Friday 2 August 2019

02.08.2019 - சன்மார்க்க சொற்பொழிவு

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதாந்திர முதல் சனிக்கிழமை சன்மார்க்க சொற்பொழிவு  20வது மாத சொற்பொழிவாக நாளை ஆடி 18-ம்நாளாக வருவதால் முன்கூட்டியே இன்று (02-08-2019) வெள்ளிக்கிழமை மாலை 7-00 மணியளவில் ஜீவகாருண்யத்தின் மெய்ப்பொருள் என்கிற தலைப்பில்  அகில இந்திய வள்ளலார் பேரவையின் கடலூர் மாவட்டத்தின் தலைவரும், சன்மார்க்க வீரமங்கை தயவுமிகு. இராணி இராசதுரை  அவர்கள்  உரையாற்றினார்கள்.  






அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள்பெறும் வகையில் ஜீவகாருண்ய சம்பந்தமான மெய்ப்பொருள் விளக்கமாக  90 நிமிடம்  சொற்பொழிவு மிகமிக சிறப்பாக அமைந்தது. திரளான  அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பசியாற்றுவித்தல் நடைபெற்றது.  கலந்து கொண்ட அனைவருக்கும் தீபம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


அடுத்த மாதம் முதல் சனிக்கிழமை சொற்பொழிவு நடைபெறும் நாள்:

நாள்: 07-09-2019

தலைப்பு: உணவு ஒழுக்கம்

உரை நிகழ்த்துபவர்:  சன்மார்க்க சீலர், 
சாது வேதாசலம் அவர்கள்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், திருவொற்றியூர்

அனைவரும் வருக!
அருளமுதம் பெறுக!

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...