Friday 3 November 2017

03.11.2017 - சென்னையில் ஓர் உண்மையான மஹா அன்னாபிஷேகம்

இன்று 03-11-2017 அதிகாலை 3-00 மணிமுதல் தற்போது இரவு 11-30 வரை சென்னை மாநகரில் மழையால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான  வறியவர்களுக்கு வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் பசியாற்றுவித்தல் என்னும்  மஹா அன்னாபிஷேகம் மிக சிறப்பான முறையில் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் பெருங்கருணையினால் நடைபெற்றது. வேளச்சேரி, குரோம்பேட்டை, ஜமீன் பல்லாவரம், பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை, அடையார், தரமணி, கல்குட்டை போன்ற பல பகுதிகளில் சாலையெங்கும் ஓடிய மழை வெள்ளத்தில் தீபத்தின் ஆடுகின்ற சேவடிகள் நீந்திக்கொண்டும், வேன் மூலமாகவும், இடுப்பளவு தண்ணீரில் தவித்தோருக்கு சிரமம் பார்க்க்காமல், கொட்டும் மழையையும பொருட்படுத்தாமல் மஹா அன்னாபிஷேகம் (அன்னதானம்)  செய்து வறியவர்களின் உள்ளத்தை ஊக்கப்படுத்தியுள்ளனர். 








ஆடுகின்ற சேவடிக்கு ஆளானேன் ஆளாக மாக்கையெல்லாம் பெற்றேன் என்ற எம்பெருமானின் பொன்னான வரிகளுக்கு ஏற்ப செயலபட்ட தீபத்தின் ஆடுகின்ற, ஓயாது உழைக்கின்ற சேவடிகளுக்கு கோடானு கோடி நன்றி! நன்றி! நன்றி!


Helpful Links

-- 
With Regards
DEEPAM TRUST
30,Throwpathi Amman Kovil Street, Velachery, Chennai - 600 042Phone : 044-2244 2515 | Cell: 94440 73635
Email : admin@deepamtrust.in
Web : www.deepamtrust.org

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...