Wednesday 30 September 2020

வள்ளல்பெருமான் 197-வது வருவிக்கவுற்ற பெருநாள் விழா

அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி

சென்னை வேளச்சேரியில் திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் 197-வது வருவிக்கவுற்ற பெருநாள் விழா

நாள்     : 04-10-2018

கிழமை : ஞாயிற்றுக்கிழமை 

இடம்     : நித்ய தீப தருமச்சாலை வளாகம் 

7/8, புத்தேரிக்கரை தெரு, தண்டீஸ்வரம் சிவாலயம் பின்புறம்.

வேளச்சேரி, சென்னை 


நிகழ்வுகள்:

அதிகாலை : 4-30 மணி

திருப்பள்ளி எழுச்சி, திருவடிப்புகழ்ச்சி 

அதிகாலை : 5-00 மணி

அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்

காலை   : 7-30 மணி

உலகு கட்டி ஆளும் சன்மார்க்க நீதிக்கொடி உயர்த்துதல் 

காலை   : 9-00 மணிமுதல்

அன்பர்களுக்கு அன்னதர்மம் (பசியாற்றுவித்தல்) நடைபெறும். 


அனைவரும் வருக! 

அருள்ஜோதி அருள் பெறுக! 

--

இங்ஙனம் 

நிறுவனர் & நிர்வாகிகள் 

தீபம் அறக்கட்டளை

வேளச்சேரி சென்னை

Tuesday 22 September 2020

23.09.2020 - மெய்யூர் கிராமக் குழந்தைகளுக்கு மதிய உணவு



கொரோனா ஆரம்பித்த காலத்திலிருந்து பசியால் வாடும், மெய்யூர் கிராமத்தில் தினசரி 100 குழந்தைகளுக்கு தீபம் உணவு வழங்கி வருகிறது. 

மெய்யூர் கிராமத்தில் தினசரி உணவு வழங்க நாளொன்றுக்கு ₹1200 செலவாகிறது. ஒரு குழந்தைக்கு உணவு கொடுக்க ₹12 ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது.

குழந்தைகளின் உணவுக்காக தீபம் அறக்கட்டளை வாரந்தோறும் ₹10,000 பொற்காசுகள் அதாவது மாதம் ₹40,000 வங்கி பரிமாற்றம் மூலம் அனுப்பப்படுகிறது. 

பொதுவாக இந்த ப்ராஜெக்ட்க்கு நன்கொடைகள் வருவதில்லை.  சென்ற வாரம் இந்த செய்தியை பார்த்து தீபம் குழுவிலுள்ள மூவர் மட்டும் நன்கொடைகள் வழங்கினர்.

பள்ளிகள் திறக்கும் வரை தீபம் இந்த குழந்தைகளுக்கு உணவு கொடுக்க விரும்புகிறது 

--

தீபம் நிர்வாகம்

நடமாடும் தர்மசாலை வாகனத்திற்கு புதிய டயர்கள்

நடமாடும் தர்மசாலை வாகனத்திற்கு இன்று புதியதாக 4 புதிய MRF டயர்கள் மற்றும் புதிய டியூப் ₹10,500/- க்கு வாங்கப்பட்டன. பொருத்தப்பட்டன. Sponsors are welcome!!!

தொண்டு செய்த திரு பாரதி மற்றும் திரு வெங்கடேஷ் அவர்களை தீபம் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது.

--

தீபம் நிர்வாகம்

Sunday 20 September 2020

நடமாடும் தர்ம சாலை

 இன்றைய நடமாடும் தர்ம சாலை:




இன்று தீபம் அறக் கட்டளையின் டாடா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், லஸ் கார்னர்,  கச்சேரி சாலை, லைட் அவுஸ், மெரினா கடற்கரை, சாந்தோம்,  பட்டினப்பாக்கம், விவேகானந்தர் இல்லம், கஸ்தூரிபாய் மருத்துவமனை  பகுதிகளில் ரோட்டோரம் பசியோடு ஆதரவற்று இருப்பவர்களுக்கு, உணவு பொட்டலங்களை தண்ணீர் பாட்டில்களை வழங்கிய சேவகர்கள்: 

திரு குமரேசன் அவர்கள் 

திரு  ஆனந்த் அவர்கள் 

திரு சுதாகர் அவர்கள்

திரு முனியன் அவர்கள்

திரு ரங்கநாதன் அவர்கள் மற்றும்

 நன்கொடையாளர் * திரு சதீஷ் பாண்டிதுறை (திரு அஸ்லாம், துபாய்) அவர்கள்* 


தீபம் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது.

Saturday 19 September 2020

மதுராந்தகம் - உண்மை தொண்டு செய்பவர்களை தீபம் வாழ்த்துகிறது.

 மதுராந்தகம் அன்னதானம்:

தற்போது மதுராந்தகம் தர்ம சாலையில் காலை நான்கு மணியிலிருந்து அன்னதான பணிகள் செய்து கொண்டிருக்கக் கூடிய சேவடிகள்:






திரு பாரதி அவர்கள்

திரு வேல்முருகன் அவர்கள்

திரு கணபதி அவர்கள்

திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்

திரு பரணி அவர்கள்

திரு குரு கார்த்திக் அவர்கள்

திரு ராஜேந்திர பிரசாத் அவர்கள்

திரு காந்தி அவர்கள்


உண்மை தொண்டு செய்பவர்களை தீபம் வாழ்த்துகிறது.


தொண்டு செய்வோம்! 

நீண்டு வாழ்வோம்!


தீபம் நிர்வாகம்

20.09.2020 - மாணவர்களுக்கு கல்வி உதவி

7 மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு நித்ய தீப தருமச்சாலையில் இன்று கல்வி உதவிக்கான  காசோலைகள் நேரடியாக பிரார்த்தனை செய்து வழங்கப்பட்டன. 


அனைவருக்கும் போக்குவரத்து செலவு வழங்கப்பட்டது (TA/DA). மாணவர்களுக்கு பாக்கு தட்டில் வயிறார அன்பான உணவு அப்பளத்துடன் வழங்கப்பட்டது. 

நிகழ்வில் கலந்துகொண்ட

அருளாளர்கள்

1)பேராசிரியர் முத்துக்குமார் கண்ணன் அவர்கள்

2)திரு நாராயண மூர்த்தி ஐயா அவர்கள

3)திருமதி ஜானகி ஜெய சேகர் அவர்கள்

4)திரு R ராஜாராமன் ஐயா அவர்கள்

5)திருமதி லட்சுமி அம்மையார் அவர்கள்

6)திருமதி மின்னல் அம்மா அவர்கள்

7)திரு பிரபு அவர்கள்

8)திரு சிவா அவர்கள்

9) திரு மணி அவர்கள்

இதுவரை உதவி பெற்ற மொத்த மாணவ மாணவிகள்: 1,026

இதுவரை கல்வி உதவியாக வழங்கப்பட்ட மொத்த தொகை: ₹ 56,02,485/-.

20.09.2020 - தீபம் அறக்கட்டளையின் இன்றைய அற்புத சமுதாயப் பணிகள்

மனதை மகிழ்விக்கும், மிக மிக சிறந்த சமுதாய பணிகளை இன்று தீபம் அறக் கட்டளை இறையருளால் நிறைவாக செய்திருக்கிறது.

1) மதுராந்தகம் நித்ய தீப தருமச்சாலையில் 150 கிலோ அரிசியில் காலை உணவும் (இட்லி, பொங்கல், மெதுவடை, சொஜ்ஜி, கேசரி) மதிய உணவும் (வெஜிடபிள் பிரிஞ்சி, சாம்பார் சாதம், எண்ணை கத்தரிக்காய்) 1,300 பேருக்கு சீரோடும் சிறப்போடும் வழங்கப்பட்டது.

நாள் முழுவதும் தொண்டு செய்த தீபம் சேவடிகளை தீபம் பாராட்டி மகிழ்கிறது.

Madhuranthagam Sevaadigal

1.Mr Bharathi

2.Mr guru karthi 

3.Mr Barani

4.Mr ganapathy 

5.Mr velmurugan

6.Mr krishnamurthy aiyya

7.Mr rajendhira prasath

8.Mr ranganathan 

9.Mr karthi 

10.Mr Gandhi .


2) இன்றைய நடமாடும் தர்ம சாலை:

இன்று தீபம் அறக் கட்டளையின் டாடா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், லஸ் கார்னர்,  கச்சேரி சாலை, லைட் அவுஸ், மெரினா கடற்கரை, சாந்தோம்,  பட்டினப்பாக்கம், விவேகானந்தர் இல்லம், கஸ்தூரிபாய் மருத்துவமனை  பகுதிகளில் ரோட்டோரம் பசியோடு ஆதரவற்று இருப்பவர்களுக்கு, உணவு பொட்டலங்களை தண்ணீர் பாட்டில்களை வழங்கிய சேவகர்கள்: 

திரு குமரேசன் அவர்கள் 

திரு  ஆனந்த் அவர்கள் 

திரு சுதாகர் அவர்கள்

திரு முனியன் அவர்கள்

திரு ரங்கநாதன் அவர்கள் மற்றும்

 நன்கொடையாளர் * திரு சதீஷ் பாண்டிதுறை (திரு அஸ்லாம், துபாய்) அவர்கள்* 


தீபம் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது.


3) இன்று மதியம் நித்திய தீப தர்ம சாலையில் பசித்து வந்தவர்களுக்கு வீடியோ 12 மணி அளவில் உணவு பொட்டலங்கள் மற்றும் வாழைப்பழம் வழங்கப்பட்டது.


4) திரு ரமேஷ் மற்றும் திரு கணேஷ் மூலம் கங்கை அம்மன் திருக்கோவிலில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.


5) இரவு 7 மணி அளவில் நித்திய தீப தருமச்சாலையில் எலுமிச்சை சாதம் உணவு பொட்டலங்களாக வழங்கப்பட்டன.


6) மாணவர்களுக்கு கல்வி உதவி

7 மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு நித்ய தீப தருமச்சாலையில் இன்று கல்வி உதவிக்கான  காசோலைகள் நேரடியாக பிரார்த்தனை செய்து வழங்கப்பட்டன. அனைவருக்கும் போக்குவரத்து செலவு வழங்கப்பட்டது (TA/DA). மாணவர்களுக்கு பாக்கு தட்டில் வயிறார அன்பான உணவு அப்பளத்துடன் வழங்கப்பட்டது. 

நிகழ்வில் கலந்துகொண்ட

அருளாளர்கள்

1)பேராசிரியர் முத்துக்குமார் கண்ணன் அவர்கள்

2)திரு நாராயண மூர்த்தி ஐயா அவர்கள

3)திருமதி ஜானகி ஜெய சேகர் அவர்கள்

4)திரு R ராஜாராமன் ஐயா அவர்கள்

5)திருமதி லட்சுமி அம்மையார் அவர்கள்

6)திருமதி மின்னல் அம்மா அவர்கள்

7)திரு பிரபு அவர்கள்

8)திரு சிவா அவர்கள்

9) திரு மணி அவர்கள்


இதுவரை உதவி பெற்ற மொத்த மாணவ மாணவிகள்: 1,026


இதுவரை கல்வி உதவியாக வழங்கப்பட்ட மொத்த தொகை: ₹ 56,02,485/-.

அற்புதமான திட்டமிடல் செய்து நிகழ்வுகளை சிறப்பாக நடத்திய அனைத்து தீபம் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், தீபம் அறக் கட்டளை தொண்டர்களுக்கும் கோடானுகோடி நன்றி!!!

தொடர்ந்து தர்ம சாலையின்  அனைத்து அன்னதான பணிகளுக்கும் ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்கும் வாரி வாரி வழங்கும் மனித தெய்வங்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்!!!

தொண்டு செய்வோம் !!!

நீண்டு வாழ்வோம்!!!


தீபம் நிர்வாகம்

Thursday 3 September 2020

06.09.2020 - கல்வி உதவி - இரண்டாம்கட்ட இணையவழி நேர்காணல்

இரண்டாம்கட்ட நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட மாணவ மாணவியர்கள் (Alphabetical order)

நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்கள் கீழ்க்கண்ட படிவத்தை (Google Form05.09.2020 - காலை 9 க்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.


சந்தேகங்களுக்கு 044-22442515 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


1) நேர்காணல் நடைபெறும் நாள்: 06.09.2020 (ஞாயிற்றுக்கிழமை) நேரம் தங்களுடைய அலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் (SMS) மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. SMS பெறவில்லை என்றால் மேலே உள்ள WhatsApp எண்ணை தொடர்புகொள்ளவும். 

2) தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும்.

3) மாணவ மாணவியர்கள் இணையவழி நேர்காணலின் போது பெற்றோர் / பாதுகாவலர் உடன் இருக்க வேண்டும்.

4) Google Meet மூலம் நேர்காணல் நடைபெறும். கீழ்கண்ட இணைப்பில் சென்று தங்களுடைய அலைபேசியில் நிறுவி கொள்ளவும். https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.meetings

தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில், நேர்முக தேர்வில் கலந்துகொள்ள லிங்க் தங்களுடைய வாட்ஸ்ஆப் / மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். எனவே, மாணவ மாணவியர்கள் வழங்கப்பட்ட நேரத்தில்  10 நிமிடத்திற்கு முன்னதாகவே  இணைய இணைப்புடன் இருக்க வேண்டுகிறோம்.

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...