Friday 18 December 2020

புதிய தர்மசாலைகள் துவக்கம்

தயவுடையீர்,

வணக்கம் வந்தனம்!

மேலும் 3 புதிய கிராம தர்மசாலைகள் துவக்கம்

சத்திய தருமச்சாலை

உயிர் குலத்தின் பசிப்பிணியைப் போக்கினால் மட்டுமே அறிவு விளக்கம், ஆன்ம விளக்கம்  பெற்று,

இறைவனிடம் தீராத  அன்பு காதல் கொண்டு, நெருங்கிய உறவால் பூரண அருள் பெறலாம் என்ற உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தவே 1867 ஆம் ஆண்டு வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத்  தோற்றுவிக்கின்றார் இராமலிங்க அடிகள் எனும் திருவருட் பிரகாச வள்ளலார். திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றிய வடலூர் சத்திய தருமச்சாலை  நெருப்பு அடுப்பு இன்றுவரை இடைவிடாது தொடர்ந்து மக்களின் பசிப்பிணியை போக்கிவருகின்றது.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால்  சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கடந்த 14 ஆண்டுகளாக அரசு பதிவுபெற்ற வருமான வரிவிலக்கு பெற்ற ஓர் சமுதாய அற தொண்டு நிறுவனமாக வள்ளலார் வகுத்த சன்மார்க்க பாதையில் தமிழகத்தின் பல்வேறு கிராம கிளை தருமச்சாலைகள் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான மக்களின் பசியை போக்கி வருகிறது.

கிராமம் தோறும் தர்மச் சாலைகளை துவங்கி மக்களின் பசிப்பிணியை போக்கக்கூடிய ஓர் உயர்ந்த தெய்வீக பணியை சமுதாயப் பணியை தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களின் பேராதரவினால் தொடர்ந்து மக்களின் பசியைப் போக்கிக் கொண்டு இருக்கிறது.

சென்ற மாதம் சித்தூர் மாவட்டம் நகரி மண்டலம் ஏகாம்பரகுப்பம் கிராம தர்ம சாலையையும், தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் வங்கனூர் கிராமத்தில் ஓர் தருமச் சாலையையும் புதியதாக துவங்கி காலையில் "திரு அமுது வள்ளலார் கஞ்சி" வழங்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் மேட்டுக்குப்பம் பாவதூர் கிராமத்திலும், 

ஆந்திர மாநிலம் நகரி வட்டத்தில் சத்திரவாடா கிராமத்திலும், 

திருத்தணியை அடுத்து மத்தூர் கிராமத்திலும், 

விரைவில் புதிய தர்ம சாலைகள் துவங்க உள்ளோம்  என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

பஞ்சபூதங்களால் பின்னப்பட்ட  உடம்பை, பஞ்ச பூதங்களில் கலக்காமல், பஞ்சபூதங்களால் சிதைக்காமல் இயற்கை உண்மை தனித் தலைமை பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பூரண அருள் பெற்று பூத தேக உடம்பின் அணுக்களை அருள் ஒளிதேக அணுக்களாக மாற்றி அதாவது கடவுள் நிலைக்கு தன்னை தகுதியாக்கி இறைவனுடன் கலந்து வாழ்வதே பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்  என்ற அருட்பிரகாச வள்ளலாரின் பாதையில் பயணிக்க வாருங்கள் என்று தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களை வருக வருக ஆன்ம லாபம் பெருக என்று அழைத்து மகிழ்கிறோம். கிராம தர்ம சாலைகளில் உபயம் செய்ய விரும்பும் தயவாளர்களின் பாதம் பணிந்து வணங்குகிறோம்.

பஞ்சம் என்பதே இல்லாத நிலையை பாரதம் பெறவேண்டும்.

தயவுடன் ...

என்றென்றும் சன்மார்க்க பணியில் ...

தீபம் அறக் கட்டளை 

வேளச்சேரி சென்னை


Nithya Deepa Dharumachalai

No.7/8, Putherikarai Street

(Near Dandeeswaram Temple)

Gandhi Road stopping

Velachery, Chennai 42

Mobile: 9444073635

Landline No.: 04443358232

www.deepamtrust.org

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...