Wednesday 26 June 2019

தீபநெறி 2019 - ஜூன் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 11 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.


இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை 94440 73635 /  044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுபினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.






















Thursday 20 June 2019

தானம் தருமம்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பொருள் பெற்றான்  வைப்புழி


தானம் என்பது, ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து செய்வது தானமாகும். அதாவது தமது ஊழ் வினைகளைகளால் படும் அவத்தையைப் போக்குவதற்காக செய்யும் பரிகாரம் நிமித்தமோ !
அல்லது அடுத்தப் பிறவிக்கான புண்ணியத்தை சேர்த்திட வேண்டும் என்று புண்ணியபலனை எதிர்பார்த்தோ !
மற்றைய உயிர்களுக்கு செய்கின்ற செய்கை தானம் என்பதாகும்.
   
தருமம் என்பது எவ்விதப் பலனையும் எதிர்பார்க்காமல் கடவுளால் சிருட்டிக்கப்பட்ட எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் கண்டு அவ்வுயிர்களின் துன்பத்தை தனது துன்பமாகக்கண்டு, அவற்றின்மீது காருண்யம் கொண்டு, உயிர்இரக்க ஆன்மதயவோடு மற்றைய உயிர்களுக்கு எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் இயற்கை கருணையோடு உபகாரம் செய்கின்றது தருமம் ஆகும்.
   
 நமது வள்ளல் பெருமானின் வருகைக்கு முன்பு இவ்வுலகம்  "அன்னதானம்" செய்கின்ற பல்வேறு சத்திரங்களையும் சாலைகளையும் கண்டிருந்தது .
       
ஆனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இவ்வுலகிற்கு வருவிக்கவுற்ற நமது வள்ளல் பெருமான்  இவ்வுலக உயிர்களின் துயர்தவிர்க்க அவதரித்த மகாபுருஷர் என்பதால் முதன்முதலில் இவ்வுலகில் அற்றார் அழிபசிதீர்த்திட "அன்னதருமம்" செய்வதற்கு தருமசாலை அமைத்தார்கள்.

சென்னை வேளச்சேரி தீபம் அறக் கட்டளை சார்பாக நடைபெறும் 20 தரும சாலைகளில் தினமும் அருட் கஞ்சி அன்போடு பரிமாறப்படும் அற்புத காட்சி ...






கொடுப்பதும் இறைவன் ...
அதை குடிப்பதும் இறைவன்...

வாழ்க வாழ்க தர்மம் வாழ்க!!! வாழ்க வாழ்க தொண்டு வாழ்க!!!

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

Educational Help 2019 | DEEPAM TRUST

16.06.2019 - கல்வி உதவி

அன்புடையீர்,

வணக்கம்! வந்தனம் !

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி பெருங்கருணையினாலும், வாரி வழங்கும் தயா உள்ளம் கொண்ட தங்களின் பெருந்தயவினாலும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 10 ஆம் ஆண்டு (2019-2020 ம் கல்வி ஆண்டிற்கான) கல்வி உதவிக்கான நேர்காணல் கடந்த 8.6.2019 சனிக்கிழமை சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச் சாலையில் காலை 
பேராசிரியர் முத்துகுமரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன் மூலம் 92 ஏழை மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

16-06-2019 காலை 9-00 மணிமுதல் சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மச்சாலையில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. 

மருத்துவர் செந்தில்நாதன் அவர்கள் தலைமையில், பேராசிரியர் முத்துகுமரன் அவர்கள் முன்னிலையில் தீபத்தின் தயவாளர்களால் வழங்கப்பட்ட 4,49,950/- (நாலரை லட்சம் ரூபாய்) கருணைநிதியை  முதல் கட்டமாக 92 கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. வாரி வழங்கிய தயா உள்ளம் கொண்ட  ஆன்மநேய சகோதர, சகோதரிகளுக்கு தீபம் அறக்கட்டளை தனது நெஞ்சம் நிறைந்த  நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.












இந்த நிகழ்ச்சியில் வடலூர்
குறிஞ்சிப்பாடி மூத்த சன்மார்க்க சான்றோர் தயவுமிகு லோகநாதன் அய்யா சென்னை இராமாபுரம் பகுதி சன்மார்க்க பொறுப்பாளர் தயவுமிகு குமரகுரு அய்யா சென்னை திருப்பெரும்புதூர் சீட் ஆதரவற்ற மாணவர்களின் காப்பக நிறுவனர்  பழனிச்சாமி அய்யா தேவதானம்பேட்டை  சன்மார்க்க சங்க பொறுப்பாளர் அண்ணாமலை அய்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்வி உதவித்தொகை முடிந்தவுடன் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. வெளியூரில் இருந்து வருகை தந்தவர்களுக்கு பயணச்சலுகை வழங்கப்பட்டது.

மேலும் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் கட்டமாக கல்வி உதவித்தொகை ஜீலை மாதம் இரண்டாவது ஞாயிறன்று வழங்க திருவுள்ளம் கொண்டோம். மிகவும் பின் தங்கிய இந்த நாற்பது மாணவச் செல்வங்களில் ஒருவரை தங்கள் பிள்ளைகளாக கருதி அவர்களின் எதிர்கால வாழ்விற்கு ஒளியேற்றிட கல்வி(கருணை) நிதியை வாரி வழங்கி தாங்களும் பாகம் பெற வேண்டி அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம்:
நிறுவனர் & நிர்வாகிகள்
தீபம் அறக்கட்டளை
(அரசு பதிவு பெற்ற ஓர் ஆன்மநேய அறத்தொண்டு நிறுவனம்)
வேளச்சேரி, சென்னை-42
தொடர்புக்கு:
9444073635
044-22442515

Friday 14 June 2019

பத்தாம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி பெருங்கருணையினாலும், வாரி வழங்கும் தயா உள்ளம் கொண்ட தங்களின் பெருந்தயவினாலும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 10 ஆம் ஆண்டு (2019-2020 ம் கல்வி ஆண்டிற்கான) கல்வி உதவிக்கான நேர்காணல் கடந்த 8.6.2019 சனிக்கிழமை சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச் சாலையில் காலை 
 பேராசிரியர் முத்துகுமரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

86 ஏழை மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
===========================
நாள்: 16.6.2019 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9-00 மணிமுதல் மதியம் 12-00 மணிவரை
தலைமை:
 மருத்துவர் செந்தில்நாதன் Dr.CHENTHILNATHAN (FOUNDER, EXCELLENT HOSPITAL) VELACHERY, CHENNAI
இடம்: நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரை தெரு
வேளச்சேரி, சென்னை-42
===========================
Estimated Cost of this Project is:
Rs.6 to 7 lakhs.

தீபம் அறக்கட்டளை மூலம் இதுவரை கல்வி உதவி பெற்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 881.

இதுவரை தரப்பட்ட இலவச கல்வி உதவி மொத்த தொகை ரூ 49 லட்சம்.

இந்த செய்தியை கண்ணுறும் நன்கொடையாளர்கள், ஒவ்வொரு தயா உள்ளம் கொண்ட, கருணையுள்ள, சமுதாய நலம் விரும்பிகள் ஒவ்வொரு மாணவனின் மாணவியின் கல்விக்கு ஒளியேற்றி, அவர்களின் வாழ்வில் வசந்தம் உண்டாக, வாழ்வு மேம்பட தாங்களும் பாகம் பெற்று குறைந்தது ஓர் ஏழை மாணவி அல்லது மாணவரை தங்கள் பிள்ளைகளாக பாவித்து, வறுமையின் இருள் நீக்கும் ஒளியாய், வழியாய் கருணை(கல்வி)நிதியை கல்வி கட்டணம் செலுத்துவதற்கு வாரி வழங்கிட வேண்டுமாய் அன்புடன் விண்ணப்பிக்கின்றோம்.
==========================
கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு தங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
சென்னை வேளச்சேரி
- This Body is to Serve Others
9444073635
www.deepamtrust.Org


Monday 10 June 2019

பத்தாம் ஆண்டு கல்வி உதவித்தொகை நேர்காணல் விழா (07.06.2019)







எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி பெருங்கருணையினாலும், வாரி வழங்கும் தயா உள்ளம் கொண்ட தங்களின் பெருந்தயவினாலும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 10 ஆம் ஆண்டு (2019-2020 ம் கல்வி ஆண்டிற்கான) கல்வி உதவிக்கான நேர்காணல் நேற்று 8.6.2019 ஞாயிற்றுக்கிழமை சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச் சாலையில் நடைபெற்றது. 
===========================
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பில் நன்றாக தேர்ச்சி பெற்ற  84 கிராமப்புற வறுமையில் வாடும் ஏழை எளிய மாணவ மாணவிகள் நேர்காணலில் பெற்றோர்களுடன் கலந்து கொண்டார்கள். 
வருகை தந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் வயிறார அன்பான அன்னம் பாலிக்கப்பட்டது. வெளியூரிலிருந்து வந்திருந்த மாணவ மாணவர்களுக்கு conveyance கொடுக்கப்பட்டது. 
இதோ சில காட்சிகள் ...
===========================
நேர்காணல் நிகழ்வை மூன்று குழுக்களாக மிகவும் சீரும் சிறப்புற அற்புதமாக
நிகழ்த்திய 
பேராசிரியர் முத்துக்குமார் அவர்களையும், அவரை சார்ந்த குழு உறுப்பினர்களையும் 
தீபம் நன்றியோடு வாழ்த்தி மகிழ்கிறது.

தாயை இழந்த,
தந்தையை இழந்த,
அல்லது இருவரையும் இழந்த மாணவ மாணவிகள், 
படிப்பதற்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்கு 
மிகவும் வறுமை நிலையில் உள்ளதை நேர்காணல் உணர்வுபூர்வமாக உணர்த்தியது.
மேலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கூலி வேலை செய்தும், வீடுகளில் பத்து பாத்திரங்களை தேய்த்தும்,
சித்தாள் வேலை செய்தும், தங்களுடைய குழந்தைகளை 
படிக்க வைக்க முயற்சிப்பது,
கஷ்டப்படுவது, தீபம் நேர்காணலில் கண்ட உண்மை காட்சியாகும்.
===========================
அப்படி பாதிக்கப்பட்ட ஏழை மாணவ மாணவிகள் வாழும் இந்த சமுதாயத்திற்கு உதவுவதற்கு,
அவர்களை படிக்க வைப்பதற்கு,
கல்விக் கட்டணம் செலுத்துவதற்கு,
உதவிகரம் நீட்ட, தீபம் அறக்கட்டளையானது தயா உள்ளம் கொண்ட தங்களிடம் கல்வி உதவிக்கான கருணை நிதியை வேண்டி இருகரம் கூப்பி தங்களிடம் விண்ணப்பிக்கின்றோம். 
===========================
 வரும் 16.6.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று  கல்வித் தொகை உதவியை காசோலையாக வழங்க தீபம் முடிவு செய்துள்ளது.
===========================
Estimated Cost of this Project is:
Rs.6 to 7 lakhs.
(இதுவரை தீபம் கல்வி உதவியாக  பெற்ற நன்கொடை ரூபாய் 3 லட்சம்)
இந்த செய்தியை கண்ணுறும் நன்கொடையாளர்கள், ஒவ்வொரு தயா உள்ளம் கொண்ட, கருணையுள்ள, 
சமுதாய நலம் விரும்பிகள் ஒவ்வொரு மாணவனின் மாணவியின் கல்விக்கு ஒளியேற்றி, அவர்களின் வாழ்வில் வசந்தம் உண்டாக, 
வாழ்வு மேம்பட தாங்களும் பாகம் பெற்று குறைந்தது *ஓர் ஏழை மாணவி அல்லது மாணவரை தங்கள் பிள்ளைகளாக பாவித்து, வறுமையின் இருள் நீக்கும் ஒளியாய், வழியாய் கருணை(கல்வி)நிதியை 
கல்வி கட்டணம் செலுத்துவதற்கு
வாரி வழங்கிட வேண்டுமாய் அன்புடன் விண்ணப்பிக்கின்றோம்.
==========================
*அனைத்து மாணவர்களின் கல்வித் தொகை முழுவதும் ஒரே நபர் ஏற்றுக் கொண்டாலும் தீபம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. 
ஏழை மாணவர்களின் கல்விக்காக இதுகாறும் பல ஆண்டுகளாக...
தொடர்ந்து கல்வி உதவியை நன்கொடையாக வழங்கிக் கொண்டும்..., 
இந்த ஆண்டும் நன்கொடையாக உதவிக்கரம் நீட்டிய, நீட்டக்கூடிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களை  தீபம் நன்றி கூறி மகிழ்கிறது. தங்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்கி மகிழ்கிறது.
==========================
வாழ்க சமுதாயம் !
வாழ்க சமுதாயத்தில் உள்ள ஏழை மக்கள் !!!

வாழ்க வாழ்க
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!!

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் !!!
காண வாருங்கள் 16.6.2019 ஞாயிறு அன்று சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மசாலையில்... 

வாழ்த்துக்களுடன்...
நிறுவனர் & நிர்வாகிகள்
தீபம் அறக்கட்டளை
22 வது ஆண்டை நோக்கி வீறுநடை போடும் இது ஓர் அரசு பதிவு பெற்ற, 80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட ஓர் சமுதாய அறத்தொண்டு நிறுவனம்...!
தொடர்புக்கு: 9444073635

தீபம் அறக்கட்டளையின் அனைத்து அறப்பணிகளையும் காண
website:
www.deepamtrust.org

Tuesday 4 June 2019

ஓர் ஏழை தாய்க்கு ஆறு ஆண்டுகளாக மருத்துவ உதவி (03.06.2019)



தாய் டெல்லி பாய் மிகவும் ஏழை. அனகாபுத்தூரில் ஒரு சிறு குடிசையில் வாழ்கிறார்.மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர். 30 வயதான மகனுக்கோ இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன. தீபம் அறக்கட்டளை கடந்த 6 ஆண்டுகளாக  சேகர் அவர்களுக்கு டயாலிசிஸ் மருத்துவ உதவியாக Rs.5000 பொற்காசுகள் மாதந்தோறும் காசோலையாக கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

இன்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் முன்பாக  பிரார்த்தனை செய்து மருத்துவ உதவி தரப்பட்டபோது...

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்

தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர், மாதம் தோறும் Rs.9000 பொற்காசுகள் அள்ளிக் கொடுக்கும் வள்ளல்,நிரந்தர அன்ன புரவலர், 30 வயது சேகர் என்ற இளைஞனுக்கு தொடர்ந்து ஆறு வருடங்களாக மருத்துவ உதவி செய்து உயிர் காக்கும் உத்தமர் IIT பேராசிரியர் S ராமநாதன் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி!!!

நிறுவனர் 
தீபம் அறக்கட்டளை

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...