Sunday, 6 January 2019

05.01.2019 - தீபம் அறக்கட்டளையின் சன்மார்க்க சொற்பொழிவு









சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதாந்திர முதல் சனிக்கிழமை சன்மார்க்க சொற்பொழிவு நேற்று (05-01-2019) மாலை 6-30 மணியளவில் 13 மாத சொற்பொழிவாக சாகாவரமளிக்கும் சுத்த சன்மார்க்கம் என்கிற தலைப்பில் விருகம்பாக்கம்  சன்மார்க்க முரசு தயவுமிகு இராஜவேல் அவர்கள் உரையாற்றினார்கள். திரளான அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பசியாற்றுவித்தல் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் தீபம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அடுத்த மாதம் முதல் சனிக்கிழமை சொற்பொழிவு நடைபெறும் நாள்: 02-02-2019(சனிக்கிழமை)
தலைப்பு: வள்ளல்பெருமான் பெற்ற பெருவெளி

உரை நிகழ்த்துபவர்:
மலைகளின் தென்றல், இயற்கை மூலிகைகளின் தங்கம், கள்ளக்குறிச்சியின் சன்மார்க்க சிங்கம்
தயவுமிகு பொதிகைப் ப்ரியன் (எ) கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
கள்ளக்குறிச்சி

அனைவரும் வருக!
அருளமுதம் பெறுக!

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...