Thursday 12 October 2017

தீபாவளி திருநாளில் மகிழ்வித்து மகிழ வாருங்கள்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் எட்டாவது  ஆண்டாக தீபாவளி (18-10-2017) திருநாளில் ஆதரவற்ற இல்ல குழந்தைகளையும் மற்றும் முதியோர்களையும் ஊக்கப்படுத்தி ஸ்வீட்ஸ், காரம் மற்றும் பட்டாசுகளை வழங்கி மகிழ்வித்து மகிழ தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

கடந்த வருட நிகழ்ச்சி வீடியோ பதிவாக காண இங்கே கிளிக் செய்யவும் https://youtu.be/GdT-01W3WVA


வருகிற 18-10-2017 புதன்கிழமை அன்று தீபாவளி திருநாள் வருவதை முன்னிட்டு சென்னையில் உள்ள 10 முக்கிய ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு ஸ்வீட்ஸ் & காரம் மற்றும் பட்டாசுகளை வழங்கி அவர்களை மகிழ்வித்து அவர்களுடன் இணைந்து தீபாவளி திருநாளை கொண்டாட விரும்பும் அன்பர்கள், தயவாளர்கள், சன்மார்க்க சொந்தங்கள் மற்றும் அனைவரும் கலந்து கொண்டு பலகாரங்கள் செய்வதற்கு உண்டான பொருளை அருளாகவோ, நிதியை மதியாகவோ வாரி வழங்கி தாங்களும் இப்புண்ணிய தொண்டில் பாகம் பெற்று ஆன்மலாபம் பெற அன்புடன் அழைக்கிறோம்.

வருகிற 14-10-2017 சனிக்கிழமை இரவு முழுவதும் பலகாரங்களை சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் தயாராகிறது. 15-10-2017 திங்கள் அன்று ஆதரவற்ற இல்லங்களுக்கு தேடிச்சென்று வழங்க உள்ளோம். 5,000 லட்டு மற்றும் காராபூந்தி, மிக்ஸர் போன்றவை தயாரிக்க முழு செலவாக Rs.25,000/- வரை ( பலகார செய்ய தேவையான பொருட்களுக்கு மட்டும்) செலவாக உள்ளது. இதை பாகமாகவோ அல்லது முழுமையாகவோ அல்லது பொருளாகவோ வாரி வழங்கி எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருள் பெற்று இன்புற்று வாழ அன்புடன் அழைக்கின்றோம்.

லட்டு பிடிப்பதற்கும், பலகாரங்களை பாக்கெட் செய்வதற்கும் அதிகளவில் சேவதாரிகள் தேவைப்படுகிறார்கள். வருகிற 14-10-2017 சனிக்கிழமை மாலை சரியாக 6-00 மணிமுதல் மறுநாள் காலை வரை தொடர்ந்து பலகாரங்களை தயாரிக்க வேண்டி இருப்பதால் ஆடுகின்ற சேவடிகள் அனைவரும் நித்ய தீப தருமச்சாலைக்கு 14-10-2017 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்குள் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி: 
அலுவலகம்:
தீபம் அறக்கட்டளை
30, திரௌபதி அம்மன் கோவில் தெரு
வேளச்சேரி, சென்னை-600042

தருமச்சாலை:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரை தெரு
வேளச்சேரி, சென்னை-600042

அலைபேசி எண்: 044-22442515
கைபேசி எண்கள்: 9444073635

Donations may be sent by crossed cheque to

DEEPAM TRUST.
30,Drowpathi Amman Koil Street
Velachery, Chennai- 600042


இது ஓர் 80G வருமான வரி விலக்கு பெற்ற, அரசு பதிவு பெற்ற ஆன்மநேய அறத்தொண்டு நிறுவனம்.
மேலே கண்ட முகவரிக்கு நிதியை வாரி வழங்க வேண்டுமாய் தங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறோம்.

Bank Transfer செய்த பின் நன்கொடை விபரங்களை மேலே கண்ட அலைபேசி நம்பருக்கோ அல்லது கைபேசி நம்பருக்கோ தகவலை தெரியப்படுத்துங்கள்.
மேலும் SMS மற்றும் WhatsApp நம்பருக்கும் (9444073635) தகவலை தெரியப்படுத்தலாம்.

நிதியாகவோ, பொருளாகவோ வாரி வழங்கும் தயவாளர்களின் முகவரிக்கு ஐந்து நாட்களுக்குள் இரசீது வந்துவிடும்.

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...