Friday 14 June 2019

பத்தாம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி பெருங்கருணையினாலும், வாரி வழங்கும் தயா உள்ளம் கொண்ட தங்களின் பெருந்தயவினாலும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 10 ஆம் ஆண்டு (2019-2020 ம் கல்வி ஆண்டிற்கான) கல்வி உதவிக்கான நேர்காணல் கடந்த 8.6.2019 சனிக்கிழமை சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச் சாலையில் காலை 
 பேராசிரியர் முத்துகுமரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

86 ஏழை மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
===========================
நாள்: 16.6.2019 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9-00 மணிமுதல் மதியம் 12-00 மணிவரை
தலைமை:
 மருத்துவர் செந்தில்நாதன் Dr.CHENTHILNATHAN (FOUNDER, EXCELLENT HOSPITAL) VELACHERY, CHENNAI
இடம்: நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரை தெரு
வேளச்சேரி, சென்னை-42
===========================
Estimated Cost of this Project is:
Rs.6 to 7 lakhs.

தீபம் அறக்கட்டளை மூலம் இதுவரை கல்வி உதவி பெற்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 881.

இதுவரை தரப்பட்ட இலவச கல்வி உதவி மொத்த தொகை ரூ 49 லட்சம்.

இந்த செய்தியை கண்ணுறும் நன்கொடையாளர்கள், ஒவ்வொரு தயா உள்ளம் கொண்ட, கருணையுள்ள, சமுதாய நலம் விரும்பிகள் ஒவ்வொரு மாணவனின் மாணவியின் கல்விக்கு ஒளியேற்றி, அவர்களின் வாழ்வில் வசந்தம் உண்டாக, வாழ்வு மேம்பட தாங்களும் பாகம் பெற்று குறைந்தது ஓர் ஏழை மாணவி அல்லது மாணவரை தங்கள் பிள்ளைகளாக பாவித்து, வறுமையின் இருள் நீக்கும் ஒளியாய், வழியாய் கருணை(கல்வி)நிதியை கல்வி கட்டணம் செலுத்துவதற்கு வாரி வழங்கிட வேண்டுமாய் அன்புடன் விண்ணப்பிக்கின்றோம்.
==========================
கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு தங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
சென்னை வேளச்சேரி
- This Body is to Serve Others
9444073635
www.deepamtrust.Org


No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...