Saturday, 7 September 2019

06.06.2019 - மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர வாழ்வாதார உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாதந்தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் பலருக்கு வழங்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள்.

அந்த வகையில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி
 தயவு பாலசந்திரன் குடும்பத்தினருக்கும்,
சென்னை, பெரம்பூரை சேர்ந்த பார்வையற்ற
தயவு செல்வம் குடும்பத்தினருக்கும்,
ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி
தயவு பாலாஜி குடும்பத்தினருக்கும் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.





மேலும் அனகாபுத்தூரை சேர்ந்த நோயினால் வருந்துகின்ற சமுசாரி
தயவு சேகர் என்பவருக்கான டயாலிஸிக் மருத்துவ சிகிக்கைக்காக ₹5000/- க்கான காசோலை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...