Sunday, 19 January 2020

19.01.2020 - ரோட்டோரம் ஆதரவற்றவர்களுக்கு நள்ளிரவில் போர்வைகள் வழங்குதல் -11 ஆம் ஆண்டு

சென்னை வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும்
ரோட்டோரம் பாலங்களுக்கு அடியில்
பாலங்களுக்கு மேல்
பஸ் நிறுத்தங்களில்
ரயில்வே நிலையங்களில் நள்ளிரவில் சாலைகளை சுத்தம் செய்யும் பாமர மகளிருக்கு ஆதரவற்றவர்களுக்கு
குளிரால் நடுங்கி கொண்டிருப்பவர்களுக்கு தொடர்ந்து 11 வது ஆண்டாக தேடிச்சென்று போர்வைகள் வழங்கிக் கொண்டிருக்கிறது.

இன்று (19.1.20) நள்ளிரவு
1 மணி முதல் விடியற்காலை வரை தீபம் அறக் கட்டளையின் சார்பாக நள்ளிரவில் மனிதநேய மாண்புடன் போர்வைகள் அளித்த காட்சி.
(1 நிமிட படக்காட்சியாக).



போர்வைகளுக்கு நிதி தந்த அருளாளர்களை
தீபம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

இரண்டாம் கட்டமாக வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி  (சனிக்கிழமை இரவு) டாட்டா ஏஸ் வாகனம் மூலம் நள்ளிரவில் ஆரம்பித்து விடியற்காலை வரை நூற்றுக்கணக்கான போர்வைகள் மற்றும் உணவு வழங்கக்கூடிய அற்புதமான நிகழ்வு.

இந்த புண்ணிய தொண்டில் ஆன்மநேய அன்பு உள்ளங்கள் கலந்து கொண்டு
ஆன்ம லாபம் அடையுமாறு தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.

தயவுடன் ...
என்றென்றும் இறை பணியில்...
நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
9444073635

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...