Wednesday 4 October 2017

05.10.2017 & 06.10.2017 உலகளாவிய சமரச சுத்த சன்மார்க்க மாநாடு

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளாசியுடன் தருமமிகு சென்னையில் 2017 அக்டோபர் திங்கள் 5 & 6 ம் தேதிகளில் நடைபெறும் அகில உலகளாவிய சமரச சுத்த சன்மார்க்க மாநாட்டிற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு மாபெரும் பசியாற்றுவிப்பதற்கு உண்டான சமையல் பொறுப்பை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டுள்ளது.  

அனைத்துலக சன்மார்க்க சங்கத்தினரை ஒருங்கிணைந்து காணக்கூடிய பாக்கியத்தையும், அவர்களுக்கு பசியாற்றுவிக்கக்கூடிய அரும்பெரும் தொண்டையும் நினைத்து தீபம் அறக்கட்டளை பெருமிதம் அடைகிறது.

மாநாட்டிற்கு வருகைதரும் சன்மார்க்க சொந்தங்களுக்கும், ஜீவகாருண்ய ஈர நெஞ்சினர்களுக்கும் தீபம் அறக்கட்டளையானது  இன்சுவை உணவு வழங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. அதற்தான ஆயத்தபணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நடைபெற இருக்கின்ற சன்மார்க்க மாநாட்டிற்கு பல்லாயிரக்கணக்கானோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் 48 மணி நேர தொடர் சமையல் பணிக்கும், காய்கறிகளை வெட்டும் பணிக்கும் 60 க்கும் மேற்பட்ட ஆடுகின்ற சேவடிகள் தேவைப்படுவதால் கிடைப்பதற்கரிய இந்த மாசில்ல புண்ணியத் திருத்தொண்டில் பங்கு பெற்று ஆன்மலாபம் பெற தங்களை அன்புடன் வேண்டி அழைக்கிறோம். 

குறிப்பு: சேவைப்பணி நேரங்களில் ஓய்வு எடுப்பதற்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதனை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இடம்: கலைவாணர் அரங்க வளாகம், சேப்பாக்கம், சென்னை

04-10-2017 புதன்கிழமை இரவு 8-00 மணிக்குள் அனைவரும் வருகை புரியுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்னதான சமையல் பொறுப்பை தீபத்தின் பொதுச்செயலாளர் அறுசுவை அரசன் தளபதி V.பாரதி அவர்கள், தீபத்தின் அறங்காவலர் அன்னதானச் செம்மல் S.கணபதி அவர்கள், தீபத்தின் து.தலைவர் காருண்ய வடிவம் M.வேல்முருகன் அவர்கள், தீபத்தின் பொருளாளர் சேவையின் இலக்கணம் தயவு.ஆனந்தன் அவர்கள், தீபத்தின் ஆடுகின்ற சேவடி சமையலில் சகலகலா வல்லவன் தயவு. காந்தி அவர்கள் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு, தீபம் அறக்கட்டளையின் மூத்த நிர்வாகி A G பாண்டுரங்கன் அய்யா தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆடுகின்ற சேவடிகள் பங்கு பெறுகின்றனர்.

அன்னதானத்திற்கு உதவும் கரங்கள் , வாரி வழங்கும் வள்ளல்கள் யாவரும் தீபம் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டுமாறு ஆன்ம நேய உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். ஜீவ காருண்யத்திற்கு தேவையான  அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை சாமான்கள், காய்கறிகள் போன்ற அனைத்து பொருள்களும் தீபம் அறக்கட்டளையை  தொடர்பு கொண்டு  அன்புடன் வாரி வழங்க வேணுமாய் மாநாட்டுக்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம். ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பார் வள்ளலார்.

மாநாடு சிறப்பாக நடைபெற ஜீவ காருண்யமே சிறந்தது என்பதை அனைவரும் அறிந்து நிதி உதவி மற்றும் பொருள் உதவி செய்து ஆன்ம லாபத்தை பாகம் செய்து கொள்ளுமாய் வேண்டுகிறோம்.

தீபம் அறக்கட்டளை முகவரி மற்றும் வங்கி கணக்கு எண் போன் கீழே தரப்பட்டு உள்ளது.

Donations may be sent by crossed cheque to
Deepam TRUST.
30.Drowpathi Amman koil Street .
Velachery.
Chennai.600042.

For Bank Transfer.
State Bank of India - IIT Branch
Current A/C No - 30265475129
IFSC..SBIN 0001055

தீபம் அறக்கட்டளை 80G வரி விலக்கு பெற்ற, அரசு பதிவு பெற்ற, ஆன்ம நேய தொண்டு நிறுவனம்.

மேலே கண்ட முகவரிக்கு தொடர்பு கொண்டு நன்கொடைகளை மகிழ்ச்சியுடன் வழங்கவும்..

Bank Transfer செய்த பின் நன்கொடை  விவரங்களை தீபம் அறக்கட்டளைக்கு 9444073635 என்ற எண்ணுக்கும்,  தகவலை sms அல்லது Whatsapp மூலம் தெரிவிக்கவும். 

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...