Wednesday, 1 May 2019

ஏழை பெண்மணிக்கு வாழ்வாதார உதவி - (01.05.2019)


திருவள்ளூர் மாவட்டம், ஈஞ்கூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி என்பவர் தனது கணவரின் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் தன் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை சுமந்து துணிகளுக்கு இஸ்திரி போடும் தொழிலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார். தற்போது தன் குடும்பத்தையே காப்பாற்றக்கூடிய இஸ்திரி பெட்டி பழுதடைந்து விட்டதால் புதிய இஸ்திரி பெட்டி வேண்டி தீபம் அறக்கட்டளைக்கு விண்ணப்பித்திருந்தார்.

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன்தீபம் அறக்கட்டளை சாந்தி என்பவருக்கு புதிய இஸ்திரி பெட்டி வழங்க திருவுள்ளம் கொண்டு புதிய இஸ்திரி பெட்டி RS.5487/- இன்று ஏழை பெண்ணின் வாழ்விற்கு, வாழ்வாதாரத்திற்கு நித்திய தீப தர்மசாலையில் வழங்கப்பட்டது( படம் பார்க்கவும்).

ஆதரவற்ற ஏழைக் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு வாரி வழங்கிய வள்ளல்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம் !!!

உலகம் தர்ம பூமியாக மாறட்டும் ; மலரட்டும் !!!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி, சென்னை
தொடர்புக்கு:-
04422442515 / 9444073635

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...