Saturday 24 March 2018

19 தருமச்சாலைகள்

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உள்ளம் கொண்ட அன்பு சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தீபம் அறக்கட்டளையின் பணிவான வந்தனங்கள் பல.

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானின் குருவருளாலும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளாலும், தயா உள்ளம் கொண்ட தங்களின் பெருந்தயவினாலும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது  கடந்த 21 ஆண்டுகளாக நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாய் படிப்படியாக வளர்ந்து, உயர்ந்து  இன்றைக்கு 19 தருமச்சாலைகளிலும் தாங்கள் அளிக்கின்ற அரிசி மளிகை போன்ற  பொருளாலும்,  கிள்ளி தராமல் அள்ளித்தந்த நிதியினாலும் இன்றுவரை அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது.

மேற்படி 19 தருமச்சாலைகளில் இனி எதிர்வரும் காலங்களிலும் தங்கு தடையின்றி தொடர்ந்து எல்லா நாட்களிலும் அன்ன(மூலிகை)க் கஞ்சி வழங்குவதற்கும், பசியாற்றுவிப்பதற்கும், தேவையான அரிசி மளிகை பொருட்கள் அதிகளவில் தேவைப்படுகிறது.

தயா உள்ளம் கொண்ட கொடை வள்ளல் பெருமக்களே தாங்கள் தங்கள் சக்திக்கேற்ப பொருளாகவோ, அருளாகவோ, நிதியாகவோ, மதியாகவோ, உழைப்பாகவோ வாரி வழங்கி  கிடைப்பதற்கரிய மாசில்லா  இப்புண்ணியத் தொண்டில் பாகம் அடைந்து ஆன்மலாபம் பெற்றுய்ய தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
வாரி வழங்கும் கரங்களால் உலகமே வடலூராக வேண்டும். இதன்மூலம் ஒவ்வொரு  உயிர்களின் பசிப்பிணி நீங்க வேண்டும்






தீபம் அறக்கட்டளை  ஓர் அரசு பதிவு நிறுவனம் என்பதாலும், 80G பிரிவின்படி வருமான வரிவிலக்கு பெற்றிருப்பதாலும்,
விரும்பி அளிக்கும் நன்கொடைகளை
காசோலை மற்றும் வங்கி பண பரிமாற்றம் ( Cheque or bank transfer) மூலம் மட்டுமே அனுப்புமாறு அன்புடன்
விண்ணப்பிக்கிறோம்.
Rs.2000 மேல் ரொக்க நன்கொடைகளை தவிர்க்கவும்.

அலுவலக முகவரி:
தீபம் அறக்கட்டளை
30,திரௌபதி அம்மன் கோயில் தெரு
வேளச்சேரி, -600042

For Bank Transfer:
DEEPAM TRUST
State Bank of India 
IIT Branch 
Carreent A/c.No:30265475129
IFSC:SBIN0001O55
www.deepamtrust.org


தாங்கள் மனமுவந்து  அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80G பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு


தர்மம் செய்வோம்!
தயவுடன் வாழ்வோம் !!!

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...