Thursday 5 November 2020

05.11.2020 - ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நித்திய தீப தர்மசாலை

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஏகாம்பர குப்பம் கிராமத்தில், 

தீபம் அறக்கட்டளையின் மீண்டும் ஓர் புதிய அன்ன தர்மசாலை

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தமிழகத்தில் பல்வேறு தர்ம சாலைகள் மூலம் தீபம் மக்களின் பசி போக்கிக் கொண்டு இருக்கிறது என்பது தாங்கள் அறிந்ததே.


கடந்த மாதம் கடலூர் மாவட்டம் பெரிய குறிச்சியில் நித்திய தீப தர்மசாலை துவக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஏகாம்பரகுப்பம் கிராமத்தில் திரு A S  லக்ஷ்மணன் அவர்கள் தலைமையில், காலை வேளையிலே வள்ளலார் அருளமுதம், மூலிகை கஞ்சி  வழங்கும் நிகழ்வு துவங்கப்பட்டு இருக்கிறது  என்பதை தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கு தெரிவித்து மகிழ்கிறோம்.

அறக்கட்டளையின் ஆணிவேராக இருந்து கொண்டு, தன்னை காட்டிக் கொள்ளாமல், தொடர்ந்து தீபத்தின் அறப்பணிகள் அன்னதான பணிகள் நடைபெற  நன்கொடைகளை வாரி வாரி வழங்கி நல்லாதரவை கொடுத்துக் கொண்டிருக்கும் தீபம் நன்கொடையாளர்களை இருகரம் கூப்பி வணங்கி, தங்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறோம். மகிழ்கிறோம்.

தீபத்தின் சமுதாயப் பணிகள் தொடர்ந்து விரிவாக்கம் ஆகிக் கொண்டு இருப்பதால், என்றும் தங்களுடைய நல்லாதரவை நாடி நிற்கும் தீபம் அறக்கட்டளை...

சித்தூர் மாவட்டம் ஏகாம்பரகுப்பம் கிராமத்தில் புதிதாக துவங்க உள்ள நித்திய தீப தருமச்சாலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் நிதி வழங்கிய திருக்காட்சி... இணைத்துள்ளோம்.


தர்மம் செய்வோம் !

தயவுடன் வாழ்வோம் !

தயவுடன் ...

என்றென்றும் சன்மார்க்க பணியில்...

தீபம் அறக்கட்டளை வேளச்சேரி சென்னை

9444073635

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...