Friday 31 May 2019

இலவச சித்த மருத்துவ முகாம்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
~~~~~~~~
கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.
~~~~~~~~
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த
யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர்
சிவம் V.P.,மாதேஸ்வரன்
அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.

நாள்: 02-06-2019 ஞாயிறு
நேரம்: காலை 9-00 மணிமுதல் மதியம் 1-00 மணிவரை

இலவச மருத்துவ உதவி முதலில் வரும் 30 பேருக்கு மட்டும்

மருத்துவ முகாம் நடைபெறும் இடம்:

நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரைத் தெரு,
தண்டீஸ்வரம் கோவில் அருகில்,
வேளச்சேரி, சென்னை-42
044-22442515, 9444073635

அனைவரும் வருக!
ஆரோக்கிய நலம் பெறுக!

Health is Wealth
நோயில்லா பாரதம் படைப்போம் ... இயற்கை வழியில்

Wednesday 29 May 2019

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சன்மார்க்க சொற்பொழிவு

நாள்:  01-06-2019
நேரம்: மாலை 6-30 மணி
=========================
இடம்: நித்ய தீப தர்மச்சாலை
7/8, புத்தேரிக்கரை தெரு
வேளச்சேரி, சென்னை-42
=========================
தலைப்பு: அருட்பா அமுதம்
உரையாற்றுபவர்: சன்மார்க்க சீலர்,  தயவுமிகு அருட்பா அருணாசலம் அவர்கள்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.
 புதுச்சேரி
=========================
நிகழ்ச்சி முடிந்தவுடன் அன்னதர்மம் நடைபெறும்.
=========================
குறிப்பு:
நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்குவதால் நிர்வாகிகள் மற்றும் அனைவரும் முன்கூட்டியே வருகை தந்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.
=========================
அனைவரும் வருக!
அருளமுதம் பெறுக!

Wednesday 22 May 2019

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பொருள் பெற்றான் வைப்புழி














தானம் , தருமம்

             தானம் என்பது,
ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து செய்வது தானமாகும்.
அதாவது தமது ஊழ் வினைகளைகளால் படும் அவத்தையைப் போக்குவதற்காக செய்யும் பரிகாரம் நிமித்தமோ !
அல்லது அடுத்தப் பிறவிக்கான புண்ணியத்தை சேர்த்திட வேண்டும் என்று புண்ணியபலனை எதிர்பார்த்தோ !
மற்றைய உயிர்களுக்கு செய்கின்ற செய்கை தானம் என்பதாகும்.
   
         தருமம் என்பது எவ்விதப் பலனையும் எதிர்பார்க்காமல் கடவுளால் சிருட்டிக்கப்பட்ட எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் கண்டு அவ்வுயிர்களின் துன்பத்தை தனது துன்பமாகக்கண்டு, அவற்றின்மீது காருண்யம் கொண்டு, உயிர்இரக்க ஆன்மதயவோடு மற்றைய உயிர்களுக்கு எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் இயற்கை கருணையோடு உபகாரம் செய்கின்றது தருமம் ஆகும்.
   
 நமது வள்ளல் பெருமானின் வருகைக்கு முன்பு இவ்வுலகம்  "அன்னதானம்" செய்கின்ற பல்வேறு சத்திரங்களையும் சாலைகளையும் கண்டிருந்தது .
       
ஆனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இவ்வுலகிற்கு வருவிக்கவுற்ற நமது வள்ளல் பெருமான்  இவ்வுலக உயிர்களின் துயர்தவிர்க்க அவதரித்த மகாபுருஷர் என்பதால் முதன்முதலில் இவ்வுலகில் அற்றார் அழிபசிதீர்த்திட "அன்னதருமம்" செய்வதற்கு தருமசாலை அமைத்தார்கள்.

சென்னை வேளச்சேரி தீபம் அறக் கட்டளை சார்பாக நடைபெறும் 20 தரும சாலைகளில் தினமும் அருட் கஞ்சி அன்போடு பரிமாறப்படும் அற்புத காட்சி ...

கொடுப்பதும் இறைவன் ...
அதை குடிப்பதும் இறைவன்...

வாழ்க வாழ்க தர்மம் வாழ்க!!! வாழ்க வாழ்க தொண்டு வாழ்க!!!

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

ஆழ்குழாய் நீரின் மூலம் சிறுவளையம் கிராம மக்கள் தாகம் தணிப்பு.




யாதும் ஊரே யாவரும் கேளிர்

இந்த ஆண்டு கடுமையான கோடை வெய்யிலினால்   மழை பொய்த்து விட்டதால் கடும் வறட்சியின் காரணமாக தமிழக மக்கள் தண்ணீர் இன்றி  துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் அருகில் சிறுவளையம் கிராமத்தில் மக்கள் தண்ணீர் இன்றி மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
குளங்களும் கிணறுகளும் வறண்டுவிட்டன. கிராமத்திற்கு தண்ணீர் சப்ளை செய்யக்கூடிய ஆழ்துளை கிணறும் வறண்டு விட்டது. தீபத்தின் உதவி வேண்டி விண்ணப்பித்திருந்தார்கள்.
கிராம மக்களின் துயர் துடைக்க, உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து 48 மணி நேரத்தில் நீர் வழங்க சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது  முடிவு செய்தது. ஆடிட்டர் ஒப்புதல் பெற்று உடனடியாக களத்தில் இறங்கியது.

போர்கால அடிப்படையில், காஞ்சிபுரத்திலிருந்து போர்வெல் வண்டி வரவழைக்கப்பட்டு 185 அடி போர் துளையிடப்பட்டது. அற்புதமான நீர் வர தொடங்கியது. இதோ அந்த கண்கொள்ளா காட்சி.

இந்த அற்புதமான
சமூகப் பணியை,
சமுதாயப் பணியை, ஜீவகாருண்ய பணியை,
உயிர் நேயப் பணியை,
மக்கள் நல பணியை,
கிராம மக்களின் சேவையை,
 உடனடியாக செய்ய வைத்து உடனடி உயிர் உபகாரம் செய்த இறைவனை வணங்கி மகிழ்கிறோம்.

வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!

வாழ்க வாழ்க வள்ளல் மலரடி வாழ்க!!!

The cost of the project is:
Rs.31,355.90.

Sponsors for this project partly or fully are welcome.

 Please contact தீபம் for more details, 9444073635

 ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பொய்த்துவரும் நேரங்களில் நாமனைவரும் ஒன்றுபட்டு நீராதாரம் பெருகவேண்டிய முயற்சியில் ஈடுபட்டு நீரை சிக்கனமான முறையில்  கையாண்டு எதிர்கால சந்ததியினருக்கு வழிவகை செய்ய உறுதியேற்போம்.


என்றென்றும் ஆன்மநேய அறப்பணியில்
 நிறுவனர்
தீபம் அறக்கட்டளை
 வேளச்சேரி, சென்னை-42
இது ஒரு அரசு பதிவு பெற்ற 80-G வரி விலக்கு அளிக்கப்பட்ட சமுதாய தொண்டு நிறுவனம்
www.deepamtrust.org

Friday 17 May 2019

இன்று மாத பூசம் - 10/05/2019

தீபம் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும்,
தீபத்தின் உண்மை தொண்டர்களுக்கும்,
தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், பூச நன்னாள் வாழ்த்துக்கள்!!!

பூசம் என்பது அறிவை ஞானமாக மாற்றக்கூடிய நாள். ஒவ்வொரு மாதமும் பூச நன்னாளில் தீபம் அறக்கட்டளை வள்ளலார் துவக்கிய வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான பணிகளுக்கு தொடர்ந்து 68 மாதங்களாக தொண்டு செய்வது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான சன்மார்க்கிகள் பசியாற கூடிய வாழை இலைக்கு தீபம் மாதந்தோறும் ₹5000 பொற்காசுகள் கொடுத்து வாழை இலை உபயம் செய்து கொண்டிருக்கிறது.

மேலும் வடலூர் சத்திய தருமச்சாலைக்கு வரக்கூடிய சன்மார்க்கிகளுக்கு பிரசாதமாக மூக்கு கடலை ஒரு மூட்டை கொடுத்து  தீபம் அறக்கட்டளை வடலூர் தர்மசாலை மூலம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு 4 ஆயிரம் பொற்காசுகள் மாதந்தோறும் செலவு ஆகிறது.

மேற்கண்ட இந்த இரண்டு பொருட்களுக்கும் உபயம் அளிக்க விரும்புபவர்கள் மாதந்தோறும் பூச நாளிலோ அல்லது பூசத்திற்கு முன்பாகவும் நன்கொடையாக வங்கிப் பரிமாற்றம் செய்யலாம் அல்லது காசோலை அடைக்கலாம்.

தர்மம் செய்ய விரும்பு பவர்கள் மேலும் விவரங்களுக்கு தீபம் அறக் கட்டளையை தொடர்பு கொள்ளவும்.

பூசம் வாழ்த்துக்களுடன்...

 நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
சென்னை வேளச்சேரி
9444073635

அன்னதானத்திற்கு அரிசி உபயம் செய்த அருளாளர்களுக்கு நன்றி நன்றி நன்றி !!!

நாளை திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கும்,  பக்த கோடிகளுக்கும், தீபம் அறக்கட்டளையின் சார்பாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்படுகிறது.

 அன்னதானத்திற்கு 100 kg அரிசி உபயம் செய்த கீழ்கண்ட அருளாளர்களை தீபம் வாழ்த்தி மகிழ்கிறது.

*தயவு சுப்பையா அவர்கள் *தயவு டிவி ரமேஷ் அவர்கள் *தயவு அயன் ரமேஷ் அவர்கள்
*தயவு சரோஜ்குமார் ஐயா அவர்கள்

வாழ்க தங்கள் தர்ம குணம்!!! வாழ்க தங்கள் அன்பு குடும்பம்!!!
வாழ்க தங்கள் சந்ததிகள் !!! நீடூழி வாழ்க நீடூழி வாழ்க நீடூழி வாழ்க !!!

அன்னதானத்திற்கு காய்கறி உபயம் செய்ய விரும்புபவர்கள் (Rs.4000) தீபத்தை தொடர்பு கொள்ளலாம்.

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

தீபம் அறக்கட்டளையின் நடமாடும் அன்ன தர்மசாலை




சென்னை வேளச்சேரி நித்திய தீப தருமச்சாலையின் மூலம் தினமும் நடைபெறுகின்ற நடமாடும் அன்ன தருமச்சாலையின் மூலம் பசியாற்றுவித்தல்.

*பசி தீர்ப்பது பரம புண்ணியம் *உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
*அன்னதானமே ஆருயிர்மருந்து
*அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பொருள் பெற்றான் வைப்புழி *அன்னதானமே மகாதானம்

அன்னதானம், பசியாற்றுவித்தல் - தெய்வீக செயல்.

தர்மம் தலையை மட்டும் காப்பாற்றாது. தலைமுறையையே காப்பாற்றும்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கடந்த 22 ஆண்டுகளாக ... (பதிவு செய்யப்பட்டு 12 ஆண்டுகளாக...) 20 தர்மசாலைகள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கானவர்களுடைய பசிப்பிணியை போக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த அற்புதமான
தர்ம பணியில்,
அன்னதர்ம்ப் பணியில்,
அறப்பணியில்,
இறைபணியில்,
தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும்,
பிறந்தநாளை முன்னிட்டு, திருமண நாளை முன்னிட்டு, மற்றும் விசேஷ நாட்களை முன்னிட்டு,
காரண காரணம் இன்றியும், பசித்தவர்களுக்கு தாங்கள் விரும்பும் நாளில் அன்னமளித்து ஆனந்தமடைய,
ஆன்ம லாபம் பெற,
ஆண்டவனுடைய அருள் பெற, தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.

தர்மம் செய்ய விரும்புபவர்கள், தீபம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.

 வாழ்த்துக்களுடன் ...

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

சென்னை வேளச்சேரி திரௌபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழா - 12 /05/2019








நேற்று 12 5 2019,
சென்னை வேளச்சேரி திரௌபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தகோடிகளுக்கு அன்னம் பாலித்த அருட்காட்சி ...

நிதி தந்து, பொருள் தந்து, அற்புதமான தொண்டு செய்த 16 தீபம் சேவடிகளை, தொண்டு உள்ளங்களை, மனித தெய்வங்களை, காலை முதல் இரவு 11.30 வரை அயராமல் பாடுபட்ட தீபத்தின் தூண்களை, தீபம் அறக்கட்டளை பாராட்டி மகிழ்கிறது.

வாழ்க தர்மம் !!!
வளர்க தர்மம் !!!

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

திருச்சிற்றம்பலம்

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறெலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க ! உத்தமனாகுக !! ஓங்குக !!!

தீபம் அறக் கட்டளையின் தினசரி (இன்றைய)  தியானம்:

*தினமும் காலையில் அருட் கஞ்சி( மூலிகை கஞ்சி) தயாரித்து 20 தர்ம சாலைகள் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பசியாற்றுவித்தல்.

*12 மணி அளவில் குளிர்ந்த நீர் மோர் தயாரித்து தண்டீஸ்வரம் ஆர்ச் அருகில் கோடைக்கால தாகம் தணிக்க தினமும் நீர்மோர் தருதல்.

* மதியம் 12.30 மணி அளவில் நடமாடும் தர்மசாலை மூலம் கங்கை அம்மன் திருக்கோவிலில் அரசமரத்தடியில் அன்னம் தருதல்.

* சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மதியம் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வயிறார அன்னம் பாலித்தல்.

* நூற்றுக்கணக்கான சமர்பணம் இல்ல  மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னம்பாலித்தல்

* மாலை 6 மணியளவில் அந்தி கடை சார்பாக தினமும் அன்னமிடல்.

தீபத்தின் மற்ற சமுதாய திருப்பணிகள்:

a) வருடந்தோறும் வசதியற்ற ஏழை எளிய  மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவுதல்.

 b)மாதந்தோறும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி செய்தல்

c) ஏழை நோயாளிகளின் டயாலிசிஸ் மருத்துவ சிகிச்சைக்கு நிதியளித்தல்

d) ஒவ்வொரு மாதமும் பூச நாளிலே  வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான தொண்டு செய்தல்

e) ஒவ்வொரு வியாழனன்றும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வாராந்திர வழிபாடு மற்றும் அன்னப் பிரசாதம் வழங்குதல்

f) மாதந்தோறும் முதல் சனிக்கிழமை மாலையில் சான்றோர்களின் ஆன்மீக சொற்பொழிவுகளை  நடத்துதல்

g) ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல்.

தொடர்ந்து நடைபெறும் இந்த அன்னதான அருட்பணியில், திருப்பணியில், சமுதாயப் பணியில்  அன்பு உள்ளங்கள் கலந்துகொண்டு, நிதியாகவோ, பொருளாகவோ,
உடல் உழைப்பாக தொண்டு செய்து ஆன்ம லாபத்தை பாகம் செய்து கொள்ளுமாறு தீபம் அன்போடு அழைக்கிறது.

Donations are Welcome !!!
Volunteers are Welcome !!!

தொண்டு செய்வோம் !
நீண்டு வாழ்வோம்!

வாழ்க தர்மம்
வளர்க தர்மம் !!!

தர்மம் செய்வோம்
தயவுடன் வாழ்வோம்!!!

திருச்சிற்றம்பலம்

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
-  இது ஓர் அரசு பதிவு பெற்ற  80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட அற தொண்டு நிறுவனம்

தீபநெறி 2019 - மே மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.


இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை 94440 73635 /  044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுபினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.






















அரசு பதிவு பெற்ற நிறுவனமா?
ஆம், தீபம் அறக்கட்டளை அரசு பதிவு பெற்ற சமுதாய தொண்டு நிறுவனம். அரசு பதிவு எண் - 2035/07

தீபம் அறக்கட்டளையின் நோக்கம் என்ன?
Please visit http://deepamtrust.org/profile/

எவ்வாறு நன்கொடை அளிப்பது?
அலுவலகத்திலும், நித்ய தீப தருமசாலையிலும் நேரில் வந்து நன்கொடை அளிக்கலாம். அன்னதானத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கலாம்.

நேரில் வரமுடியாதவர்கள் அலுவலக முகவரிக்கு Deepam Trust என்ற பெயரில் காசோலை(Cheque) / வரைவோலை(DD)  அனுப்பலாம்.

தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்யலாம்.

எவ்வளவு தொகை நன்கொடை அளிக்கலாம்?
ஒருநாள் அன்னதானத்திற்கு ஆகும் செலவு இந்த பக்கத்தில்( http://deepamtrust.org/donate-now/) குறிப்பிடப்பட்டுள்ளது, மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி, etc… போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை தந்து மகிழலாம்!

நன்கொடைகளுக்கு ரசீது வழங்கப்படுமா?
வழங்கப்படும். 5 வேலை நாட்களுக்குள் தங்களுடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் ரசீது அனுப்பி வைக்கப்படும். ரசீது பெற வில்லை என்றால் 94440 73635 / 044-2244 2515 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

வருமான வரிவிலக்கு பெறலாமா?
1961 வருமான வரி சட்டம் 80G ன் படி வருமான வரிவிலக்கு பெற்ற தொண்டு நிறுவனம்.

வெளி நாடுகளில் இருந்து நன்கொடை அளிக்கலாமா?
வெளிநாட்டு பணமதிப்பில் நன்கொடையளிக்க முடியாது. ஆனால் இந்தியா பண மதிப்பில் வங்கி பரிமாற்றம் செய்யலாம்.

தங்களுடைய சேவைகளை எவ்வாறு தெரிந்து கொள்வது?
மாதந்தோறும் தீபநெறி என்ற மாதஇதழ் வெளியிடப்படுகிறது, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இணையதளம், சமூக ஊடகம், மற்றும் குறுந்தகவல் மூலம் சேவைகள் பகிரப்படுகிறது.

Friday 10 May 2019

100 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை யின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.சென்ற வருடம் 6 மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.



வாரி வழங்கும் கல்விச் செம்மல்களாகிய தங்களின் பெருந்தயவோடு தீபம் அறக்கட்டளையின் சார்பில் இதுவரை கடந்த 9 ஆண்டுகளாக 881 - மாணவ, மாணவியர்களுக்கு ரூ.48,31,668/- (ஏறக்குறைய அரை கோடி) கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


கடந்த வருடங்களில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை காணொளிக் காட்சியை காண கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்:

9 ஆம் ஆண்டு:



8 ஆம் ஆண்டு:




இறையருள் சம்மதித்தால், இவ்வருடம் 119 மாணவர்களுக்கு உதவுகின்ற வாய்ப்பு கிடைத்தால், இவ்வருடமே ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கிய பெருமை தீபம் அறக்கட்டளைக்கும் தீபா அறக்கட்டளையை தாங்கி நிற்கும் தூண்கள் ஆகிய நன்கொடையாளர்களுக்கு பெருமை சேர்க்கும்.

"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்."  - பாரதி

இந்த ஆண்டும் மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகைக்காக தீபம் அறக்கட்டளையின் உதவியை நாடி படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கான கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். விரைவில்( ஜூன் முதல் வாரத்தில்) அவர்களிடம் தகுந்த கல்வி பேராசிரியர்களின் குழுக்கள் மூலமாக மாணவர்களுடன் பெற்றோர்களுடன் நேர்காணல் நடத்த  உள்ளோம். தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவச் செல்வங்களுக்கு விரைவில் கல்வி  உதவித்தொகை வழங்கப்படும். 

தீபம் அறக்கட்டளை வழங்கும் 10-ம் ஆண்டு கல்வி உதவித்தொகைக்கு, தாங்களும் பாகம் பெற்று, ஓர் ஏழை மாணவர் அல்லது மாணவியின் எதிர்காலத்திற்கு வழி தந்து, அவர்களின் வாழ்விற்கு ஒளியேற்றிட, கல்விக்கான உதவித்தொகை வாரி வழங்கிட வேண்டுமாய் தங்களை அன்புடன் வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.

கல்வி உதவி வேண்டி வந்த ஓர் ஏழை  மாணவியின் தாயின் கண்ணீர் கடிதம்

"எனது பெயர் தனலட்சுமி. எனக்கு ஒரே மகள் பத்மபிரியா. சென்னை Maduvankarai  வாடகை வீட்டில்  இருக்கிறோம்.  மாத வாடகை ரூபாய் 3000. என் மகள் அப்போலோ காலேஜில் BCA படித்து வருகிறாள். அவள் இரண்டாம் ஆண்டு படித்து, மூன்றாம் ஆண்டு படிப்பை தொடங்கியிருக்கிறார். 

எனது கணவர் S முத்துசாமி அவர்கள் வெல்டிங் வேலை வேலை செய்து எங்களை காப்பாற்றி வந்தார். அவரது உடல்நிலை 2016ஆம் ஆண்டு முதல் சரியில்லாமல் இருந்ததால் 2017 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.எனது கணவர் இறந்ததால் நாங்கள் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதித்துள்ளோம். எனது கணவர் வேலையில் இருந்து வந்த ஒரே வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் பசி பட்டினியை இல்லாமல் இருந்தது.

தற்சமயம் நான் வீட்டு வேலை செய்துதான் குடும்பத்தை காப்பாற்றுகிறேன். எனக்கு எந்த சொந்தமும் பந்தமும் உதவவில்லை. உதவுகின்ற நிலையிலும் இல்லை. நாங்கள் சொல்ல முடியாத வேதனையுடன் இருந்து வருகிறோம். நான் வீட்டு வேலை பார்த்து எனக்கு வரும் வருவாய் எங்களது சாப்பாட்டுக்கும் வாடகைக்கும் கூட போதவில்லை. வீட்டில் வயதான மாமியார். கஷ்டமான சூழ்நிலையில் குடும்பம் உள்ளது. 

எனது மகளை BCA இரண்டு ஆண்டுகள் படிக்க வைத்து விட்டு, இன்னும் ஓராண்டு பீஸ் கட்ட வேண்டி உள்ளது. உடனே கட்டவில்லையென்றால் படிப்பை நிறுத்திக் கொள்ள சொல்கிறார்கள். எனது மகள் டிகிரி படிக்க, முடிக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறாள்."


இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி உதவி கேட்டு விண்ணப்பங்கள், கடிதங்கள். தாயை இழந்த, தந்தை இழந்த அல்லது தாய் தந்தை இல்லாத, பார்வை இல்லாத,  ஆதரவில்லாத மாணவ மாணவிகள் அறக்கட்டளையின் கல்வி உதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாணவ மாணவிக்கு உதவி கரம் நீட்டினால் அனைத்து ஏழை மாணவ மாணவிகளுக்கும் கல்வி உதவி கிடைக்கும். படித்து சமுதாயம் நலம் பெற  பயனடைவார்கள். ஏழைகளுக்கு உதவி செய்யும் நன்கொடையாளர்களுக்கு இறை இன்ப நிறை வாழ்வு கிட்டும்.

நேர்காணலில் தகுதி பெற்ற மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை கல்லூரியின் பெயரில் காசோலையாக மட்டுமே அளிக்கப்படும் என்பதை நன்கொடையாளர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு வருடமும் ஏழை மாணவ மாணவிகளின் இலவச கல்வி உதவிக்கு பெருமளவில் நிதி தந்து, சமுதாயத்தின்  ஒரு பகுதி ஏழை மாணவ மாணவிகளின் வாழ்வில் ஒளியேற்றும்... ஏற்றுக் கொண்டிருக்கின்...ஒளி ஏற்ற போகின்ற... மனித தெய்வங்கள் ஐஐடி பேராசிரியர் M S சிவகுமார் அவர்களையும்,  தணிக்கையாளர்  திரு ராமச்சந்திர ராவ் அவர்களையும்,  தீபம் நன்றியோடு  நினைவு கூறுகிறது.


தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80(G) பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு.

ரொக்க நன்கொடைகளை தவிர்க்கவும்:
Donations by Cheque / Draft:

You can also send a Cheque/Demand Drafts in the favour of 'DEEPAM TRUST' with your Name, Contact number, full address with pin code & Email (if available) to the office address mentioned below.

Deepam Trust, No.30, Throwpathi Amman Kovil Street,Velachery,Chennai – 600 042

Donation by Bank Transfer: 
Account Name: Deepam Trust
Account No     : 30265475129
Bank                 :State Bank of India
Branch             : IIT Madras, Chennai – 600 036
IFSC Code       : SBIN0001055

வங்கிப் பரிமாற்றம் செய்தபின் நன்கொடையாளர்கள் தங்கள் விவரங்களை 9444073635 என்ற எண்ணிற்கு SMS அல்லது வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்ப வேண்டுகிறோம்.


தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம்!!!

நிறுவனர் 
தீபம் அறக்கட்டளை
 சென்னை வேளச்சேரி 
-இது ஓர் அரசு பதிவு பெற்ற அற தொண்டு நிறுவனம்
(சமுதாயப் பணியில் 22 ஆண்டுகளாக...)

மேலும் தீபம் அறக்கட்டளையின் மற்ற சமுதாயப்பணிகளை அறிய விரும்புவோர், கீழ்க்கண்ட லிங்க் ஐ பயன்படுத்தவும்:    http://deepamtrust.org/social-activities/

Tuesday 7 May 2019

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சன்மார்க்க சொற்பொழிவு (04.05.219)

\

\


சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதாந்திர முதல் சனிக்கிழமை சன்மார்க்க சொற்பொழிவு நேற்று (04-05-2019) மாலை 6-30 மணியளவில் 17 மாத சொற்பொழிவாக கைவிடமாட்டான் என்று ஊதூது சங்கே என்கிற தலைப்பில் சன்மார்க்க சீலர், ஆழ்வார் திருநகர் முபா அய்யா அவர்களின்  சன்மார்க்க மைந்தர்

தயவுமிகு.M.B. பாபு சென்னை அவர்கள்  உரையாற்றினார்கள்.  ஞானமார்க்கத்துடன் கூடிய அருள்பெற வழிகாட்டும்  பேரின்பமாய்  அகநிலைக்கு வழிகாட்டும் மெய்யறிவுப் பூர்வமாக 107 நிமிடம்  சொற்பொழி மிகமிக சிறப்பாக அமைந்தது. ஏராளமான அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பசியாற்றுவித்தல் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் தீபம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அடுத்த மாதம் முதல் சனிக்கிழமை சொற்பொழிவு நடைபெறும் நாள்: 01-06-2019.

தலைப்பு: அருட்பா அமுதம்
உரை நிகழ்த்துபவர்: 
சன்மார்க்க சீலர், ஆன்மநேய உறவினர்
தயவுமிகு. அருட்பா அருணாசலம் அவர்கள்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், புதுச்சேரி.

அனைவரும் வருக!
அருளமுதம் பெறுக!

தீபம் அறக்கட்டளையின் சமுதாயப் பணிகள் - (03.05.2019)






ஒவ்வொரு மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று
 பார்வையில்லாத, மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு, 
நோயினால் வருந்துகின்றவர்களுக்கு, பொருளுதவியும், ஜீவாதார உதவியும், மருத்துவ நிதி உதவியும் கடந்த 10 ஆண்டுகளாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பேரருள் கருணையினால் தீபம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

கடந்த வெள்ளியன்று தர்ம சாலையிலே தீபம் அறக்கட்டளையின் சமுதாயப் பணி சில காட்சிகள்...

அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கு, அள்ளித்தரும் வள்ளல்களை வணங்கி மகிழ்கிறோம்.

எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு இறைவன் குடி கொண்டிருக்கிறான். மனித வடிவில் தர்மம் செய்யக்கூடிய அருளாளர்கள் அனைவரும் தெய்வத்தின் அருள் பெற்றவர்களே !!!

வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இன்புற்று வாழ்க இன்புற்று வாழ்க !!!

வாழ்க தர்மம்
வளர்க தர்மம் !!!

தர்மம் செய்வோம்
தயவுடன் வாழ்வோம்!!!

 திருச்சிற்றம்பலம்

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

தேவதானம் பேட்டை - (05.05.2019)



நித்ய தீப தர்மசாலை குழு அன்பர்களுக்கு

வணக்கம் ! வந்தனம் !!!

தீபம் அறக்கட்டளை  செய்யும் சமுதாய பணிகளை, அன்னதான பணிகளை, அறப்பணிகளை,
தங்களுக்கு வாட்ஸ் அப்பில் படங்களுடனும் விளக்கங்களுடனும் தீபம் நன்கொடையாளர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.

தீபம் அறக்கட்டளையின் 20 தர்ம சாலைகளில் ஒன்றான, செஞ்சி வட்டம் தேவதானம் பேட்டை கிராமத்தில் அருளாளர் அண்ணாமலை ஐயா அவர்கள் தலைமையில் மேற்பார்வையில்,
பசித்து வருபவர்களுக்கு,
நாடி வருபவர்களுக்கு,
தேடி வருபவர்களுக்கு, காலையில் அருட்கஞ்சி கொடுக்கக்கூடிய அற்புத காட்சியை பார்த்து நெகிழ்ந்து போனோம். மகிழ்ந்து போனோம்.

தற்பொழுது உங்களுக்கு இரண்டு படங்களையும் ஒரு நிமிடம் ஓடக்கூடிய அன்னதான வீடியோ காட்சியும் அனுப்பியுள்ளோம்.

இந்த காட்சியை பார்த்த பிறகு  இதற்கான தங்களுடைய
எண்ணத்தை,
விளக்கத்தை,
பார்வையை,
கருத்துக்களை

ஆங்கிலத்திலோ தமிழிலோ அல்லது ஆடியோவாக பதிவு செய்து அனுப்பலாம்.

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம்!!!

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

இலவச சித்த மருத்துவ முகாம் - (05.05.2019)


சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
~~~~~~~~
கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.
~~~~~~~~
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த
யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர்
சிவம் V.P.,மாதேஸ்வரன்
அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.

நாள்: 05-05-2019 ஞாயிறு
நேரம்: காலை 9-00 மணிமுதல் மதியம் 1-00 மணிவரை

மருத்துவ முகாம் நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரைத் தெரு,
தண்டீஸ்வரம் கோவில் அருகில்,
வேளச்சேரி, சென்னை-42
044-22442515, 9444073635

அனைவரும் வருக!
ஆரோக்கிய நலம் பெறுக!

Health is Wealth
நோயில்லா பாரதம் படைப்போம் 

Wednesday 1 May 2019

ஏழை பெண்மணிக்கு வாழ்வாதார உதவி - (01.05.2019)


திருவள்ளூர் மாவட்டம், ஈஞ்கூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி என்பவர் தனது கணவரின் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் தன் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை சுமந்து துணிகளுக்கு இஸ்திரி போடும் தொழிலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார். தற்போது தன் குடும்பத்தையே காப்பாற்றக்கூடிய இஸ்திரி பெட்டி பழுதடைந்து விட்டதால் புதிய இஸ்திரி பெட்டி வேண்டி தீபம் அறக்கட்டளைக்கு விண்ணப்பித்திருந்தார்.

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன்தீபம் அறக்கட்டளை சாந்தி என்பவருக்கு புதிய இஸ்திரி பெட்டி வழங்க திருவுள்ளம் கொண்டு புதிய இஸ்திரி பெட்டி RS.5487/- இன்று ஏழை பெண்ணின் வாழ்விற்கு, வாழ்வாதாரத்திற்கு நித்திய தீப தர்மசாலையில் வழங்கப்பட்டது( படம் பார்க்கவும்).

ஆதரவற்ற ஏழைக் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு வாரி வழங்கிய வள்ளல்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம் !!!

உலகம் தர்ம பூமியாக மாறட்டும் ; மலரட்டும் !!!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி, சென்னை
தொடர்புக்கு:-
04422442515 / 9444073635

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...