Wednesday 22 May 2019

ஆழ்குழாய் நீரின் மூலம் சிறுவளையம் கிராம மக்கள் தாகம் தணிப்பு.




யாதும் ஊரே யாவரும் கேளிர்

இந்த ஆண்டு கடுமையான கோடை வெய்யிலினால்   மழை பொய்த்து விட்டதால் கடும் வறட்சியின் காரணமாக தமிழக மக்கள் தண்ணீர் இன்றி  துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் அருகில் சிறுவளையம் கிராமத்தில் மக்கள் தண்ணீர் இன்றி மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
குளங்களும் கிணறுகளும் வறண்டுவிட்டன. கிராமத்திற்கு தண்ணீர் சப்ளை செய்யக்கூடிய ஆழ்துளை கிணறும் வறண்டு விட்டது. தீபத்தின் உதவி வேண்டி விண்ணப்பித்திருந்தார்கள்.
கிராம மக்களின் துயர் துடைக்க, உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து 48 மணி நேரத்தில் நீர் வழங்க சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது  முடிவு செய்தது. ஆடிட்டர் ஒப்புதல் பெற்று உடனடியாக களத்தில் இறங்கியது.

போர்கால அடிப்படையில், காஞ்சிபுரத்திலிருந்து போர்வெல் வண்டி வரவழைக்கப்பட்டு 185 அடி போர் துளையிடப்பட்டது. அற்புதமான நீர் வர தொடங்கியது. இதோ அந்த கண்கொள்ளா காட்சி.

இந்த அற்புதமான
சமூகப் பணியை,
சமுதாயப் பணியை, ஜீவகாருண்ய பணியை,
உயிர் நேயப் பணியை,
மக்கள் நல பணியை,
கிராம மக்களின் சேவையை,
 உடனடியாக செய்ய வைத்து உடனடி உயிர் உபகாரம் செய்த இறைவனை வணங்கி மகிழ்கிறோம்.

வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!

வாழ்க வாழ்க வள்ளல் மலரடி வாழ்க!!!

The cost of the project is:
Rs.31,355.90.

Sponsors for this project partly or fully are welcome.

 Please contact தீபம் for more details, 9444073635

 ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பொய்த்துவரும் நேரங்களில் நாமனைவரும் ஒன்றுபட்டு நீராதாரம் பெருகவேண்டிய முயற்சியில் ஈடுபட்டு நீரை சிக்கனமான முறையில்  கையாண்டு எதிர்கால சந்ததியினருக்கு வழிவகை செய்ய உறுதியேற்போம்.


என்றென்றும் ஆன்மநேய அறப்பணியில்
 நிறுவனர்
தீபம் அறக்கட்டளை
 வேளச்சேரி, சென்னை-42
இது ஒரு அரசு பதிவு பெற்ற 80-G வரி விலக்கு அளிக்கப்பட்ட சமுதாய தொண்டு நிறுவனம்
www.deepamtrust.org

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...