Friday, 17 May 2019

இன்று மாத பூசம் - 10/05/2019

தீபம் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும்,
தீபத்தின் உண்மை தொண்டர்களுக்கும்,
தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், பூச நன்னாள் வாழ்த்துக்கள்!!!

பூசம் என்பது அறிவை ஞானமாக மாற்றக்கூடிய நாள். ஒவ்வொரு மாதமும் பூச நன்னாளில் தீபம் அறக்கட்டளை வள்ளலார் துவக்கிய வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான பணிகளுக்கு தொடர்ந்து 68 மாதங்களாக தொண்டு செய்வது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான சன்மார்க்கிகள் பசியாற கூடிய வாழை இலைக்கு தீபம் மாதந்தோறும் ₹5000 பொற்காசுகள் கொடுத்து வாழை இலை உபயம் செய்து கொண்டிருக்கிறது.

மேலும் வடலூர் சத்திய தருமச்சாலைக்கு வரக்கூடிய சன்மார்க்கிகளுக்கு பிரசாதமாக மூக்கு கடலை ஒரு மூட்டை கொடுத்து  தீபம் அறக்கட்டளை வடலூர் தர்மசாலை மூலம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு 4 ஆயிரம் பொற்காசுகள் மாதந்தோறும் செலவு ஆகிறது.

மேற்கண்ட இந்த இரண்டு பொருட்களுக்கும் உபயம் அளிக்க விரும்புபவர்கள் மாதந்தோறும் பூச நாளிலோ அல்லது பூசத்திற்கு முன்பாகவும் நன்கொடையாக வங்கிப் பரிமாற்றம் செய்யலாம் அல்லது காசோலை அடைக்கலாம்.

தர்மம் செய்ய விரும்பு பவர்கள் மேலும் விவரங்களுக்கு தீபம் அறக் கட்டளையை தொடர்பு கொள்ளவும்.

பூசம் வாழ்த்துக்களுடன்...

 நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
சென்னை வேளச்சேரி
9444073635

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...