Tuesday 7 May 2019

தேவதானம் பேட்டை - (05.05.2019)



நித்ய தீப தர்மசாலை குழு அன்பர்களுக்கு

வணக்கம் ! வந்தனம் !!!

தீபம் அறக்கட்டளை  செய்யும் சமுதாய பணிகளை, அன்னதான பணிகளை, அறப்பணிகளை,
தங்களுக்கு வாட்ஸ் அப்பில் படங்களுடனும் விளக்கங்களுடனும் தீபம் நன்கொடையாளர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.

தீபம் அறக்கட்டளையின் 20 தர்ம சாலைகளில் ஒன்றான, செஞ்சி வட்டம் தேவதானம் பேட்டை கிராமத்தில் அருளாளர் அண்ணாமலை ஐயா அவர்கள் தலைமையில் மேற்பார்வையில்,
பசித்து வருபவர்களுக்கு,
நாடி வருபவர்களுக்கு,
தேடி வருபவர்களுக்கு, காலையில் அருட்கஞ்சி கொடுக்கக்கூடிய அற்புத காட்சியை பார்த்து நெகிழ்ந்து போனோம். மகிழ்ந்து போனோம்.

தற்பொழுது உங்களுக்கு இரண்டு படங்களையும் ஒரு நிமிடம் ஓடக்கூடிய அன்னதான வீடியோ காட்சியும் அனுப்பியுள்ளோம்.

இந்த காட்சியை பார்த்த பிறகு  இதற்கான தங்களுடைய
எண்ணத்தை,
விளக்கத்தை,
பார்வையை,
கருத்துக்களை

ஆங்கிலத்திலோ தமிழிலோ அல்லது ஆடியோவாக பதிவு செய்து அனுப்பலாம்.

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம்!!!

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...