Monday 27 January 2020

சன்மார்க்க அன்பர்களுக்கு காலை உணவு வழங்குதல்

நாள் : 29 1 2020 புதன்கிழமை
நேரம் :காலை 7 மணி
இடம் : குருநானக் கல்லூரி வேளச்சேரி

வரும் புதன்கிழமை 29 1 2020 அன்று சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அருளிய திரு அகவல் ஓதுதல் என்ற பிரம்மாண்டமான நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக நிகழ்ச்சிக்கு சென்னை மற்றும் தமிழகத்தில் இருந்து வரக்கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்களுக்கு காலை உணவு தருவதற்கு இறையருள் நமக்கு கட்டளையிடுகிறது.
பாக்கு தட்டில் உணவு தர இருக்கிறோம். நிதி பொருள் உழைப்பு மூன்றும் தேவைப்படுகிறது.

காலை உணவு:
1) Sakkarai Pongal
2) Ven pongal
3) Sambar
4) Cocount Chutney
5) Idili

இந்த அற்புதமான சமுதாயப் பணிக்கு உணவு தயாரித்து கொடுப்பதற்கு தீபம் சேவடிகள் நேரில் வந்து உதவுமாறு தீபம் கேட்டுக்கொள்கிறது.

திருஅகவல் நிகழ்வில் தீபம் நிர்வாகிகள் மற்றும் தீபம் சேவகர்கள் கலந்துகொண்டு ஆன்மலாபம் பெறுமாறு தீபம் அழைத்து மகிழ்கிறது.

இட்லி மாவு அரைத்தல்
இட்லி தயாரித்தல் மிகப்பெரிய பணி.
புதன்கிழமை விடியற்காலை இரண்டு அல்லது மூன்று மணி அளவில் அடுப்பு ஏற்ற வேண்டும்.

சேவை செய்ய விருப்பமுள்ளவர்கள் நாளை இரவே தர்ம சாலைக்கு வந்து விடவும்.

எதிர்பார்ப்புடன்...
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...