Monday, 27 January 2020

29.01.2020 - கருணை இல்லம் குழந்தைகளுக்கு உணவு

மகிழ்வித்து மகிழ்தல்

ஓடி ஓடி உழைக்க வேண்டும்
ஊருக்கெல்லாம் கொடுக்கவேண்டும்
ஆடி பாடி நடக்கவேண்டும்
அன்பை நாளும் வளர்க்க வேண்டும்.

என்ற அற்புத வரிகளுக்கேற்ப தீபம் அறக்கட்டளையானது சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள குழந்தைகள் காப்பகம்
முதியோர் காப்பகங்கள்
மாற்று திறனாளி இல்லங்களுக்கு
உடைகள் தந்து
உணவு தந்து,
அரிசி தந்து
ஆடி பாடி மகிழ்விக்க கூடிய அருட்பணியை செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மாடம்பாக்கம் கருணை இல்லம் குழந்தைகளுடன் ஆடிப்பாடி உணவு தந்து மகிழ்வித்த தருணம்... ஓரிரு காட்சிகளை ஒரு நிமிட பதிவாக கண்டு மகிழுங்கள்...








இந்த சமுதாய நிகழ்விற்கு உபயம் செய்த வேளச்சேரி எக்ஸலண்ட்  மருத்துவமனை நிறுவனர் டாக்டர் B செந்தில் நாதன் ஐயா அவர்களையும் ஓயாது சேவை செய்து வரும் தீபத்தின் சேவதாரிகளையும் தீபம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

அடுத்த நிகழ்வு அடையாறு ஆந்திர மகிள சபா குழந்தைகளுக்கு உணவு தந்து அரசி கொடுத்து ஆடைகள் கொடுத்து ஆடிப்பாடி மகிழ்விக்க... வாருங்கள் மகிழ்வித்து மகிழ்வோம்!!!

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

தயவுடன்...
நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...