Thursday 20 February 2020

மகிழ்வித்து மகிழ்தல் - மனம் நலம் குன்றிய குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்குதல்

23.2.20 - அடையாறு ஆந்திர மகிள சபா இல்லக்குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்குதல்

ஓடி ஓடி உழைக்க வேண்டும் ...
ஊருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் ...
ஆடி பாடி நடக்க வேண்டும் ...
அன்பை நாளும் வளர்க்க வேண்டும்...

என்ற அற்புத வரிகளுக்கேற்ப அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால்,
தீபம் அறக்கட்டளையானது சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள குழந்தைகள் காப்பகங்கள்,
முதியோர் காப்பகங்கள்,
மாற்று திறனாளி இல்லங்களுக்கு,
உடைகள் தந்து,
உணவு தந்து,
அரிசி தந்து,
ஆடி பாடி மகிழ்விக்க கூடிய அற்புத
அருட்பணியை,
சமுதாயப்பணியை,
ஜீவகாருண்யப்பணியை,
தீபம் நன்கொடையாளர்களின் பேராதரவுடன் தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வரும் 23rd ஞாயிறன்று,
அடையாறு ஆந்திர மகிள சபா மனம் நலம் குன்றிய இல்லக் குழந்தைகளுடன் ஆடிப்பாடி இரவு உணவாக 150க்கும் மேற்ப்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான, செய்வதற்கு சற்று சிரமமான மசால் தோசை, இருவகையான சட்னி, சாம்பார், இனிப்பு, இயற்கை நூடுல்ஸ், வாழையிலையில்  வாழைப்பழம், தந்து மகிழ்விக்க உள்ளோம்.

அடையாறு ஆந்திர மகிள சபா மனம் நலம் குன்றிய (Special Children) அன்புக்கு ஏங்கும் குழந்தைகளுக்கு
உணவு தந்து,
அரிசி கொடுத்து,
ஆடைகள் கொடுத்து, ஆடிப்பாடி மகிழ்விக்க... வாருங்கள் !
மகிழ்வித்து மகிழ்வோம்!!!

நாள்: 23.02.2020(ஞாயிறு)
Rep.Time at Darmachala: 3 p.m.
Vol.van leaves at 3.30 pm.
Time at Home: 4 p.m. to 9 p.m.

Home Address: Andhra Mahila Sabha, opp.to Sathyabama College.,Adyar.

மேற்படி நிகழ்விற்கு
உபயம் செய்ய விருப்பம் உள்ளவர்கள்,
சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள்,
குழந்தைகளுடன் ஆடிப்பாடி மகிழ்விக்க
விருப்பம் உள்ளவர்கள்,
வரவேற்க்கப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தீபத்தை தொடர்பு கொள்ளவும்.

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

தயவுடன்...
நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
வேளச்சேரி
9444073635

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...