Friday 15 September 2017

16-09-2017 - வடலூர் மாத பூச சேவை பயணம்

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் 1867ம் ஆண்டு உத்தர ஞான சிதம்பரம் எனும் பார்வதிபுரத்தில் (வடலூரில்) தனது திருக்கரங்களால் அக்னி ஏற்றி சத்திய தர்மச்சாலையை தோற்றுவித்து பசியால் வாடும் வறியவர்களின்  வயிற்றுப் பிணியாகிய பசிப்பிணியை போக்கி அன்று முதல் இன்று வரை 151 ஆண்டுகளாக  அணையா அடுப்பாக இருந்து உலக உயிர்களிடையே ஓர் சமரசப் புரட்சியை ஏற்படுத்தினார்.

ஈரேழு அண்டங்களும் போற்றும் வடலூர் அணையா அடுப்பு உள்ள சத்திய தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் பூச பெருநாளில் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கடந்த 46 மாதங்களாக ஆன்மநேய சேவைப் பயணமாக வடலூர் சென்று நாள் முழுவதும் சத்திய தருமச்சாலையிலே அன்னதான திருத் தொண்டு செய்து வருகிறோம். கிடைப்பதற்கரிய இந்த புண்ணியத் தொண்டில் தாங்களும் கலந்து கொண்டு ஆன்மலாபம் பெற தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

சென்னை வேளச்சேரி "தீபம் அறக்கட்டளை"யின் சார்பில் வடலூர் மாதபூச ஜோதி தரிசன நாளை முன்னிட்டு "சத்திய தர்மச்சாலை"யில் 46 மாதமாக சமையல் பணிக்கும், காய்கறி வெட்டுவதற்கும் மற்றும் ஆன்மநேய அறப்பணிகளை நிறைவேற்ற வடலூர் "சேவைப்பயணம்" - நாள் முழுவதும் அன்னம்பாலிக்கும் அறப்பணி !

வருக ! அருள் பெறுக !!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
15-09-2017 வெள்ளிக்கிழமை இரவு 8-00 மணியளவில் சென்னை வேளச்சேரி "நித்ய தீப தருமச்சாலை" யில் இருந்து வேன் வாகனம் புறப்படுகிறது. 16-09-2017 சனிக்கிழமை நாள் முழுவதும் ஆன்மநேய சேவை.

தொடர்ப்புக்கு:
தீபம் அறக்கட்டளை
04422442515

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...