Sunday 12 January 2020

12.01.2020 - பசி ஆற்றுவித்தல் தொடர் திருத்தொண்டு:


ஒவ்வொரு மாதமும் மாத பூச நன்னாளில் வடலூர் சத்திய தருமச்சாலையில் தீபம் அறக்கட்டளையின் திருத்தொண்டர்கள் நாகப்பட்டினம் அகல்விளக்கு மன்ற சன்மார்க்க சாலை சம்பந்திகள் உடன் சேர்ந்து அன்னம் பாலிக்கக் கூடிய திருத்தொண்டில் கடந்த 77 மாதங்களாக நாள் முழுவதும் சத்திய தரும சாலை ஓய்வின்றி தொடர் பசி ஆற்று வித்தல் திருப்பணி செய்து வருவது தாங்கள் அறிந்ததே.






11.1.20- மாத பூச நன்னாளில் திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் தம் திருக்கரங்களினால் ஏற்றிய அடுப்பில்
தீபம் திருத்தொண்டர்கள், நாகப்பட்டினம் சன்மார்க்க அன்பர்களின் அற்புதமான சேவையின் சில காட்சிகள்...
கண்டு மகிழுங்கள்...
தொண்டு செய்த
திரு தொண்டர்களை வாழ்த்துங்கள்...
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம்...

தொண்டு பற்றி அவ்வையார்:

எது பெரிது?

பெரிது பெரிது புவனம் பெரிது!
புவனமோ அரவின் தலை பாகம்!
அரவமோ உமையவள் இடதுகை சிறுவிரல் மோதிரம்!
அன்னையோ ஐயனுள் அடக்கம்!
ஐயனோ தொண்டர்தம் உள்ளத்து அடக்கம்!
தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே!!!

தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம்!!!

அடுத்த மாதம் பிப்ரவரி எட்டாம் தேதி (8.2.20) சனிக்கிழமை தைப்பூசம்.

வடலூரில் மூன்று நாட்கள் தொடர் அன்னதான திருத்தொண்டு ...

வடலூர் ஞானசபையில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் காண...

வடலூர் ஜோதி தரிசனம் காண வரும் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு
தீபம் அறக்கட்டளையின் சார்பாக 2 டன் அரிசியில் அன்னம் பாலித்தல்...

விரிவான செய்தி விரைவில்...

எல்லாப் புகழும் அருட்பெருஞ்சோதி ஆண்டவருக்கே !!!

தொடர் தொண்டு செய்யும் தீபம் அறக்கட்டளையின் அடியவர்களையும்,
உலகம் முழுவதும்
உண்மை தொண்டு செய்துவரும்
ஆன்ம நேய அன்பு உள்ளங்களின் பொற் பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.

தயவுடன் 
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...