Saturday, 8 August 2026

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺

📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை
📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை
பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் கேள்வி ஞானப் போட்டி!

🌟 வள்ளலார் பெருமானின் வாழ்க்கை வரலாறு, அருள் நெறி, ஜீவகாருண்யம் மற்றும் அவருடைய உயர்ந்த கொள்கைகளை அறிந்து கொள்ளும் ஒரு சிறந்த வாய்ப்பு!

📍 போட்டி நடைபெறும் இடம்:

நித்ய தீப தருமச்சாலை,

வேளச்சேரி, சென்னை.

📅 தேதி: 30.08.2026 – ஞாயிற்றுக்கிழமை


📚 A Group

1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை

⏰ காலை 10.00 மணி


📚 B Group

6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை

⏰ காலை 11.00 மணி


📝 போட்டியில் வள்ளலார் வரலாறு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.

🏆 சிறப்பு பரிசு:
சரியான பதில்களை அளித்து சிறப்பாக பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு மிக உயர்ந்த சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

🎖️ பங்கேற்கும் அனைவருக்கும்:
🏅 பதக்கம்
📜 சான்றிதழ்
🎁 சிறு பரிசு

🌱 வள்ளலாரை அறிந்து கொள்வோம்…
💛 அருளையும் அன்பையும் வளர்ப்போம்…
🙏 ஜீவகாருண்ய நெறியில் பயணிப்போம்…

📝 பங்கேற்க விரும்பும் மாணவர்கள் கீழ்கண்ட Google Form-ஐ பூர்த்தி செய்து Submit செய்யவும்:

👉 பதிவு செய்ய

📞 தொடர்புக்கு: 99947 23635

🌺 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளையும் அன்புடன் அழைக்கிறோம்! 🌺

🙏 தீபம் அறக்கட்டளை
94440 73635


மாதிரி கேள்விகள்:

A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை

1. வள்ளலார் பிறந்த ஊர் எது?

பதில்: மருதூர்


2. வள்ளலார் பிறந்த தேதி எது?

பதில்: 05.10.1823


3. வள்ளலாரின் இயற்பெயர் என்ன?

பதில்: இராமலிங்கம்


4. வள்ளலாரின் தந்தையின் பெயர் என்ன?

பதில்: இராமையா


5. வள்ளலாரின் தாயாரின் பெயர் என்ன?

பதில்: சின்னம்மையார்


6. வள்ளலாரின் மூத்த சகோதரரின் பெயர் என்ன?

பதில்: சபாபதி


7. வள்ளலார் சிறுவயதில் எந்த நகரில் வளர்ந்தார்?

பதில்: சென்னை


8. வள்ளலார் சிறுவயதில் எந்தக் கடவுளை வழிபட்டார்?

பதில்: முருகப்பெருமான்


9. வள்ளலார் வழிபட்ட புகழ்பெற்ற முருகன் கோவில் எது?

பதில்: கந்தகோட்டம் கந்தசாமி கோவில்


10. வள்ளலாரின் பாடல்கள் தொகுக்கப்பட்ட நூல் எது?

பதில்: திருவருட்பா


11. திருவருட்பா எத்தனை திருமுறைகளைக் கொண்டது?

பதில்: ஆறு திருமுறைகள்


12. வள்ளலார் இறைவனை எந்தப் பெயரில் அழைத்தார்?

பதில்: அருட்பெருஞ்ஜோதி


13. வள்ளலார் எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்று கூறினாரா?

பதில்: ஆம்


14. ஜீவகாருண்யம் என்றால் என்ன?

பதில்: அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம் காட்டுதல்


15. வள்ளலார் புலால் உணவைப் பற்றி என்ன கூறினார்?

பதில்: புலால் உண்ணக்கூடாது


16. வள்ளலார் நிறுவிய தரும நிறுவனம் எது?

பதில்: சத்திய தருமச்சாலை


17. சத்திய தருமச்சாலை எங்கு அமைந்துள்ளது?

பதில்: வடலூர்


18. சத்திய தருமச்சாலை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

பதில்: 1867


19. சத்திய தருமச்சாலையின் முக்கிய நோக்கம் என்ன?

பதில்: பசியைப் போக்குதல்


20. வள்ளலார் நிறுவிய ஞான நிலையம் எது?

பதில்: சத்திய ஞானசபை


21. சத்திய ஞானசபை எங்கு அமைந்துள்ளது?

பதில்: வடலூர்


22. சத்திய ஞானசபை எந்த நாளில் திறக்கப்பட்டது?

பதில்: தைப்பூசம்


23. சத்திய ஞானசபையில் எத்தனை திரைகள் உள்ளன?

பதில்: ஏழு திரைகள்


24. சத்திய ஞானசபையில் எதை தரிசிக்கலாம்?

பதில்: அருட்பெருஞ்ஜோதி


25. வள்ளலார் தனது இறுதிக் காலத்தில் எங்கு தங்கினார்?

பதில்: மேட்டுக்குப்பம்


26. வள்ளலார் தங்கியிருந்த இடத்தின் பெயர் என்ன?

பதில்: சித்திவளாகம்


27. வள்ளலார் சித்தி பெற்ற ஆண்டு எது?

பதில்: 1874


28. வள்ளலார் வலியுறுத்திய முக்கிய பண்பு எது?

பதில்: இரக்கம்


29. வள்ளலார் காட்டிய உண்மையான வழிபாடு என்ன?

பதில்: உயிர்களுக்கு இரக்கம் காட்டுதல்


30. வள்ளலார் உலகிற்கு வழங்கிய உயர்ந்த கொள்கை என்ன?

பதில்: எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


B Group:

(6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு)

1. வள்ளலாரின் சிறப்புப் பெயர் என்ன?

    பதில்: திருவருட்பிரகாச வள்ளலார்

2. வள்ளலார் எந்த மொழியில் பெரும்பாலும் பாடல்கள் இயற்றினார்?

    பதில்: தமிழ்

3. வள்ளலார் முறையான பள்ளிக் கல்வி பயின்றாரா?

    பதில்: இல்லை

4. வள்ளலார் எந்த வகையான கல்வியில் சிறந்து விளங்கினார்?

    பதில்: ஆன்மிகம் மற்றும் தமிழ் கல்வியில்

5. வள்ளலாரின் முதல் ஆன்மிகப் பாடல்கள் யாரைப் பற்றியவை?

    பதில்: முருகப்பெருமானைப் பற்றியவை

6. வள்ளலாரின் ஞான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அவர் கூறியது என்ன?

    பதில்: இறையருள்

7. வள்ளலார் வலியுறுத்திய உயர்ந்த இறை உண்மை என்ன?

    பதில்: கடவுள் ஒருவரே

8. வள்ளலார் சமயங்களையும் மதங்களையும் எவ்வாறு பார்த்தார்?

    பதில்: அனைத்தையும் பொதுமையாகக் கருதினார்

9. வள்ளலார் எந்த வகையான வேறுபாடுகளை எதிர்த்தார்?

    பதில்: சாதி, சமயம், மதம் போன்ற வேறுபாடுகளை

10. வள்ளலார் கூறிய “சமரசம்” என்பதன் அடிப்படை கருத்து என்ன?

     பதில்: அனைவரையும் சமமாகக் கருதுதல்

11. வள்ளலார் மனிதர்களிடையே எந்த உணர்வு நிலவ வேண்டும் என்று விரும்பினார்?

     பதில்: ஆன்மநேய ஒருமைப்பாடு

12. வள்ளலாரின் ஆன்மநேய ஒருமைப்பாடு எதை அடிப்படையாகக் கொண்டது?

     பதில்: எல்லா உயிர்களையும் ஒன்றாகக் காணும் அன்பு

13. வள்ளலாரின் கருத்துப்படி ஜீவகாருண்யம் எதற்கு முதற்படியாகும்?

     பதில்: முத்திக்கு

14. ஜீவகாருண்யம் இல்லாமல் எது வளராது என்று வள்ளலார் கூறுகிறார்?

     பதில்: அன்பு

15. ஜீவகாருண்யம் இருந்தால் எது உண்டாகும் என்று வள்ளலார் கூறுகிறார்?

     பதில்: அருள்

16. அருள் இருந்தால் எது உண்டாகும் என்று வள்ளலார் கூறுகிறார்?

     பதில்: அன்பு

17. அன்பு இருந்தால் எது உண்டாகும் என்று வள்ளலார் கூறுகிறார்?

     பதில்: சிவானுபவம்

18. வள்ளலாரின் கருத்துப்படி கடவுளை அடைவதற்கான சாவி எது?

     பதில்: அருள்

19. அருளைப் பெறுவதற்கான முக்கிய வழி எது என்று வள்ளலார் கூறுகிறார்?

     பதில்: அன்பு

20. அன்பு எந்த வழியில் வளர்கிறது என்று வள்ளலார் கூறுகிறார்?

     பதில்: ஜீவகாருண்யத்தின் மூலம்

21. வள்ளலார் கூறிய நான்கு ஒழுக்கங்கள் எவை?

     பதில்: இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம்

22. இந்திரிய ஒழுக்கம் என்பது எதனுடன் தொடர்புடையது?

     பதில்: புலன்களின் ஒழுக்கம்

23. கரண ஒழுக்கம் என்பது எதனுடன் தொடர்புடையது?

     பதில்: மனத்தின் ஒழுக்கம்

24. ஜீவ ஒழுக்கம் என்பது எதை வலியுறுத்துகிறது?

     பதில்: மனிதர்களிடையே வேறுபாடின்றி வாழ்வதை

25. ஆன்ம ஒழுக்கம் என்பது எதை வலியுறுத்துகிறது?

     பதில்: அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டு ஒன்றுபட்ட உணர்வுடன் இருப்பதை

26. வள்ளலார் கூறிய ஜீவ ஒழுக்கத்தில் எந்த வேறுபாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும்?

     பதில்: சாதி, சமயம், குலம், கோத்திரம், தேசம், மார்க்கம் போன்ற வேறுபாடுகள் இல்லாமல்

27. வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய குணம் என்ன?

     பதில்: பெருந்தயவு

28. வள்ளலார் “தயவு” என்பதற்கு எந்த முக்கியத்துவத்தை அளித்தார்?

     பதில்: தயவு மனித வாழ்வின் அடிப்படை குணமாக இருக்க வேண்டும்

29. வள்ளலாரின் போதனையில் “அன்பு” மற்றும் “இரக்கம்” எதனுடன் தொடர்புடையவை?

     பதில்: ஜீவகாருண்யத்துடன்

30. வள்ளலார் பசியால் வாடும் உயிர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்?

     பதில்: உணவு வழங்க வேண்டும்

31. சத்திய தருமச்சாலையில் உணவு வழங்கப்பட்டதன் அடிப்படை நோக்கம் என்ன?

     பதில்: பசியைப் போக்குதல்

32. வள்ளலாரின் தருமச்சாலையின் சிறப்பான கொள்கை என்ன?

     பதில்: பசித்தவர்களுக்கு உணவு வழங்குதல்

33. வள்ளலார் பசியை எந்த வகையான துன்பமாகக் கருதினார்?

     பதில்: மிகப்பெரிய துன்பமாக

34. வள்ளலார் நிறுவிய சத்திய தருமச்சாலை எந்த மனித வேறுபாடுகளையும் பார்க்காமல் எதை வழங்கியது?

     பதில்: உணவு

35. வள்ளலார் வலியுறுத்திய உணவு ஒழுக்கத்தின் முக்கிய அம்சம் என்ன?

     பதில்: புலால் உண்ணாமை

36. வள்ளலார் உயிர்க்கொலையை ஏன் தவிர்க்கச் சொன்னார்?

     பதில்: அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம் காட்ட வேண்டும் என்பதால்

37. வள்ளலாரின் போதனையில் “உயிர்” என்பதன் முக்கியத்துவம் என்ன?

     பதில்: ஒவ்வொரு உயிரும் மதிக்கப்பட வேண்டியது

38. வள்ளலார் அனைத்து உயிர்களையும் எவ்வாறு கருதச் சொல்கிறார்?

     பதில்: தம் உயிரைப் போல

39. வள்ளலாரின் “தனிப்பெருங்கருணை” யாருடைய கருணையைச் சுட்டுகிறது?

     பதில்: இறைவனின் பெருங்கருணையை

40. வள்ளலார் இறைவனை எந்த வடிவில் உணர்ந்தார்?

     பதில்: அருட்பெருஞ்ஜோதி வடிவில்

41. வள்ளலாரின் ஆன்மிகப் பாதையின் முழுப்பெயர் என்ன?

     பதில்: சமரச சுத்த சன்மார்க்கம்

42. சுத்த சன்மார்க்கம் எந்த பொதுநெறியாக வள்ளலார் கருதினார்?

     பதில்: எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் பொதுநெறியாக

43. வள்ளலாரின் கருத்துப்படி மனிதர்கள் பெற வேண்டிய முக்கிய நற்குணங்கள் எவை?

     பதில்: உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம்

44. வள்ளலார் எந்த மூன்று “உண்மை” குணங்களைப் பெற வேண்டும் என்று கூறுகிறார்?

     பதில்: உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம்

45. வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் முக்கிய இலட்சியம் என்ன?

     பதில்: பேரின்ப சித்திப் பெருவாழ்வு

46. வள்ளலார் குறிப்பிடும் உயர்ந்த ஆன்மிக உடல்நிலைகளில் ஒன்று எது?

     பதில்: சுத்த தேகம்

47. வள்ளலார் குறிப்பிடும் மூன்று சித்தித் தேகங்கள் எவை?

     பதில்: சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம்

48. வள்ளலாரின் போதனையில் அழிவில்லாத வாழ்வு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

     பதில்: சாகாக்கலானுபவம்

49. வள்ளலார் இறைவனை அடைவதற்கான வழியில் எந்த உணர்வை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்?

     பதில்: அன்பும் ஜீவகாருண்யமும்

50. வள்ளலாரின் உரைநடைப் படைப்புகளில் உயிர்களிடம் இரக்கத்தை விரிவாக எடுத்துரைக்கும் நூல் எது?

     பதில்: ஜீவகாருண்ய ஒழுக்கம்

51. வள்ளலார் எழுதிய முக்கியமான ஆன்மிக அகவல் எது?

     பதில்: அருட்பெருஞ்ஜோதி அகவல்

52. அருட்பெருஞ்ஜோதி அகவலின் மையப் பொருள் என்ன?

     பதில்: அருட்பெருஞ்ஜோதியைப் போற்றுதல்

53. வள்ளலார் எழுதிய முக்கியமான உரைநடை விண்ணப்பங்களில் ஒன்று எது?

     பதில்: சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்

54. வள்ளலார் நிறுவிய ஞானசபை சுத்த சன்மார்க்கத்தில் எதற்கான அடையாளமாக விளங்குகிறது?

     பதில்: உண்மை விளக்கத்திற்கான ஞான நிலையமாக

55. சத்திய ஞானசபையில் திரைகள் இருப்பதன் ஆன்மிக விளக்கம் என்ன?

     பதில்: ஆன்மாவின் உண்மை ஒளியை மறைக்கும் தடைகளைக் குறிக்கின்றன

56. வள்ளலார் சத்திய ஞானசபையை எந்த ஆன்மிக நோக்கத்துடன் தொடர்புபடுத்தினார்?

     பதில்: உண்மை விளக்கத்தைப் பெறுவதுடன்

57. வள்ளலாரின் சன்மார்க்கத்தில் “பொது நோக்கம்” என்றால் என்ன?

     பதில்: அனைவரையும் வேறுபாடின்றிப் பொதுவாகக் காணுதல்

58. வள்ளலார் சாதி, சமய வேறுபாடுகளை நீக்குவதன் மூலம் எதை வளர்க்க விரும்பினார்?

     பதில்: ஜீவகாருண்யத்தையும் பொதுமை உணர்வையும்

59. வள்ளலார் போதனைகளின் மையத்தில் இருக்கும் இரண்டு முக்கியக் கருத்துகள் எவை?

     பதில்: ஜீவகாருண்யம் மற்றும் அருள்

60. வள்ளலார் மனிதகுலத்திற்கு வழங்கிய வாழ்க்கை நெறியின் மையச் செய்தி என்ன?

     பதில்: எல்லா உயிர்களிடத்தும் அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்தல்

Monday, 27 April 2026

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 17ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 29 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப் பணியாக, சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் வசதியின்மையால் குடும்ப ஏழ்மை நிலையில் உள்ள பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மேற்படிப்பை தொடர கடந்த 16 ஆண்டுகளாக தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.




இதுவரை 1454 மாணவச் செல்வங்களுக்கு மொத்தம் ₹89,86,034/- ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சமுதாய அக்கறையோடு ஏழை மாணவர்களின் கல்விக்கு கடந்த 16 ஆண்டுகளில் ₹89 லட்சங்கள் அள்ளிக்கொடுத்து உதவிய அருளாளர்களை, நன்கொடையாளர்களை, வாழும் தெய்வங்களை, தீபம் அறக்கட்டளை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது.

மேலும் வரும் 2026 – 2027 கல்வியாண்டில் டிப்ளமோ, டிகிரி, என்ஜினியரிங், மெடிக்கல், பயில விரும்பும் அல்லது படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும்.

விண்ணப்பிக்கும் முன்பு கீழுள்ள இணைப்பில் சென்று அறிவுரைகளை படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்

click here and read the instructions carefully

விண்ணப்பிக்க இந்த லிங்கை பயன்படுத்தவும்:

👉   APPLY ONLINE

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய கடைசி நாள்: 
01.06.2026

பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏழ்மை தகுதியின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு,  நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலுக்கு பிறகு “தீபம் கல்வி உதவி குழு” பரிந்துரை செய்த மாணவ மாணவிகளுக்கு, கல்வி உதவித் தொகையை மாணவர்கள் பயிலும் கல்லூரிக்கு  காசோலையாக செலுத்தப்படும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் எந்த அறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும். தீபம் அறக்கட்டளையின் கல்வி உதவி குழுவின் முடிவே இறுதியானது.

கல்வி உதவி குழு பரிந்துரை செய்யும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

குறிப்பு:

1) பள்ளி மாணவ மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டாம்.

2) தாய்/தந்தை இல்லாத, முதல் தலைமுறை பட்டதாரி, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்கள், அரசு கல்லூரிகளில் பயில்பவர்களுக்கு, கிராமத்தில் உள்ள  மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

3) விண்ணப்பம் நிரப்பும் போது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழ்க்கண்ட தொலைபேசி எண் அல்லது WhatsApp எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண் : 044-4335 8232

WhatsApp எண் : https://wa.me/918838995501

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...