Monday 15 October 2018

14.10.2018 - தேனாம்பேட்டை வள்ளல்பெருமான் வருவிக்கவுற்ற பெருநாள் விழா












இன்று நமது தீப தருமச்சாலையில் 2200 அன்பர்களுக்கு பசியாற்றுவிப்பதற்தாக அன்னதான சமையல் பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று தேனாம்பேட்டை வள்ளல்பெருமான் வருவிக்கவுற்ற பெருநாள் விழாவுக்கு அனுப்பப்பட்டது. மூன்று வேளையும் விதவிதமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டது. இந்த அன்னதான பொறுப்பினை ஏற்று திறம்பட நடத்தி தரும்படி  நமது தீபம் அறக்கட்டளையின் நிர்வாகிகளான 

1, ஆனந்த் (பொருளாளர்)
2, செந்தில் (செயலாளர்)
3, வெங்கடேஷ் (உறுப்பினர்) ஆகியோர்களிடம் சில நாட்களுக்கு முன்பு  பொறுப்புக்களை ஒப்படைத்து இருந்தோம். 

வெங்கடேஷ் அவர்கள் நேற்றிரவே வருகை தந்து மீண்டும் இன்று அதிகாலையில் வருகை தந்து பணிகள் முடியும்வரை (மாலை 6-00 மணிவரை) முழுநேரமும் தன்னை அர்ப்பணித்து திறம்பட சேவைகளை செய்தார்.

தீபம் அறக்கட்டளை இட்ட பணியினை காலம் தாழ்த்தாது முன்கூட்டியே வருகைதந்து ஒத்துழைப்பு நல்கி, நாள் முழுவதும் தன் கடமையை திறம்பட நடத்தி தந்த தயவுமிகு. வெங்கடேஷ் அவர்களை தீபம் வாயார, உளமார, இதமார, மனமார வாழ்த்தி அவர்தம் தொண்டிற்கும் சேவைக்கும் தலை வணங்குகிறது.


இன்றைய சேவைக்கு அர்ப்பணித்திருக்கின்ற சேவடிகளை தீபம் வாழ்த்தி தலை வணங்குகிறது.

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...