத்தின் சார்பில் நமது நித்ய தீப தருமச்சாலையில் 01-03-2019 அன்று சிறப்பு அன்னதர்மம்  செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்கு வேளச்சேரி பகுதி திமுக செயலாளர்
அரிமா சு.சேகர் அவர்கள் மற்றும் 
மதிவாணன் அவர்கள்
மோகன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மிக சிறப்பான ஏற்பாடு செய்த திலீப்குமார் அவர்களுக்கும் தீபம் அறக்கட்டளையின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையின் 20 தர்மசாலை




நடந்து நடந்து காலுஞ் சோர்ந்தது, கேட்டுக்கேட்டு வாயுஞ் சோர்ந்தது, நினைத்து நினைத்து மனமும் சோர்ந்தது, இனி இப்பாவி வயிற்றுக்கென்ன செய்வோம்! என்று கண்ணீர் வடிக்கின்ற ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்து கண்ணீரை  மாற்றுவதே  ஜீவகாருணியம் -  வள்ளலார்

தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையின்  20 தர்மசாலைகள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான அன்பு உள்ளங்கள் பசியாற்றகூடிய அறப்பணியில் தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் மாதந்தோறும் கலந்துகொண்டு அருள்நிதி அள்ளிக்கொடுத்து இறைவனுடைய பேரருள் பெரும் கருணையோடு வாழ்வாங்கு வாழ தீபம் அறக்கட்டளை அழைத்து மகிழ்கிறது.

தினமும் அருட் கஞ்சி வார்த்து பசிப்பிணி போக்கும் காட்சிகளில் சில...

"பசியாற்றுவித்தல் பரம புண்ணியம்"
"பசித்தவர்களுக்கு அன்னம் அளிப்போம் !!!
அருள் பெற்று ஆனந்தமாய் வாழ்வோம்!!!"

தர்மம் செய்வோம் ...
தயவுடன் வாழ்வோம்...

தயவுடன் 
தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி 
-ஓர் அரசு பதிவு பெற்ற அற தொண்டு நிறுவனம் ...
(22 ஆண்டுகளாக சமுதாயப் பணியில்...)
9444073635
www.deepamtrust.org

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...