Monday 2 October 2017

01.10.2017 - முதுகுளத்தூர் தருமச்சாலை திறப்புவிழா

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பில் கடந்த 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. வள்ளல்பெருமான் வருவிக்கவுற்ற பெருநாள், சங்கத்தின் 22 ம் ஆண்டு துவக்க விழா, விரிவாக்கம் செய்யப்பட்ட தருமச்சாலை திறப்புவிழா ஆகிய முப்பெரும் விழாவில் நாகப்பட்டினம் அருட்பெருஞ்ஜோதி அகல் விளக்கு மன்றத்தினரால் அகவல் பாராயணம் நடத்தி தயவுமிகு. இராமமூர்த்தி அய்யா அவர்கள் சன்மார்க்க நீதிக்கொடி ஏற்றி வைத்தும்,  சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நிறுவனர் தயவுமிகு. மு.பாலகிருஷ்ணன் அய்யா புதிய தருமச்சாலையை திறந்து வைத்தும் சிறப்பித்துள்ளனர். விழாவிற்கு தலைமை ஏற்று சைவமணி. சௌளந்தராஜன் அவர்கள் அருளுரை வழங்கினார்கள். இவ்விழாவில் மரணமில்லாப் பெருவாழ்வு எனும் தலைப்பில் ஈரோடு கதிர்வேலனார் அவர்களும், அருந்தமிழும் அருட்பாவும் எனும் தலைப்பில் கவிமாமணி. கங்கை மணிமாறன் அவர்களும் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றி உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தயவு.ப்ரம்மஶ்ரீ பழனிச்சாமி அய்யா அவர்களும், தயவுமிகு. ஜோதி சதுரகிரியார் அவர்களும் மற்றும் முதுகுளத்தூர் சன்மார்க்க சங்கத்தினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

விழாவில் சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். நன்றியுரை ஆற்றி  மருத்துவர். ௐ சரவணபவ அவர்கள் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.










No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...