Saturday 24 October 2020

24.10.20: நாள் முழுவதும் மெய்யூர் கிராம சேவை

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம். அடுத்தவர் நலனை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்.

தருமச் சாலையில் சிறப்பு உணவு தயாரிக்க ஆரம்பித்த நேரம்: காலை 4 மணி.

மெய்யூர் கிராம சேவை முடித்து விட்டு திரும்பிய நேரம்: இரவு 9 மணி

தீபம் அறக்கட்டளையில் இருந்து மெய்யூர் கிராம பழங்குடி இன மக்களுக்கு நிவாரணப் பொருட்களாகவும்.. சிறப்பு உணவாகவும்... நேற்று லாரியில் தீபம் தொண்டர்களுடன் நேரில் சென்று வழங்கப்பட்டது.  சிறப்பு உணவாக பிரிஞ்சி சாதம், சாம்பார் சாதம், எண்ணெய் கத்திரிக்காய், வடை, ஸ்வீட் அப்பளம் மற்றும் வாழைப்பழம் பிஸ்கட்டுகள்  வழங்கப்பட்டது. 

மெய்யூர் கிராமத்தை சுற்றிலும் நான்கு காட்டுப் பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கு நாளெல்லாம் தொண்டு செய்தது மட்டற்ற மகிழ்ச்சி. கண்கொள்ளா காட்சி. இறைவனே தீபத்தின் அருட் பணியை.. அறப்பணியை... முன்னிருந்து நடத்துகிறார். 




நேற்று நம்மால் இயன்ற, வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்:

அரிசி  

பருப்பு

சமையல் எண்ணெய்  

கோதுமை மாவு  

ரவை

சேமியா பாக்கெட்டுகள்

அப்பள கட்டுகள்  

மற்றும்  காய் கனிகள் வஸ்திர தானம் வழங்கப்பட்டது. 

மிகவும் ஏழ்மை நிலையில் வசிக்கும் பழங்குடியினர்  சமூகத்திற்கு அரிசி தானம் அன்னதானம் வழங்கப்பட்டது. கொட்டும் மழையிலும் அன்னம் வழங்கியது மறக்க இயலாத காட்சிகளாய்... இன்ப சாட்சிகளாய்... கண்ணில் நிறைந்து கொண்டிருக்கிறது.


இந்த அறப்பணியில் கலந்துகொண்ட தொண்டர்கள்:

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்

திருவருட்பிரகாச வள்ளலார்

தயவு மின்னல் அம்மா 

தயவு பரணி ஐயா 

தயவு கணபதி ஐயா 

தயவு வேல்முருகன் ஐயா 

தீபத்தின் சாரதி தயவு வெங்கடேசன் ஐயா 

தயவு அருள் குழந்தை  ரிஷி

தயவு திருமதி புஷ்பா பாலகிருஷ்ணன் அம்மா,  

தீபம் நிறுவனர் பாலா.

சேவதாரிகளின் சேவை மிக மிக சிறப்பு. 


"தொழும் கைகளை விட சேவை செய்யும் கரங்கள் இறை கரங்கள்". இரவு முழுவதும் உறங்காமல் அன்னம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட திரு பரணியின் சேவை மிக மிக அளப்பரியது. பாராட்டத்தக்கது. அன்று நாள் முழுதும் அவருடைய சேவை சிறப்பு. அவருக்கு இறைவன் இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அள்ளித் தருவார் என்பது உறுதி.  

பிறர் பசி போக்குபவர் கடவுளில் பாதி. நாள் முழுவதும் சேவையில் தங்களை இணைத்துக்கொண்ட சேவதாரிகளுக்கு நன்றிகள். கோடி பொருளாகவும்... பொற்காசுகளாகவும்... அள்ளிக் கொடுத்த நன்கொடையாளர்களுக்கு நன்றிகள் கோடி கோடி. 

சேவை அருமை; பயணம் மிகச் சிறப்பு; இயற்கை அன்னையின் மடியில் வெங்கல் காட்டுப் பகுதியில் உலவிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு,  மந்திகளுக்கும் மந்திகளை கொஞ்சும் கடுவன்களுக்கும் (ஆண் குரங்குகள்) மந்தியின் மடியில் அண்டி கொண்டு இருக்கும் குட்டி குழந்தைகளுக்கும் வாழை கனிகள் கொடுத்து வாய்பிளந்து பார்த்து ரசித்த காட்சிகள் அருமை. இன்னும் கண்ணிலே அந்த காட்சிகள் தவழ்ந்துக் கொண்டிருக்கிறது. அடர்ந்த காட்டுப்பகுதியில் சிறிது நேரம் இருந்ததே பேரானந்தமாக இருந்தது. பாடும் நிலா பாலு உடல் அடக்கம் பெற்ற தாமரை பாக்கத்திற்கு சென்றது  சிறப்பு. அனைத்தையும் வழிநடத்திக் கொண்டிருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு வந்தனங்கள்; கோடி நன்றிகள்; கோடி  சேவதாரி களுக்கு நன்றிகள் கோடி கோடி. வாழ்த்துக்கள் கோடி கோடி. 

தொடர்ந்து நடைபெறும் தீபத்தின் அனைத்து  அறப்பணிகளுக்கும், அன்னதான பணிகளுக்கும், வாரி வாரி வழங்கும் தீபம் நன்கொடையாளர்கள், தொடர் மாதாந்திர நன்கொடையாளர்கள், ஆண்டு பல நீண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். 

எல்லா  உயிர்களும் இன்புற்று வாழ்க! 

வள்ளல்  மலரடி வாழ்க !!! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள் 


தர்மம் செய்வோம் !

தயவுடன் வாழ்வோம் !

தயவுடன் ...

என்றென்றும் சமுதாயப் பணியில்...

தீபம் அறக்கட்டளை

சென்னை வேளச்சேரி

9444073635

Thursday 22 October 2020

தீபநெறி - 2020 அக்டோபர் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 11 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும்சன்மார்க்கிகளுக்கும்நலம் விரும்பிகளுக்கும்ஒவ்வொரு மாதமும் தபாலில் அனுப்புகிறோம்.

இந்த மாத தீபநெறி இதழை படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்...
























மனித பிறப்பின் இரகசியம்

மனிதனாக பிறப்பதே ஓர் அதிசயம், ஓர் ஆனந்தம், ஓர் அற்புதம், ஓர் அரிது என்று உணர்வதே ஞானம் ஆகும். மனித உடம்பில் மட்டுமே கடவுள் விளக்கமும் ஆன்ம விளக்கமும் உள்ளது.ஆதலால் மனித தேகம் மட்டுமே கடவுளை அடைய முடியும். மனித தேகத்தில் மட்டுமே உயிர், சாமானிய ஜீவன், விசே­ ஜீவன் என்று இரண்டு வகை  உயிர்கள் உள்ளது. இறப்பின் போது ஒரு ஜீவன் தான் இறக்கும் மற்றொரு ஜீவன் என்றும் இறக்காது.

மனிதன் மட்டுமே தானம், தவம் செய்து தனக்கு மேலாக இருக்கும் இறைவனை அடையவும் உணரவும் முடியும்.

மனித பிறப்பினால் மட்டுமே, எக்காலத்திலும் எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும், தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வு அடைய முடியும்.

மனிதன் மட்டுமே தெய்வ வழிபாடுகள் செய்ய இயலும்.

ஆன்மா என்றால் என்ன?

1. இயற்கை உண்மை ஒரு தேசமாக இருக்கிறது.

2. இயற்கை விளக்கமாகிய அருள் அறிவுக்கு

 அறிவாகிய ஒற்றுமை உரிமைக்குரிய இடம்ஆகும்.

3. சுக-துக்கம் அதுக்கு கிடையாது ஆனால் அது

 ஜீவர்களாகி சுக-துக்கம் அனுபவிக்கும்.

 இதற்கு உபகார கருவிகள் (உதவிக்கு)

 மனம் முதலான கரண கருவிகள்,

 இந்திரயங்கள் (தேகம்)

4. ஆன்மா எக்காலத்தும் உள்ளதால் இருக்கிறது தோன்றுதலும், அழிதலும் இல்லை,    அதை அழிக்கவும், ஆக்கவும் முடியாது புண்ணிய பாவங்களை அனுபவிக்காது.

5. இது நூதன நூதனமாக செய்யப்படும்.

6. இது கன்ம பேதத்தால் வேறு வேறு தேகத்திற்கு செல்லும்.

மனித தேகம்!

1. இது தத்துவம் சடம், சுக துக்கங்களை சடங்கள் அனுபவிக்க அறியாது. ஆன்மாவே மனம் முதலான அந்தகரணங்களாக அனுபவிக்கும்.

2. ஜீவ வாழ்க்கைக்கு கடவுளால் கட்டி கொடுக்கப்பட்ட தேகம் ஒரு வீடாகும். (அதில் இயங்கும் நடம் வேறு)

3. ஆன்மாவுக்கு உபகார கருவியே தேகம் ஆகும்

4. பூதங்களின் காரியங்களால் ஆக்கப்பட்டதுஆதலால் இந்தேகம் ஐம்பூதங்களுக்கு உரிமையாகிறது.

5. இதில் ஆன்மவிளக்கே மறைப்பட்டு இருக்கிறது அருள் விளக்கம் இல்லை, மூடம் உண்டாகும் எனவே இது பந்ததிற்கு உட்பட்டது.

6. இது மாயையால் பூதகாரியத்துக் கொண்டு செய்யப்பட்ட தேகம்.

7. ஆதலால் இதற்கு பசி, கொலை, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம் என்பவைகளால் அடிக்கடி

அபாயம் ஏற்படும். மேலும் ஊழ்வினைகளாலும், அஜாக்கிரதையாலும் இதற்கு அபாயம் ஏற்படும்.

- ஜீவகாருண்யம் பகுதி - 1 (பக்கம் 106)



ஆன்மநேய பொதிகைப்ரியன் 
கள்ளக்குறிச்சி
9789788198



மனிதவளம்!

நீர் வளம் பெருக்கிடவோ, நிலவளம் செழித்திடவோ, பெருமுயற்சி ஏதும் எடுத்திடாமல், பற்றாக்குறையோடு போராடி வாழப்  பழகிவிட்டோம்.

குடிநீர் பற்றாக்குறை அதிர்ச்சி அளிக்காத அன்றாட நடைமுறையாகிவிட்டதல்லாமல், விளைநிலங்களின் பரப்பளவும் பாதியாகக் குறைந்துவிட்டதையும், நீர்நிலைகளின் பராமரிப்பின்மையையும் பெரிய பாதிப்பாகவே உணர்ந்திடாமல், அவ்வப்போது முணுமுணுப்பு, சலசலப்பு, போராட்டம்,  அவலங்களின் தொடர்ச்சி. இதுதானே நமது இன்றைய நடைமுறை!

ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தில் முன்னிலை, முதல்நிலை வகிக்கிறோம். 1940ல் 40 கோடி! இன்று 135 கோடி!! மக்கள் தொகைப் பெருக்கம் மனிதவள நலிவு, இரண்டுமே கவலையளிக்கக் கூடியவைகள் தானே? மனிதவளம் அறிவின் பெருக்கமா? ஒழுக்கத்தின் உறுதிப்பாடா? செயல்திறனின் வேகமா? இவைகளின் கலவையா?  பொய்யாமொழி மனிதவளத்திற்கு இலக்கணம் சொல்லியிருக்கிறார்.

அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு ஐந்து சால்பு ஊன்றிய தூண் இவ்வைந்து குணநலன்களின் கலவையால் வடிவமைக்கப்பட்ட உறுதியானத்தூணாக நின்றால் சமுதாயக் கூடத்தில் விருப்பரு சுற்றம் சூழும். அருப்பரு ஆக்கம் மிகும்!

இதுதான் மனிதவளம்! இதன் அருகில் செல்பவர் சிலரே. இவ்வைந்து குணநலன்களையும் அணிந்து வாழ்பவர் அரிதின் அரிதாக அவ்வப்போது தோன்றி நமக்கு நினைவூட்டி மறைகிறார்கள்.

மனவளம் பெருகிட குற்றமிழைக்கும் உணர்வுகளை விலக்கவல்ல, அறன் வலியுறுத்தும் கல்விச்சாலைகள், குற்றங்களைக் களைய வல்ல காவல்துறை, சமன் செய்து சீர்தூக்கும் கோல் போன்ற பண்புடைய சட்ட வல்லுநர்களும் தாமதியாமலும் அவசரப்படாமலும், மக்கள் மனவளத் தெளிவோடு வாழ்வதற்குரிய தீர்ப்புகளை வழங்கிடும் நீதிமன்றங்களும், போராட்டங்களைத் தவிர்க்கத் தெரிந்த அரசும், அரசியல்வாதிகளும் மக்களின் மடமையை ஊக்குவிக்காத ஊடகங்களும்தான் இன்றைய அவசரத் தேவை. இன்று, மனிதவளம் செழிக்கிறதா? சிதைகிறதா? ஒரு கண்ணோட்டம், மனிதவளம் பற்றி சிந்திக்கும்முன் மனிதனைப் பற்றி அறிந்து கொண்டு, அவன் பெற்றுள்ள, பெற வேண்டிய மனவளம் பற்றிச் சிந்திப்போம்.

மனிதர்களாகிய நாம் மனிதர்களைப் பற்றி தெரியாதவர்களாகவே இருக்கிறோம். ஆம்! நம்மில் பெரும்பாலோர்க்கு தங்களைப் பற்றி தெரியவே தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பமாட்டார்கள். அடுத்தவன் குறைகளை அலசி ஆராய்வார்கள்!

ஊனுடம்பே ஆலயம், உடம்புளே உறுபொருள் கண்டேன். படித்திருப்பார்கள், ஊனுடம்பைப் பாதுகாக்கவும் இல்லை. உறுபொருளைத் தேடவுமில்லை. காலத்தை வீணே கழித்துக் காலமாகிறார்கள்.

மனிதன் படைக்கப்பட்டானா? பரிணமித்தானா? படைக்கப்பட்டான் எனின் எப்போது? ஏன்? படைப்பின் நோக்கம்? அண்மையில், நமது மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டுத்துறையின் அமைச்சர் மனிதப் படைப்பு பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். நாமெல்லாம், ரி´ புத்திரர்கள் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதெல்லாம் வெறும் பிதற்றல்கள். இது பத்திரிக்கையில் வந்த செய்தி. இதை முழுக்கப் படித்தபின் எனக்குள் குழப்பம், முதல் குழப்பம், காலக்குழப்பம்.

நம் மூதாதையர் ரி´கள் என்றால் ரி´களின் காலம் இதிகாச காலத்தில் தானே! ரி´கள் பற்றி புராணங்களில் படித்திருக்கிறோம். புராதன கால வரலாற்று ஆய்வாளர்களின் பதிவுப்படி, வேத காலம் 9000 ஆண்டுகட்கு முந்தையது.

இராமாயண காவிய நிகழ்வுகள் சுமார் 7000 ஆண்டுகட்கு முந்தையதாக இருக்கலாம். பாரதப் போரும், கிருஷ்ணருடைய பகவத் கீதையின் காலம் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர், வேதங்களின் பிறப்பிடம் கங்கை, யமுனை, சிந்து,  ஸரஸ்வதி சமவெளிகள், வேதங்களில் இமயத்திற்கு வடக்கேயும், தென்னிந்தியாவில் இருந்த மன்னர்கள் பற்றியோ, நாடு, மக்கள், பற்றியோ எந்தக் குறிப்பும் இல்லை. வேதம் எப்போது தென்னிந்தியா வந்தது? ரி´ புத்திரர்களாகிய நாம், ரி´களின் வம்சாவளியில் வந்த நாம், நற் பண்புகளின் உறைவிடமாக, ஒழுக்கசீலர்களாக, குணக்குன்றுகளாக அல்லவா வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்!

உலகுக்கே வழிகாட்டிகளாக, உன்னத நிலையில் மட்டுமல்ல, உலகையே ஒரு குடும்பமாக மாற்றியிருக்க வேண்டுமல்லவா? நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது. தர்ம சாஸ்திரங்கள் இயற்றினோம். ஆகம விதிகள் வகுத்தோம். 18 உபநி­த்துக்கள் 18 புராணங்கள்,  அறுபத்தி நாலு கலைகள், அஸ்திரப் பயிற்சியில் தேர்ச்சி, யோகக்கலையின் கர்த்தாக்களே நாம்தானே! இவ்வளவு இருந்தும் 56 தேசங்களாக பிரிந்து போரிட்டுக் கொண்டிருந்தோமே? முகலாயருக்கு எப்படி அடிமையானோம்? பின்பு ஆங்கிலேயனின் அடிமைகளானோம். நமது ஆற்றல்கள் நற்குணங்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லையோ?

தேவாசுரப் போர்- பாரதப் போரில் துவங்கி ஆங்கிலேயனோடு அஹிம்சைப் போர் வரை நாம் போராட்டத்திலேயே பொழுதைக் கழித்துவிட்டோமோ? இப்போதும் போராட்டங்கள்தான் நமது பிரதானப் பணியாகிவிட்டன.

கிரேக்கர்களும் நம்மைப் போல புராணங்கள் பல படைத்தார்கள். கடவுளர்களை சிலைகளாக வடித்தார்கள் வணங்கினார்கள் அன்று. இன்றும் அங்கே சிலைகள் நிற்கின்றன. சிலைகள் கடத்தப்படுவதில்லை; சிலைகள் உடைக்கப் படுவதுமில்லை; சிலைகள் வணங்கப்படுவதும் இல்லை. நாமோ சிலைகளுக்கு அபிசேகம் பால், தயிர், தேன், சந்தனம், சொர்ணாபிஷேகம் கூடச் செய்கிறோம். சிலைகளைக் கடத்துகிறோம்; சிலைகளை உடைக்கிறோம்.

இச்செய்கைகள் மனவளச் செழிப்பா சிதைவா? அறியாமைச் சக்தியினின்று, வாலறிவை நோக்கி பயணிப்பதுதானே மனிதவள செழிப்பு; ஆனால் நூற்றாண்டுகள் பல புரண்ட பின்னும், நல்ல நூல்கள் இயற்றப்பட்டும், நூற்றுக்கணக்கில் சான்றோர்கள் போதித்தும் இன்னும் அறியாமைச் சேற்றில் அமிழ்ந்து கிடப்பதில் தான் சுகம் காண்கிறோம்!

சிற்றின்பம் வெட்கி அறனல்லவைகளையே செய்கிறோம். மதுரை எரிந்தது, அன்று கண்ணகி எரியூட்டினாள். இலங்கை எரிந்தது, ஹனுமன் எரியூட்டினான். இரண்டிலும் பெண்களின் கற்பு எரியூட்டலுக்குக் காரணமாக அமைந்தது. அண்மையில் டெல்லி எரிந்த, எரிச்சல் இன்னும் அடங்கவே இல்லை. மனிதவளம் செழித்தோங்கி இருக்கவேண்டிய இன்றும் எரியூட்டி Š உயிர் பறித்து. உடல் சிதைத்து, உடைமைகளை உருக்குலைத்து வெறியாட்டம் போடுகிறோமே! ஏன்? மதம் என் மதம் தான் சிறந்தது எனும் அஞ்ஞானம் Š அறியாமை. 

உலகு ஒரு குடும்பமாக வாழ முயற்சி மேற்கொள்ளல்தான் மனிதவளச் செழிப்பு. மதமிகைப்பற்று தான் வன்முறைகளின் ஊற்றுக்கண் என்று திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டும் என் மதம் உயர்ந்தது என் கடவுள் சிறந்தவர் என்றே செயல்படுவது மனிதவளச் செழிப்பல்ல. மன்னிக்கவும். மனிதவளச் சிதைவு.

உலக மாந்தரில் மதவாரி மக்கள் தொகை விவரம் பற்றிய ஒரு புள்ளி விவரம் கண்டேன். ரி´ புத்திரர்களாகிய நாம் ஹிந்துக்கள் என்று ஆங்கிலேயனால் பெயர் சூட்டப்பட்ட நாம், நூற்று ஐந்துகோடி, உலக மாந்தரில் பதினைந்து சதவிகிதத்தினர் !

பரமபிதாவால் படைக்கப்பட்ட ஆதாம்  ஏவாளை மூதாதையராகக் கொண்ட கிருஸ்துவர்கள் 220  கோடி (30%). அல்லாவால் படைக்கப்பட்ட மனிதர்களை முன்னோராகக் கொண்ட இஸ்லாமியர்கள் 165 கோடி (23.2%). ஜீடோயிசம், சமணம், சீக்கியம் 10 கோடிக்கும் குறைவு. மொத்தம் 50 கோடி (7.5%) மதக்குறியீடே இல்லாதோர், தங்களை படைத்தவர் பற்றியெல்லாம் கவலையில்லா மனிதர்கள் 115 கோடி (16%) இவர்களெல்லாம் மனிதர்கள்தானே! வெவ்வேறு கடவுள்களால் படைக்கப்பட்டார்கள் என்று எப்படி சொல்லமுடிகிறது. சக மனிதனை, மனித நேயத்தோடு அல்லவா பார்க்கவேண்டும். வேறுவிதமாகப் பார்த்திடும் எண்ணம் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பது வியப்பல்ல  வேதனை! அறிவுவிருத்தி ஒரு தொடர் முயற்சியாக  வாலறிவை நோக்கியப் பயணம் தடைகளை தகர்த்திடும் ஆற்றல் மிக்கதாகவும் முன்னுரிமை கொண்டதாகவும் அமையாத வரை, மடமைகளை, மூடநம்பிக்கைகளை அகற்றவே முடியாது. நம் காலம், வருங்காலத்திற்கு வழங்கவேண்டியது மனிதநேயம் - மனிதவள செழிப்பு  மதப்பற்றின்மை !

பழம்பெருமை பேசி, பொழுதைக் கழித்தது போதும். மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருந்தது முடிந்த கதையாக்கிட முயலுவோம். மனிதனின் அடுத்த நிலைக்கு நகர்ந்திட முனைவோம்.

அடுத்த நிலை ஆம்  அடுத்த நிலை தெய்வமாதல். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் திரைப்படப் பாடல் நினைவில் ஒலிக்கிறதே தவிர, தொடர்ந்து சிந்தனையோட்டம் நிகழ்வது இல்லை.

நல்லன தேர்ந்து, அல்லன நீக்கி, இப்போதைய பழக்கவழக்கங்களை Š நம்பிக்கைகளைச் சீர்தூக்கி. அவைகளில் நல்லன தேர்ந்து, அல்லன அகற்றி, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்தால், பகையின்றி வாழ்ந்தால், மனிதன் முழுமை அடைவான். தெய்வநிலை எய்துவான்.

சாற்றை நீராக்கி, நீரை நெருப்பாக்கிடும் வல்லமையை நிரூபித்த விஞ்ஞானம் தனது தேடல் பணியைத் தொய்வில்லாமல் தொடர்கிறது.

நாம் வேள்விகளையும், ஹோமங்களையும் தொடர்கிறோம். பதினாறுவகைப் பொருள்களைப் பூரண ஆகுதியா அக்னிதேவனுக்குச் சமர்ப்பித்து பரவச நிலை எய்துகிறோம். இதுமட்டுமல்ல, கடா வெட்டுதல், கோழிகளின் கழுத்தை முறித்து படையலிடுதல் என்ற பெயரில் பக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தீ மிதித்து தூய்மைபடுத்திக் கொள்கிறோம். அலகு குத்தி, அந்தரத்தில் தொங்க நேர்த்திக்கடன் செலுத்துகிறோம். பக்தர்களே, மனம், புண்படாமல் தயவு செய்து சிந்தியுங்கள். நிதானமாக இந்த செயல்களைச் சீர்தூக்கிப் பாருங்கள். நதி நீரை தூய்மைப்படுத்த முயற்சி எடுக்காமல் பிரம்மாண்ட பூஜைகள் நடத்துவதால் நதி நீர் தூய்மைப்படுமா?

சுற்றுப்புறத் தூய்மை பற்றியும், நீர் நிலைகளைக் காப்பது பற்றியும் பேசிக் கொள்கிறோம். விழாக்கள்! அதிலே பூஜைகள்  பொன்னாடைகள்  பூங்கொத்துக்களுக்குக் குறைவே இல்லை கோவிந்தா!  புனித நீராடலுக்கு இலட்சக்கணக்கில் கூடி நதிநீரை மேலும் மாசுபடுத்தி மகிழ்கிறோம்! இவை மனிதவளச் செழிப்பா? சிதைவா? மதம் கோலோச்சுகிறது. யுகநாயகர்கள் பிரகாசிக்கிறார்கள். இராமனின் வாலி வதமும், கிருஷ்ணரின் பாரதப் போரும் என் நினைவுக்கு வந்து அச்சுறுத்துகின்றன. யுக தர்மங்கள் கடந்து போனவை. நமது இன்றைய தர்மம் எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது மட்டுந்தான். அன்பின் வழியது உயிர்நிலை. அதுவே உயர்நிலை.

திருத்தங்கள் தேவைதான், இணக்கத்திற்கும், இணைப்புக்குமான திருத்தங்கள் பிரிவிக்கும், பிரிவினைக்கும் வழிவகுத்திட அல்ல.

அரசோச்ச இத்தனை பேர் ஏன் போட்டியிடுகிறார்கள்? புதுமுகங்கள் புகத் துடிக்கிறார்கள்! தேர்தலை திருவிழாவாக்கிக் கொண்டாடுகிறார்கள். தொண்டர்களை கூத்தாட வைக்கிறார்கள். போர்க்களமும் ஆக்கி வேடிக்கை பார்க்கிறார்கள்! இதுவா மனிதவள செழிப்பு?

மதுவிலக்கு  மதுக்கடைகளை குறைத்தோம். மதுவிற்பனை கூடியது! மதுப்பழக்கத்தைக் குறைத்திட என்ன செய்வோம்?? குட்கா, போதை புகையிலைப் பொருட்களைத் தடை செய்தோம். உற்பத்திக் கூடங்களில் சோதனை நடத்தினோம். குட்காவும் போதை வஸ்துகளும், வேண்டியவர்கட்கு வேண்டுமளவுக்கு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறன. அறிவு விருத்தியா  மனவள செழிப்பா? பாலியல் வன்கொடுமை பஞ்சமா பாதகங்களின் ஒருமித்த வெளிப்பாடாகக் கோரத்தாண்டவம் ஆடுகிறதே, எழுதவே என் விரல்களில் நடுக்கம் மனதில் அருவருப்பு அழுகை?? மனித வள செழிப்பை நோக்கியா பயணிக்கிறோம் ! சோலைவனமாகவல்லவா இருக்கிறது என்று சொல்பவர்கள் சிலரல்ல, பலர்! கோள்கள் பற்றிய ஆய்வுகளை உலக விஞ்ஞானிகள் தொடர்கின்றனர். வியத்தகு விவரங்களும் வெளியிடப்படுகின்றன. இவர்கள் ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும்? நமது ஜோதிட வல்லுநர்களுக்கு கோள்களைப் பற்றிய அத்தனை விவரங்களும் தெரிந்திருக்கின்றனவே! நல்ல நேரம், கெட்ட நேரம், வாங்க, விற்க நிமிடக் கணக்கில் பலன் சொல்கிறார்களே! இவர்களை சந்திக்க வரிசையில் நிற்பவர் ஏராளம் என்பது உண்மை. ஆனால் நீங்கிய இடர்  பெற்ற பலன்  ஏதேனும் பதிவுகள் உள்ளனவா? தன்னம்பிக்கையின்மையின் வெளிப்பாடல்லவா?  வேண்டாம் ஜோதிடம். வேண்டியது மனோதிடம்.

மதம் மறைந்து எம்மதமும் சம்மதம் எனும் வள்ளலார் வடிவம் (எளிமை - தூய்மை) வெளிச்சத்திற்கு வந்தால், வரவழைத்திட நாம் உறுதி பூண்டால், மனிதநேயம் மலரும் ! மனிதவளம் செழிக்கும் !


இலட்சுமணசாமி

இராணிபேட்டை 

08056438488

கொரோனா ஊரடங்கு காலங்களில் தீபத்தின் சேவை

கொரோனா காலங்களில் தீபம் அறக்கட்டளையின் நிவாரணப்பணிகள்:
கொரோனா நோய்த் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலங்களில், ஆதரவற்று சாலையோரம் வசிப்பவர்கள், தினக்கூலி அடிப்படையில் வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளர்கள் என தினசரி தருமச்சலையை தேடி பசியுடன் வருபவர்களுக்கு, உணவு பொட்டலங்கள் தண்ணீர் பாட்டிலுடன் வழங்கப்பட்டது. அன்னதானப்பணிகள் மேலும் விரிவாக்கப்பட்டு வேளச்சேரி தண்டீஸ்வரம் கோயில் அருகில் தினசரி மதிய உணவு வழங்கப்பட்டது, டாட்டா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மைலாப்பூர், லஸ் கார்னர், கச்சேரி சாலை, லைட் அவுஸ், மெரினா கடற்கரை, சாந்தோம், பட்டினப்பாக்கம், விவேகானந்தர் இல்லம், கஸ்தூரிபாய் மருத்துவமணை பகுதிகளில் உணவு பொட்டலங்கள் தண்ணீர் பாட்டில்களுடன் வழங்கப்பட்டது மற்றும் தீபத்தின் தன்னார்வத் தொண்டர்கள் இரண்டு சக்கர வாகனங்களில் சாலையோரம் உணவில்லாமல் பசியோடு இருப்பவர்களை தேடிச்சென்று தினசரி நூற்றுக்கணக்கான நபர்களின் பசியாற்றினர் முகாம்களில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தருமச்சலையில் தினசரி காய்கறிகள் வழங்கப்பட்டது.





09-07-2020 நிவாரண உதவி :

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த பார்வையற்ற திரு. கருணாமூர்த்தி ஐயா அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதை அறிந்து தீபம் அறக்கட்டளை திரு. கருணாமூர்த்தி அவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.2000 வங்கி பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் வறுமை நிலையை உணர்ந்து மீண்டும் 14-07-2020 அன்று ரூபாய் 2000 நிவாரண உதவி வழங்கப்பட்டது.

09-07-2020 அன்னதான அரிசி உதவி :

விழுப்புரம் அருள் மாளிகை மூலம் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கு தீபம் அறக்கட்டளை 10 அரிசி சிப்பங்களுக்கான உபயம் ரூ. 10,000 வங்கி பரிமாற்றம் மூலம் வழங்கியது.

குழந்தைகளுக்கு தீபம் கட்டளையின் சார்பாக தினசரி மதிய உணவு :

10-07-2020 முதல் திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் உள்ள 100 ஏழை குழந்தைகளுக்கு தீபம் கட்டளையின் சார்பாக தினசரி மதிய உணவு வழங்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் உணவு தயாரிக்க புதிய அடுப்பும், பாத்திரங்களும் வழங்கப்பட்டது.




12-07-2020 அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை நேரடியாக வழங்கிய சமுதாயப்பணி

திருவொற்றியூர் மாற்றுத்திறனாளி திரு. நந்தகோபால் குடும்பத்திற்கு தீபம் அறக்கட்டளையின் சார்பாக ரூபாய் இரண்டாயிரத்துக்கான ஒரு சிப்பம் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை நேரடியாக வழங்கப்பட்டது.

101 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

ரயில்களில் பொருட்களை விற்று குடும்பத்தை நடத்தும், கொரோன ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் அற்ற தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வாழும் 101 பார்வையற்ற குடும்பங்களுக்கு, வாழ்வாதார உதவியாக, குடும்பத்திற்கு தலா ரூ. 1000/- வீதம் 05-06-2020 மற்றும் 11-06-2020 தேதிகளில் வங்கி பரிமாற்றம் செய்யப்பட்டது. அருள்நிதியை வாரி வழங்கிய வாழும் வள்ளல்களுக்கு மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்து மகிழ்கிறோம்.

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் 100 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவி

18-07-2020 அன்று மெய்யூர் காட்டுப்பகுதிகளில் மிக மிக ஏழ்மையில் குடிசைகளில் வாழும் 100 குடும்பங்களுக்கு முதல் தர 10 கிலோ அரிசி சிப்பங்களுடன் 12 வகையான மளிகைப் பொருட்கள் நேரில் சென்று உணவுடன் வழங்கப்பட்டது.







25-7-20 அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்குதல்

கல்குட்டை பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு 1ஞிஞி குடும்பங்களுக்கு அவர்களின் வறுமையை கருத்தில் கொண்டு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் நேரில் சென்று வழங்கப்பட்டது.






மதுராந்தகத்தில் தீபம் அறக்கட்டளையின் நிவாரணப் பணி

01-08-2020 அன்று மதுராந்தகம் அருகிலுள்ள ஐந்து கிராமங்களில் (ஜல்லிமேடு, கழனிபாக்கம், எண்டத்தூர், தாயந்தப்பாக்கம், சின்ன காலனி கிராமங்கள்) கூலி வேலை இல்லாமல், வறுமையில் வாடும், குடிசைகளில் வாழும் 110 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ முதல் தர அரிசி  மற்றும் 13 வகையான மளிகை பொருட்கள் தீபம் அறக்கட்டளை வாகனம் மூலம் நேரில் சென்று வழங்கப்பட்டன. அனைவருக்கும் பசி போக்க உணவு வழங்கப்பட்டது.







ஏழை மாணவ மாணவிகளுக்கு11ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை

தீபம் அறக்கட்டளை வருடம் தோறும் 100 ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. 2020 - 21 ஆம் கல்வி ஆண்டு 147 விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டது. அதில் 91 மாண, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இணையவழியில் நேர்முக தேர்விற்கு அழைக்கப்பட்டனர்.

30-08-2020 அன்று முதற்கட்ட இணையவழி நேர்காணல் மற்றும் 06-09-2020 அன்று இரண்டாம்கட்ட இணையவழி நேர்காணல் நடைபெற்றது. இறுதியாக 52 மாணவ மாணவியர்கள் நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டு 20-09-2020 அன்று மாணவர்கள் பயிலும்  கல்லூரின் பெயரில் காசோலை வழங்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக தீபம் அறக்கட்டளை 1047 மாணவ மாணவியர்களுக்கு 56,99,216/- ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கியுள்ளது.






---------------------------------------------------------------------

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...