Wednesday 3 June 2020

வாழ்வாதார உதவி - 100 பார்வையற்ற குடும்பங்களுக்கு...

தயவுடையீர்,

வணக்கம் வந்தனம்!!!

ரயில்களில் பொருட்களை விற்று குடும்பத்தை நடத்தும், தற்போது  வாழ்வாதாரம் அற்ற, 100 பார்வையற்ற குடும்பங்களுக்கு,  வாழ்வாதார உதவியாக,  குடும்பத்திற்கு தலா ரூ.1000/- வீதம் நிதி வழங்குதல்.
~~~~~~~~~~
நாள்: 05.06.2020 (வெள்ளிக்கிழமை)
Mode: வங்கி பரிமாற்றம் மூலம்
~~~~~~~~~~
நாம் நமது பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் பார்வையற்றோர் பொருட்களை விற்பதை பார்த்திருப்போம். தமது குறையை பெரிதாக நினைக்காமல், யாரிடம் இரந்து நிற்காமல், தன் மான உணர்வுடன் உழைத்து, வியாபாரம் செய்து அதில் வரும் பொருள் கொண்டு வாழ்க்கையை வாழும் வித்தகர்கள்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்துயரில், இவர்கள் தங்கள் வாழ்வாதாத்தை இழந்து தவிக்கின்றார்கள். இவர்கள் நம்மிடத்தில் உணவுக்காக, பொருளுக்காக நிற்க விரும்பவில்லை. இவர்கள் கேட்பது வாழ்வாதார உதவி. மீண்டும் அரசாங்கம் ரயில், பேருந்து ஆகிய பொது போக்குவரத்துக்கு அனுமதியளிக்கும் போது, மீண்டும் தங்களுடைய வியாபார தொழில் தொடங்க, பணஉதவி கேட்டு இருக்கிறார்கள். 100 பார்வையற்ற குடும்பங்களுக்கு தீபம் அறக்கட்டளை உதவ முடிவு செய்திருக்கிறது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1000 ரூபாய் உதவிசெய்ய தீபம்  முடிவெடுத்திருக்கிறது.
100 X 1000 = 1,00,000/-.

இவர்களுக்கு உதவுவது நமது சமுதாய கடமையாகும்.
சிறு துளி பெரு வெள்ளம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் நிச்சயமாக அவர்களுக்கு உதவ முடியும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவ்வுலகில் தர்மம் இருக்கும் வரையில், பசித்தவர்களின் பசி போக்க, தர்ம சாலைகளில் அடுப்புகள் எரிந்து கொண்டே இருக்கும். மக்களின் பசி போக்க தர்ம சாலைகளில் அடுப்புகள் எரியும் வரை, இவ்வுலகத்தில் தர்மம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். விரைவில் கலியுகம் சத்ய யுகமாக மாறும்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
விருப்பமுள்ள நல் உள்ளங்களிடமிருந்து, மேற்கண்ட சமுதாய பணிகளுக்கு,
நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

தீபம் அறக்கட்டளை ஓர் அரசு பதிவு பெற்ற நிறுவனம் என்பதால்,
ரொக்க நன்கொடைகளை முற்றிலுமாக தவிர்க்கவும்.

For Donation thro Bank Transfer:
State Bank of India,
IIT Madras,
Current A/C No.30265475129,
DEEPAM Trust,
IFS:SBIN0001055;

After transfer, please send your Donation details such as address, email ID, purpose, date of AD etc.9444073635

எல்லாப் புகழும் தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கே !!!

அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கு
கடவுள் நிதி கொடுக்கவில்லை.
கடவுளை நாம் பார்த்ததுமில்லை.
ஆனால்  மனித வடிவில்  நிறைய தெய்வங்களை பார்த்திருக்கிறோம்.
தற்போது எண்ணிலடங்கா மனித தெய்வங்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம். இனி மனித தெய்வங்களை பார்க்கப்போகிறோம்.

தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் மனித வடிவில், தொடர்ந்து 23 ஆண்டுகளாக தீபம் அறக்கட்டளையின் பல்வேறு அறப்பணிகளுக்கும், அன்னதான பணிகளுக்கும் நன்கொடைகள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

தயவுடன்...
என்றென்றும் சமுதாய சன்மார்க்க பணியில் ...
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635
- This Body is to Serve Others
- Unselfishness is God
www.deepamtrust.org

கொரோனா காலத்தில் தீபத்தின் சேவைகளைக் காண: https://bit.ly/dtcovid19

http://deepamtrust.org/covid19-activities/

புகைப்படத் தொகுப்பு: https://bit.ly/dtcovidpg

வீடியோ: https://bit.ly/dtcovidvi

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...