Monday 15 April 2019

21.04.2019 - சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கோடைகால நீர்மோர் பந்தல்




திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் வேளச்சேரி பகுதியில் கடும்வெயிலால் அவதியுறும் மக்களின் தாகம் தணிக்கும் பொருட்டு கோடை கால நீர்மோர் பந்தல் ய 01-04-2019 அன்று முதல் துவக்கப்பட்டு தொடர்ந்து தினமும் வெயில் காலம் முடியும் வரை தாகம் தணிக்க குளிர்ச்சியான நீர்மோர் & ரஸ்னா தண்டீஸ்வரர் கோவில் ஆர்ச் அருகில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இதுவரை நீர்மோர் உபயம் செய்து காண லாபத்தை பாகம் செய்துகொண்ட புண்ணியஸ்தர்கள்:

* தயவு முருகானந்தம் ஐயா வேளச்சேரி
* தயவு பாக்யலட்சுமி தீபம் மாணவி
* தயவு மணி ஐயா அவர்கள் (ஐ.ஐ.டி ஓய்வு)
* தயவு சன்மார்க்கி ராமாபுரம் குமரகுரு அவர்கள்
* தயவு  டாக்டர் செந்தில் நாதன் ஐயா அவர்கள் excellent hospital வேளச்சேரி
* தயவு G ரமேஷ் அவர்கள் பள்ளிக்கரணை
* தயவு காயத்ரி ரமேஷ் அவர்கள் பள்ளிக்கரணை
* பேராசிரியர் முத்துக்குமார் அவர்கள் செம்பாக்கம்.

தாங்களும் இப்புண்ணியத் தொண்டிலும் பங்கு பெற்று, இந்த சமுதாயப் பணி
தடைபடாமல் தினமும் தொடர்ந்து நடைபெறும் தாகம் தணிக்கும் அற்புதமான அறப்பணியில்  பங்கு பெற்று தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் ஆன்ம லாபம் பெற அன்புடன் அழைக்கிறோம்.

ஒருநாள் நீர்மோர் தயாரிக்க தேவையான தயிருக்கு நாளொன்றுக்கு ₹500/- உபயமாக அளித்து அல்லது தங்களின் சக்திக்கேற்ப பொருளாக அளித்து மக்களின் தாகம் தணிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

குளிர்ந்த நீர்மோர் வழங்கப்படும் இடம்:
தண்டீஸ்வரம் சிவாலயம் ஆர்ச் அருகில், வேளச்சேரி

வழங்கப்படும் நேரம்:
தினசரி நண்பகல் 12 மணியளவில்

தொடர்புக்கு:
தீபம் அறக்கட்டளை
30, திரௌபதி அம்மன் கோவில் தெரு
வேளச்சேரி, சென்னை-600042
அலுவலக தொடர்பு எண்:
044-22442515
கைபேசி எண்: 9444073635
~~~~~~~~
தருமச்சாலை முகவரி:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரைத் தெரு
வேளச்சேரி, சென்னை-600042

தினமும் நீர் மோர் வழங்கி சேவை செய்ய விரும்பும் தொண்டு உள்ளங்களை அன்போடு வரவேற்று மகிழ்கிறோம்.

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...