Wednesday 17 October 2018

தீபாவளி திருநாளில் மகிழ்வித்து மகிழ வாருங்கள்!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் 9வது  ஆண்டாக தீபாவளி (06-11-2018) திருநாளில் ஆதரவற்ற இல்ல குழந்தைகளையும் மற்றும் முதியோர்களையும் ஊக்கப்படுத்தி ஸ்வீட்ஸ், காரம் மற்றும் பட்டாசுகளை வழங்கி மகிழ்வித்து மகிழ தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

கடந்த வருட நிகழ்ச்சி வீடியோ பதிவாக காண இங்கே கிளிக் செய்யவும் https://youtu.be/GdT-01W3WVA




வருகிற 26-10-2018 வெள்ளிக்கிழமை  இரவு முழுவதும் பலகாரங்களை சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் தயாராகிறது. ஆதரவற்ற இல்லங்களுக்கு தேடிச்சென்று வழங்க உள்ளோம். 5,000 லட்டு மற்றும் காராபூந்தி, மிக்ஸர் போன்றவை தயாரிக்க முழு செலவாக Rs.25,000/- வரை ( பலகார செய்ய தேவையான பொருட்களுக்கு மட்டும்) செலவாக உள்ளது

சென்னையில் உள்ள 10 முக்கிய ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு ஸ்வீட்ஸ் & காரம் மற்றும் பட்டாசுகளை வழங்கி அவர்களை மகிழ்வித்து அவர்களுடன் இணைந்து தீபாவளி திருநாளை கொண்டாட விரும்பும் அன்பர்கள், தயவாளர்கள், சன்மார்க்க சொந்தங்கள் மற்றும் அனைவரும் கலந்து கொண்டு பலகாரங்கள் செய்வதற்கு உண்டான பொருளை அருளாகவோ, நிதியை மதியாகவோ வாரி வழங்கி தாங்களும் இப்புண்ணிய தொண்டில் பாகம் பெற்று ஆன்மலாபம் பெற அன்புடன் அழைக்கிறோம்.

இது ஓர் 80G வருமான வரி விலக்கு பெற்ற, அரசு பதிவு பெற்ற ஆன்மநேய அறத்தொண்டு நிறுவனம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
தீபம் அறக்கட்டளை
30, திரௌபதி அம்மன் கோவில் தெரு
வேளச்சேரி, சென்னை-600042
www.deepamtrust.org
22442515/9444073635

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...