Wednesday 26 December 2018

25.12.2018 - கஜா புயல் மூன்றாம் கட்ட சேவை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிட
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் மூன்றாம் கட்ட நிவாரணப் பொருட்களாகிய மூன்று  டன் அரிசி, மற்றும் வேதாரண்யம் தருமச்சாலைக்கு தேவையான ₹28,000/- மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள் நேற்று (25-12-2018) நேரில் வழங்கப்பட்டது.

முன்னதாக கஜா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஆதிவாசி கிராமமான கோடியக்கரை பகுதி மக்களுக்கும், வேதாரண்யம் கடற்கரை பகுதி மக்களுக்காக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான 25 Kg அரிசியை வீதி வீதியாக, வீடு வீடாக குடிசைகளில் வாழும் மிக மிக பின் தங்கிய குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட காட்சியை படத்தில் காணுங்கள். 

மூன்றாம் கட்ட சேவை வீடியோ பதிவு: https://youtu.be/5mMjdVzt1R8




மூன்று கட்ட சேவைகளையும் காண புகைப்பட தொகுப்பு:
http://deepamtrust.org/gaja-cyclone-2018/

தீபத்தின் சேவைகளுக்கு நிதியளிக்க:
http://deepamtrust.org/donate-now/

மூன்றாம் கட்டமாகவும் பொருட்களை அருளாக மாற்றி மூன்று டன் அரிசியை  உபயமளித்த தீபத்தின் பொற்கரங்களுக்கும், வாரி வழங்கிய ஈர நெஞ்சினர்களுக்கும், தயா உள்ளம் தயவாளர்களுக்கும், நெஞ்சம் நிறைந்த நன்றியினை காணிக்கை ஆக்குகிறோம்.

மூன்றாவது கட்டமாக கஜா புயல் நிவாரணப் பணிக்கு வருகை தந்த 
1, தயவு தீபம் பாலா
2, ஜோதி சதுரகிரியார்
3, தயவு   T.V.ரமேஷ்
4, தயவு இரவிச்சந்திரன்
5, தயவு தமிழ்தூதன்
6, தயவு D.சிவா
7, தயவு வெங்கடேஷ்
8, தயவு ஜெயதீஷ் 
9, தயவு குட்டி சாரதி
10, தயவு கணேஷ் ஆகிய ஆடுகின்ற சேவடிகளுக்கும் தீபம் தனது கோடானு கோடி நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

தொடர்ச்சியாக 33 மணி நேரமாக (இரண்டு இரவு, ஒரு பகல்)கஜா புயல் மூன்றாம் கட்ட தீபத்தின் வாகனத்தை இயக்கிய தயவுமிகு வெங்கடேஷ் அவர்களின் தளராத சேவைக்கு நெஞ்சுருகி உளமாற வாழ்த்தி தலைவணங்குகிறோம்.

--
www.deepamtrust.org

Monday 24 December 2018

அரசு பதிவு பெற்ற நிறுவனமா?

அரசு பதிவு பெற்ற நிறுவனமா?
ஆம், தீபம் அறக்கட்டளை அரசு பதிவு பெற்ற சமுதாய தொண்டு நிறுவனம். அரசு பதிவு எண் - 2035/07

தீபம் அறக்கட்டளையின் நோக்கம் என்ன?

எவ்வாறு நன்கொடை அளிப்பது?
அலுவலகத்திலும், நித்ய தீப தருமசாலையிலும் நேரில் வந்து நன்கொடை அளிக்கலாம். அன்னதானத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கலாம்.

நேரில் வரமுடியாதவர்கள் அலுவலக முகவரிக்கு Deepam Trust என்ற பெயரில் காசோலை(Cheque) / வரைவோலை(DD)  அனுப்பலாம்.

தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்யலாம்.

எவ்வளவு தொகை நன்கொடை அளிக்கலாம்?
ஒருநாள் அன்னதானத்திற்கு ஆகும் செலவு இந்த பக்கத்தில்( http://deepamtrust.org/donate-now/) குறிப்பிடப்பட்டுள்ளது, மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி, etc… போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை தந்து மகிழலாம்!

நன்கொடைகளுக்கு ரசீது வழங்கப்படுமா?
வழங்கப்படும். 5 வேலை நாட்களுக்குள் தங்களுடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் ரசீது அனுப்பி வைக்கப்படும். ரசீது பெற வில்லை என்றால் 94440 73635 / 044-2244 2515 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

வருமான வரிவிலக்கு பெறலாமா?
1961 வருமான வரி சட்டம் 80G ன் படி வருமான வரிவிலக்கு பெற்ற தொண்டு நிறுவனம்.

வெளி நாடுகளில் இருந்து நன்கொடை அளிக்கலாமா?
வெளிநாட்டு பணமதிப்பில் நன்கொடையளிக்க முடியாது. ஆனால் இந்தியா பண மதிப்பில் வங்கி பரிமாற்றம் செய்யலாம்.

தங்களுடைய சேவைகளை எவ்வாறு தெரிந்து கொள்வது?
மாதந்தோறும் தீபநெறி என்ற மாதஇதழ் வெளியிடப்படுகிறது, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இணையதளம், சமூக ஊடகம், மற்றும் குறுந்தகவல் மூலம் சேவைகள் பகிரப்படுகிறது.
---

தீபத்தின் நன்கொடையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்ட ஓர் சமுதாய தொண்டு நிறுவனம் என்பது தாங்கள் அறிந்ததே.

கடந்த 11 ஆண்டுகளாக தீபத்தின் அறப்பணிகளுக்கு பொருளாக, நிதியாக, சேவதாரிகளாக உடல் உழைப்பை தந்து சேவை செய்பவர்கள் ஏராளம். 

அறக்கட்டளையின் எண்ணிலடங்கா அறப்பணிகளுக்கு, சென்னை வேளச்சேரி திரௌபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள பதிவு அலுவலகத்திலும், புத்தேரிக்கரை தெருவில் உள்ள நித்ய தீப தருமசாலையிலும், நன்கொடைகள் நேரில் பெறப்படுகிறது.
பெறப்பட்ட நன்கொடை தகவலை உடனே sms செய்தி அனுப்பி, மறுநாள் ரசீதை தபாலில் அனுப்புகிறோம்.

நேரில் வரமுடியாதவர்கள் வங்கியின் மூலம் பண பரிமாற்றம் செய்கின்றனர். பண பரிமாற்றம் செய்தவர்கள், தங்கள் விபரங்களை அனுப்பவில்லை என்றால் யார் அனுப்பியது என எங்களுக்கு தெரியாது.  தங்களுடைய தகவலை (பெயர்,முகவரி,கைபேசி எண். ஈமெயில்,) எங்களுக்கு 9444073635 என்ற எண்ணிக்கோ கீழ்கண்ட வெட்சைட் லிங்கிலோ தெரிய படுத்தினால் மட்டுமே உங்களுக்கு உடனே ரசீது அனுப்ப இயலும். 

Thanking you in Advance !

மேலும் விபரங்களுக்கு http://deepamtrust.org/donate-now/

Saturday 22 December 2018

தீபநெறி 2018 - டிசம்பர் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.


இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை 94440 73635 /  044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுபினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.






















அரசு பதிவு பெற்ற நிறுவனமா?
ஆம், தீபம் அறக்கட்டளை அரசு பதிவு பெற்ற சமுதாய தொண்டு நிறுவனம். அரசு பதிவு எண் - 2035/07

தீபம் அறக்கட்டளையின் நோக்கம் என்ன?
Please visit http://deepamtrust.org/profile/

எவ்வாறு நன்கொடை அளிப்பது?
அலுவலகத்திலும், நித்ய தீப தருமசாலையிலும் நேரில் வந்து நன்கொடை அளிக்கலாம். அன்னதானத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கலாம்.

நேரில் வரமுடியாதவர்கள் அலுவலக முகவரிக்கு Deepam Trust என்ற பெயரில் காசோலை(Cheque) / வரைவோலை(DD)  அனுப்பலாம்.

தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்யலாம்.

எவ்வளவு தொகை நன்கொடை அளிக்கலாம்?
ஒருநாள் அன்னதானத்திற்கு ஆகும் செலவு இந்த பக்கத்தில்( http://deepamtrust.org/donate-now/) குறிப்பிடப்பட்டுள்ளது, மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி, etc… போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை தந்து மகிழலாம்!

நன்கொடைகளுக்கு ரசீது வழங்கப்படுமா?
வழங்கப்படும். 5 வேலை நாட்களுக்குள் தங்களுடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் ரசீது அனுப்பி வைக்கப்படும். ரசீது பெற வில்லை என்றால் 94440 73635 / 044-2244 2515 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

வருமான வரிவிலக்கு பெறலாமா?
1961 வருமான வரி சட்டம் 80G ன் படி வருமான வரிவிலக்கு பெற்ற தொண்டு நிறுவனம்.

வெளி நாடுகளில் இருந்து நன்கொடை அளிக்கலாமா?
வெளிநாட்டு பணமதிப்பில் நன்கொடையளிக்க முடியாது. ஆனால் இந்தியா பண மதிப்பில் வங்கி பரிமாற்றம் செய்யலாம்.

தங்களுடைய சேவைகளை எவ்வாறு தெரிந்து கொள்வது?
மாதந்தோறும் தீபநெறி என்ற மாதஇதழ் வெளியிடப்படுகிறது, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இணையதளம், சமூக ஊடகம், மற்றும் குறுந்தகவல் மூலம் சேவைகள் பகிரப்படுகிறது.
---
www.deepamtrust.org

Wednesday 19 December 2018

மூன்றாம் கட்ட கஜா புயல் நிவாரணம்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 3-ம் கட்ட கஜா புயல் நிவாரணம்

பேரன்புள்ளம் கொண்ட ஆன்மநேய உடன்பிறப்புக்களே கடந்த மாதம் 15-11-2018 அன்று இயற்கை சீற்றமான கஜா புயலினால் சோழவள நாட்டையே பதம் பார்த்து டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களையே புரட்டி போட்டு ஒரு மாதம் காலம் கடந்தும் மக்களின் அன்றாட வாழ்க்கையையே  கேள்விக்குறியாக்கி, சொந்த மண்ணில் அகதிகளாக, ஆதரவற்றவர்களாக இன்றும் நம் கண் முன்னே காட்சி அளிப்பது சொல்லொண்ணா துயரமாக  இருக்கிறது. 

டெல்டா மாவட்ட மக்களின் துயரத்திலும், துன்பத்திலும் பங்கு கொண்டு பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை தீபம் அறக்கட்டளையின் மூலமாக வாரி வழங்கிய ஆன்மநேய உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து கடந்த 20-11-2018 அன்று முதல் கட்டமாகவும், 01-12-2018 அன்று இரண்டாம் கட்டமாகவும் சென்று கிராமம், கிராமமாக பயணித்து பல்லாயிரக்கணக்கான ஜீவர்களின் பசிப்பிணியை போக்கி நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு சென்னை திரும்பினோம்.









முதல் கட்ட நிவாரண பணிகளை காண https://deepamtrustvelachery.blogspot.com/2018/11/blog-post_25.html

இரண்டாம் கட்ட நிவாரணம் பணிகளை காண https://deepamtrustvelachery.blogspot.com/2018/12/02122018.html

வீடியோ பதிவை காண



தற்போது தீபம் அறக்கட்டளையின் மூலமாக மூன்றாம் கட்ட கஜா புயல் நிவாரணமாக டெல்டா நோக்கி பயணிக்க உள்ளோம். டெல்டாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் வேண்டி தீபத்திற்கு விண்ணப்பங்கள் வந்ததை அடுத்து மூன்றாம் கட்ட நிவாரணமாக பசியால் வாடிக் கொண்டு இருக்கும் குறைந்தது 200 குடும்பங்களுக்கு 25Kg அரிசி சிப்பம் வழங்க திருவுள்ளம் கொண்டோம்.

புறப்பாடு: 22.12.18 (சனி இரவு)
அரிசி தருமம் குறைந்தது : 5 டன்

தயா உள்ளம் கொண்ட கொடை வள்ளல்களே, ஈரநெஞ்சினர்களே, கடந்த முறை வாரி வழங்கியது போல் டெல்டா மாவட்ட மக்களின் தயரத்தை மனதில் கொண்டு அவர்களின் வயிற்றுப் பிணியாகிய பசிப்பிணியை போக்க 25Kg அரிசி சிப்பங்களை  வேண்டி தங்கள் அனைவரிடமும் விண்ணப்பிக்கிறோம்.

மூன்றாம் கட்டமாக, 5 டன் அரிசி சிப்பங்களை மட்டுமே எதிர்நோக்கி தங்களின் மேலான தயவை நாடும் ...

சமுதாயப்பணியே
இறைபணி
என உயிர்மூச்சாக,
இரவு பகல், ,
மழை, வெயில், புயல், ஜாதி, மதம் பாராது,
புகழ் விரும்பாது 
உழைக்கும்
உங்கள் வேளச்சேரி 
தீபம் அறக்கட்டளை

தொடர்புக்கு:
தீபம் பாலா
9444073635
www.deepamtrust.org

Sunday 2 December 2018

02.12.2018 - கஜா பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்கப்பட்டது

இயற்கை பேரிடரான கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க  பசிப்பிணி போக்கியும், பல்வேறு நிவாரண பொருட்களையும் கடந்த 21-11-2018 ம்தேதி முதல் கட்டமாக சென்று தொடர்ந்து நான்கு நாட்களாக நாகப்பட்டினத்தில் முகாமிட்டு வாரி வழங்கி உள்ளதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.



நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான டெல்டா மாவட்ட மக்களின் பசிப்பிணி நீக்கிய தீபம் அறக்கட்டளை மீண்டும்  இரண்டாம் கட்டமாக பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 6-டன் பொருட்களை எடுத்துக் கொண்டு 02-12-2018 டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்ட கஜா புயலினால் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு வட்டம், வண்டல் எனும் தீவில் கடந்த 16 நாட்களாக அங்கு வாழும் மீனவ குடும்பத்தினர் நிவாரணம் பெறாமல் படும் துன்பத்தையும், துயரத்தையும் கண்டு 3- முறை படகில் 6-டன் எடையுள்ள பொருட்களை சுமந்து 2- கிலோ மீட்டர் கடல் நேரில் மிதந்து சென்று பார்த்து அறப்பணிகளை ஆற்றி, களப்பணியில் இறங்கியபோது வீடின்றி, உடையின்றி, உடமைகளின்றி, உறக்கமின்றி தவித்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சுமார் ₹2500/- மதிப்புள்ள  பொருட்களான 

1.மெத்தை விரிப்பு
2.தலையணை
3.20 லிட் பிளாஸ்டிக் பக்கெட்
4. பிளாஸ்டிக் டப்பா
5. 10 கிலோ அரிசி
6. ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய மூட்டை
7. தார்ப்பாய்
8. தொடர்ந்து பத்து நாட்கள் எரியக்ககூடிய மெகா சைஸ் மெழுதுவர்த்தி
9. கொசுவலை
10. சர்ட், போர்வை, டவல் அடங்கிய புத்தாடைகள்
11. மினரல் வாட்டர்
12.பள்ளிக்கூட குழந்தைகளுக்கான ஸ்கூல் பேக், நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, சாமண்ட்ரி பாக்ஸ் அடங்கிய பொருட்களை வழங்கி வந்தோம்








எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
 தம்உயிர்போல் எண்ணி உள்ளே
 ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
 யாவர்அவர் உளந்தான் சுத்த
 சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
 இடம்எனநான் தெரிந்தேன் அந்த
 வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
 சிந்தைமிக விழைந்த தாலோ

என்ற திருஅருட்பாவின் வைர வரிகளுக்கு ஏற்பவும், 

"உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க"

"எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி" 

என்ற  அகவலின் பொன்னான வரிகளுக்கு ஏற்ப டெல்டா மாவட்ட மக்களுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்ட முடிவு செய்த தீபம் அறக்கட்டளையின் மூலம் தானேபுயல், சென்னை பெருமழை வெள்ளம், வார்தா புயல் போன்ற இயற்கை சீற்றங்களுக்கு பொருளாகவும், கருணை நிதியாகவும் வாரி வழங்கியது போல்  தற்போது கஜா புயலையும் எதிர் கொண்டு தீபம் அறக்கட்டளையின் மூலம் பொருளாகவும், கருணை நிதியாகவும் வாரி வழங்கிய மனிதநேய காவலர்களையும், இரக்கமே குணமாக கொண்டவர்களையும, உயிர்நேய தொண்டர்களையும், ஆன்மநேய உடன்பிறப்புக்களையும், வாரிவாரி வழங்கிய கொடை வள்ளல்களையும், தொடர்ந்து ஒரு வார காலமாக களப்பணி ஆற்றிய ஆடுகின்ற சேவடிகளையும் மனமார, இதமார, உளமார, வாயார வாழ்த்தி வாழ்த்தி அவர்தம் தொண்டிற்கும், சேவைக்கும், தர்மத்திற்கும் தீபம் தலை வணங்குகிறது.

அருட்பெருஞ்ஜோதி 
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

தீபம் அறக்கட்டளை 
9444073635

Friday 30 November 2018

01.12.2018 - கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணப்பொருட்கள்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று இரவு (01.12.2018)
7 டன் இரண்டாம்  கட்ட நிவாரணப்பொருட்கள் செல்கின்றன.





இதுவரை இந்த அற்புத சமுதாயப்பணிக்கு மனமுவந்து நிதியாகவும், பொருளாகவும் அள்ளிக்கொடுத்த பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்...


உதவ நினைப்பவர்கள் உதவிக்கரம் நீட்டலாம்.

நிதி வேண்டும் ஏழைக்கு

Let Dharma Spread from Door to Door.

For Donation thro Bank Transfer: SBI, IIT Madras, Current A/C No.30265475129, DEEPAM Trust, IFS:SBIN0001055;

by cheque i.f.o. DEEPAM TRUST Velachery

After transfer, pl send your details such as address, email ID, purpose, date of AD etc.9444073635

DEEPAM TRUST
Velachery
www.deepamtrust.org
Ours is a Govt. Regd. 80G Exempted NGO

வள்ளலார் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் ஏன் வாடினார்? | தீபம் அறக்கட்டளை | ...

தயவினால் வள்ளலார் பெற்றது என்ன? | தீபம் அறக்கட்டளை | பிரபாவதி அம்மையார்

கடவுளுக்கு யாரை பிடிக்கும்? | தீபம் அறக்கட்டளை | பிரபாவதி அம்மையார்

ஜீவகாருண்யத்திற்கு எல்லாம் கட்டுப்படும் | தீபம் அறக்கட்டளை | பிரபாவதி அம...

ஜீவகாருண்யம் செய்பவர்களுக்கு நவ கோள்களும் | தீபம் அறக்கட்டளை | பிரபாவதி ...

ஜீவகாருண்யம் என்பது என்ன? | தீபம் அறக்கட்டளை | பிரபாவதி அம்மையார்

இயற்கை யாருக்கு கட்டுப்படும்? | தீபம் அறக்கட்டளை | பிரபாவதி அம்மையார்

வள்ளலார் சாதி பெயரை குறிப்பிட்டுள்ளாரா | தீபம் அறக்கட்டளை | பிரபாவதி அம்...

தீபாவளி என்றால் என்ன | தீபம் அறக்கட்டளை | பிரபாவதி அம்மையார்

ஆறாவது அறிவு ஏன் | தீபம் அறக்கட்டளை | பிரபாவதி அம்மையார்

அன்பு காட்டினால் இறைவன் அருளை பெறலாமா | தீபம் அறக்கட்டளை | பிரபாவதி அம்ம...

Wednesday 28 November 2018

27.11.2018 - வடலூரில் சத்திய அன்ன தருமச்சாலையில் 62 வது மாத சேவை









தொடர்ந்து 62 மாதங்களாக மாத பூச நாளில் வடலூர் சத்ய தருமச்சாலையில் தீபம் அறக்கட்டளையின் தொண்டு...

இன்று பூச நாளில்
வடலூர் சத்ய தருமச்சாலையில் தீபம் சேவடிகளின் அன்னதான திருப்பணியின் அற்புத காட்சி...

தொண்டு செய்பவர் கடவுளில் பாதி...

Tuesday 27 November 2018

01.12.2018 - மாதாந்திர சன்மார்க்க சொற்பொழிவு

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின்  நித்ய தீப தருமச்சாலையில் மாதாந்திர முதல் சனிக்கிழமை சிறப்பு சன்மார்க்க  சொற்பொழிவு




நாள்: 01-12-2018
நேரம்: மாலை 6-00 மணிமுதல்
தலைப்பு: ஆன்மாவை மறைக்கும் மாயாதிரைகள்
உரையாற்றுபவர்: சன்மார்க்க சீலர்,தயவுமிகு சு.குமரேஷ் அவர்கள்


சொற்பொழிவு நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரை தெரு
வேளச்சேரி, சென்னை-600042
(தண்டீஸ்வரம் சிவாலயம் கிழக்கு மாடத்தெரு)

குறிப்பு: நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கவுள்ளதால் அனைவரும் முன்கூட்டியே வருகைதந்து  ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.சொற்பொழிவு முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும்.

அனைவரும் வருக...
அருளமுதம் பெறுக...

அன்புடன் அழைக்கும்...
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
9444073635
04422442515
www.deepamtrust.org


கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம்

இயற்கை பேரிடரான கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க  பசிப்பிணி போக்கியும், பல்வேறு நிவாரண பொருட்களையும் கடந்த  21-11-2018ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களாக நாகப்பட்டினத்தில் முகாமிட்டு வாரி வழங்கி உள்ளதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.




மூன்று விஷயங்கள் நம்மை இரண்டாம் கட்ட நிவாரணப் பணி செய்ய தூண்டியுள்ளது.

1) பாதிப்புகள் மிக மிக அதிகம். மக்கள் உதவிகோரி தெருக்களில், தெருமுனைகளில் கையேந்தி நிற்பது.

2) நமது அன்னதான வாகனம் உள்ளடக்கிய கிராமங்களின் தெருமுனையில் அன்னமளிக்க நின்றபோது பெருமழை கொட்டிக்கொண்டிருந்தது. அன்னதான வாகனத்தைப் பார்த்ததும் மழையில் நனைந்துகொண்டே குழந்தைகளும், வயதானவர்களும் கையில் பாத்திரங்களோடு ஓடி வந்த காட்சி இன்னும் கண்முன்னே வந்துகொண்டேயிருக்கிறது.

3) இரவு நேரம். எங்கும் கும்மிருட்டு. தீபத்தின் அன்னதான வாகனம் பாதிக்கபட்ட கிராமத்தில் வீடுவீடாக மெகாபோனில் யாரும் பசியோடு இருக்கிறீர்களா என்று கேட்டுக்கொண்டே செல்கிறது.எல்லா வீடுகளிலிருந்தும் மக்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெளியே வந்து உணவு வாங்கிய காட்சி கண்முன்னே நிற்கிறது.

டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்ட கஜா புயலினால் உலகிற்கே சோறு போட்டு வாழ வைத்த டெல்டா மாவட்ட மக்கள் படும்  துன்பத்தையும், துயரத்தையும் வார்த்தைகளால் சொல்லி மாளாது. நாம் நேரில் சென்று அறப்பணிகளை ஆற்றி, களப்பணியில் இறங்கியபோது வீடின்றி, உடையின்றி, உடமைகளின்றி, உறக்கமின்றி அவதிப்பட்டதை கண்களால் கண்டு கண்ணீராய்த் தான் வடிக்க முடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. மக்கள் படும் வேதனையும், திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் போதித்த ஜீவகாருண்யத்தையும் கருத்தில் கொண்டு தீபம் அறக்கட்டளையின் சார்பில் இரண்டாம்  கட்ட கஜா புயல் நிவாரணமாக விரைவில் புறப்பட இருக்கிறோம்

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
 தம்உயிர்போல் எண்ணி உள்ளே
 ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
 யாவர்அவர் உளந்தான் சுத்த
 சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
 இடம்எனநான் தெரிந்தேன் அந்த
 வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
 சிந்தைமிக விழைந்த தாலோ

என்ற திருஅருட்பாவின் வைர வரிகளுக்கு ஏற்பவும், 

"உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க"

"எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி"

என்ற  அகவலின் பொன்னான வரிகளுக்கு ஏற்ப டெல்டா மாவட்ட மக்களுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்ட தீபம் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. தானேபுயல், சென்னை பெருமழை வெள்ளம், வார்தா புயல் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொண்ட தீபம் தற்போது கஜா புயலையும் எதிர் கொள்கிறது. 

இரண்டாம் கட்ட கஜா புயல் நிவாரணமாக டெல்டா மாவட்ட மக்கள் நிம்மதியாக உறங்குவதற்கு மிகமிக அவசிய, அத்தியாவசிய தேவையான 
2000 போர்வைகள்
2000 கொசுவலைகள்
500 டார்ச் லைட்டுகள்
500 தார்பாய்கள்
கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறோம்.

தயா உள்ளம் கொண்ட மனிதநேய காவலர்களே, உயிர்நேய தொண்டர்களே, ஆன்மநேய உடன்பிறப்புக்களே, தீபம் அறக்கட்டளையின் அருட்பணிக்கு வாரி வழங்கும் கொடை வள்ளல்களே, ஈர நெஞ்சினர்களே தாங்களும் இதில் பங்கு  பெற்று 
100 போர்வைகள் & கொசுவலைகள்
50 போர்வைகள் & கொசுவலைகள்
என பாகம் தந்து ஆன்மலாபம் அடைய தங்களை அன்புடன் வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.

போர்வைகள் கொசுவலைகள் சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்:
தீபம் பாலா: 9444073635
ஜோதி சதுரகிரியார்: 9789494009

Bank Transfer:
State Bank of India 
IIT Branch 
Current A/c.No: 30265475129
IFSC:SBI0001055

தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு 80G பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு

வங்கி பரிமாற்ற தகவலை 9444073635 என்ற கைபேசி எண்ணிற்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

தங்களின் மேலான தயவையும், பேராதரவினையும் எதிர்நோக்கி 
உங்கள் வேளச்சேரி 
தீபம் அறக்கட்டளை
30, திரௌபதி அம்மன் கோவில் தெரு 
வேளச்சேரி, சென்னை- 600042
(ஆன்மநேய அறப்பணியில் 21-ஆண்டுகளாக)
www.deepamtrust.org
admin@deepamtrust.org

Sunday 25 November 2018

டெல்டா மாவட்டங்களில் தீபத்தின் சேவை

இயற்கை சீற்றங்களில் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களையே கஜா புயல் புரட்டி போட்டுட்டுள்ளதை நாமனைவரும் அறிவோம்...

தானே புயல், வார்தா புயல், சென்னை பெருமழை வெள்ளத்தில் தீபம் அறக்கட்டளை சேவை செய்தது போல் தற்போது கஜா புயலையும் தீபம் எதிர் கொண்டது.






சென்னையில் இருந்து அன்னதான பொருட்களுடன்   பல்வேறு நிவாரண பொருட்களையும் அரிசி - 200 மூட்டைகள் (5 டன்),
IIT T-ஷர்டுகள்,
டவல்கள்,
மெழுகுவர்த்திகள்,
பிரட்டுகள்,
பிஸ்கட்டுகள்,
வாட்டர் பாட்டில்கள்,
வாட்டர் பாக்கட்டுகள்,
போர்வைகள்,
ஒரே சமயத்தில் 5000 பேருக்கு சமைக்க தேவையான சமையல் பாத்திரங்கள்,
6 அடுப்புகள்,
15 கேஸ் சிலிண்டர்களை
சுமந்து கொண்டு
கடந்த 21-11-2018 அன்று இரவு (புதன்கிழமை) நாகப்பட்டினம் புறப்பட்டது.



நாகப்பட்டினம் சன்மார்க்க சங்க தருமச்சாலையில் உடனடியாக முகாமிட்டு அன்னதானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு சமையல் வேலைகள் விரைவுபடுத்தப்பட்டது.

கடந்த 21 ம் தேதி முதல் தொடர்ந்து இரவு பகலாக உணவுகள் தயாரிக்கப்பட்டு இரவு பகல் பாராது நாகப்பட்டினம் சுற்று வட்டார பகுதிகளிலும், வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளிலும் தொடர்ந்து நான்கு நாட்களாக தடையின்றி உணவு, உடை, மற்றும் பல்வேறு நிவாரண பொருட்களான மெழுகுவர்த்தி புத்தாடைகள், டவல்கள், டி-சர்ட்,  போர்வைகள் வழங்கப்பட்டன.



தீபம் அறக்கட்டளையின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகின்ற சேவடிகளும்,  நாகை மாவட்ட 20 க்கும் மேற்பட்ட  சன்மார்க்க ஆடுகின்ற சேவடிகளும் இரவு பகல் பாராமல் தொடர்ந்து சமையல் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து கிராம, கிராமங்களாக பசித்தவர்களை தேடிச்சென்று வாகனங்கள் மூலம்  அன்னதர்மம் வழங்கப்பட்டது.

மிகமிக மோசமான உருக்குலைந்து போன வீடுகள் மிகமிக அதிகம்.  கண்ணீர் விட்டு கதறி அழுதவர்கள் அதிகம். 
ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்  உதவிகள் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவை மிகமிக  அதிகம்.
அரசாங்கம் மட்டும் தான் அவர்களின் முழு தேவைகளை பூர்த்தியை செய்ய முடியும்.

பல இடங்களில் பல்வேறு வகையான உதவிகளை செய்த போது பல பொருட்கள் இல்லாமல் ஒன்றும் செய்வதறியாது திகைத்து நின்றோம்.

பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அன்னதான பொருட்கள், நிவாரணப் பொருட்களை சென்னையில் இருந்து  கொண்டு சென்று இருந்தும், புதுச்சேரியில் இருந்து 1 டன் அரிசி  மூட்டைகள் உள்பட நிவாரண பொருட்கள், கடலூரில் இருந்தும் நிவாரண பொருட்கள், ஈரோட்டில் இருந்து அரிசி, போர்வைகள்,
மதுரையில் இருந்து  நிவாரண பொருட்கள் தீபம் அறக்கட்டளைக்கு வந்து குவிந்தது மகிழ்ச்சி அளித்தது.



தொடர்ந்து நாகப்பட்டினத்தை சுற்றி அன்னதானமும், புதுக்கோட்டையை சுற்றி உள்ள வடகாடு உள்பட பல கிராமங்களில் 30-40 முகாம்கள் மூலமும், கிராமம், கிராமமாக, வீடு வீடாக இரவில், இருட்டில், உணவும், மெழுகுவர்த்திகளும் தந்தபோது, தீபமும் ஆயிரக்கானவர்களில் இல்லங்களில் விளக்கேற்றிய உணர்வும், நாமும் புயலால் பாதிக்கப்பட்ட சில ஆயிரம் குடுபங்களுக்கு உதவ முடிந்ததே என்ற நிறைவோடு
இன்று காலை சென்னை திரும்பினோம். 

பெரும்பாலான நேரங்களில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமலும், இரவு பகல் பாராமலும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

சமையலுக்கு தேவையான காய்கறிகளை பற்றாக்குறை ஏற்பட்ட போது நாகப்பட்டினம் மார்க்கெட்டில் மீண்டும் மீண்டும் டாடா ஏஸ் வாகனம் முழுவதும் காய்கறிகள் வாங்கப்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் கண்ணீரை துடைக்க முடியாமல் பல சமயங்களில் விக்கித்துப் போய் நின்றோம்.

தீபம் அறக்கட்டளை தனது பணியை செவ்வனே செய்து வள்ளல்பெருமான் கண்ட ஜீவகாருண்ய புரட்சியை மீண்டும் நிலை நாட்டியுள்ளது.

பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வாரி வழங்கிய கொடை வள்ளல்களையும், (நிதியாக பொருளாக உதவியவர்களுக்கு  நன்றி செய்தியும், பதிவு செய்த சில படங்களையும், வீடியோ காட்சிகளையும் தனியாக அனுப்ப உள்ளோம்.) நான்கு நாட்களாக இரவு பகல் பாராமல்  தொய்வின்றி சமையல் பணிகளை செய்த ஆடுகின்ற சேவடிகளுக்கும் தீபம் அறக்கட்டளை தனது நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.



டெல்டா மாவட்ட மக்களின் துயரை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் கண்ணீருடன் டெல்டா மாவட்ட மக்களை பிரியமுடியாமல் பிரியாவிடை பெற்றோம்.

அடுத்த கட்ட நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வந்தாலும் மீண்டும் டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க தீபம் தொடர்ந்து பாடுபடும்.

புகைப்படங்களை காண: Gaja 2018 Photos

வீடியோ பதிவை காண: Click here



என்றென்றும் ஆன்மநேய அறப்பணியில் 
உங்கள் வேளச்சேரி 
தீபம் அறக்கட்டளை
21 ஆண்டுகளாக சமுதாயப்பணியில்...
9444073635
www.deepamtrust.org

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...