Wednesday 15 January 2020

தர்மம் செய்வதால் அடையும் நன்மைகள்

=====================
திருமந்திரம்
====================

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமம் செய்யாதவர் தம்பாலதாகும்.

உருமிடி நாகம் உரோகணி               
கழலை தருமம் செய்வார்
பக்கல் தாழாகிலவே.

- திருமூலர்

பொருள்
========

இருமலும், இரத்தம் குறைவால்வரும் இரத்த சோகை என்னும் நோயும், சளியும்,
கணைச்சூடும் போன்றவை
எல்லாம் பிறருக்கு உதவி செய்யாதவர்க்கே உரிய
உடைமைகளாகும்.

அச்சம் தரும் இடி,
நாகம்-இராகு,கேது ஆகிய பாம்புகளால் வரும் தொல்லைகள்,
உரோகிணி
நட்சத்திரத்தால்   சிலருக்கு விளையும் தீமைகள்,முன் கழுத்துக் கழலைபோன்றகட்டிகள், எல்லாம், தருமம்
செய்பவர்கள்
பக்கம் நெருங்காது.

சித்தர்கள் பிறருக்கு தருமம் செய்வதை வற்புறுத்திப்பாடல்கள் படைத்துள்ளனர். உலக
மக்கள் பசியற்று இருப்பதே அவர்களின்
தலைமையான குறிக்கோள்.
திருமூலரும் இப்பாடலில் தருமத்தை வலியுறுத்தியுள்ளார்.

வாழ்க தர்மம் !!!
வளர்க தர்மம்!!!

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம்!!!

என்றென்றும் அறப்பணியில்... தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
9444073635

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...