Wednesday 1 April 2020

தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆகாரம் கொடுத்து பசியாற்றிவித்தல்


தயவுடையீர்,
வணக்கம் வந்தனம்!!! இவ்வுலகில் ஒரு ஜீவன் கூட பசியோடு வாடக்கூடாது ; பசியோடு இருக்கக்கூடாது ; பசியோடு இறக்கக் கூடாது. - தீபத்தின் தினசரி பிரார்த்தனை *(பட்டினியில்லா உலகத்தை உருவாக்குவோம்)* *உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக - திருஅருட்பா* கொரோனா வைரஸ் பரவல் பேரிடரால் போர்க்கால அடிப்படையில் *சென்னை வேளச்சேரி* நித்ய தீப தர்மச்சாலையிலும், மதுராந்தகம் நித்ய தீப தர்மச்சாலையிலும், கொஞ்சிமங்களம் நித்ய தீப தர்மச்சாலையிலும், தேவதானம் பேட்டை நித்ய தீப தர்மச்சாலையிலும், கங்காவரம் நித்ய தீப தர்மச்சாலையிலும், வாழைப்பந்தல் நித்ய தீப தர்மச்சாலையிலும் தொடர்ந்து பசித்தவர்களுக்கு *சில நல் உள்ளங்களின் பேராதரவோடு* தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆகாரம் கொடுத்து பசியாற்றிவித்தல் செய்து கொண்டிருக்கிறது. தினசரி நடைபெறும் தொடர் அன்னதான ஜீவகாருண்ய திருப்பணியை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவருளால், திரு அருட்பிரகாச வள்ளலார் ஐயா தோன்றாத் துணையாக இருந்து கொண்டு நடத்திக் கொண்டிருக்கிறார். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 23 ஆண்டுகளாக பல்வேறு அறப்பணிகளுடன், பல்வேறு தர்ம சாலைகள் மூலம் பல லட்சம் பேருடைய பசியைப் போக்கிய, தொடர்ந்து பசிக்கு ஆகாரம் கொடுத்துக்கொண்டிருக்கும் தீபம் அறக்கட்டளை, இதோ இந்த கடினமான சூழ்நிலையிலும், இக்கட்டான சூழ்நிலையிலும், நிதி நெருக்கடியிலும், சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பின்தங்கியவர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு, தர்மசாலையை தேடி வருபவர்களுக்கு, நாடி வருபவர்களுக்கு அவர்களின் பசி குறித்த தன்மையை உணர்ந்து, தீபம் அறக்கட்டளை பசியை கால நேரம் கருதாது, பசித்த சமுதாய மக்களுக்கு தொடர்ந்து ஆகாரம் கொடுத்து மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. (மனதை நெகிழ வைக்கும் - *படமுடியாது இனி துயரம்* - என்ற திருஅருட்பா இசையுடன் தீபத்தின் தினசரி அன்னதான பணிகளை 3 நிமிட வீடியோவாக, இத்துடன் இணைத்து, தீபம் அறக்கட்டளையின் தொடர் நன்கொடையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்).


*இறைவனிடம் பிரார்த்தனை* 🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️ *தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்* - திருவருட்பா. இறைவா ! உலகிலுள்ள மக்கள் செய்யக்கூடிய தவறுகளை மன்னித்து, உலகம் முழுவதும் உள்ள மனித உயிர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய, கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை விரைவில், அதிவிரைவில் *காப்பாற்றுங்கள் இறைவா* என்று மனமுருகி பிரார்த்திக்கிறோம்!!! 🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️ பிறர் பசியைப் போக்க வேண்டும், சமுதாயத்திற்கு உதவ வேண்டும், தர்மம் செய்ய வேண்டும் என்ற *தெய்வீக குணங்களை கொண்ட தர்மவான்கள்,* தங்களுடைய நன்கொடைகளை, அருள் நிதியை, குண நிதியை, கருணா நிதியை, தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கில் வங்கி பரிமாற்றமாக மட்டுமே செலுத்துமாறு வேண்டுகிறோம். வங்கி விவரங்களை கீழே கொடுத்துள்ளோம். இதோ அடுத்த நிதியாண்டு ஆரம்பித்துவிட்டது. நிதியாண்டு தர்மத்தோடு ஆரம்பம் ஆகட்டும். தர்மம் செய்து சமுதாயத்தில் உள்ள ஏழைகளின் பசியைப் போக்குவோம். ஆண்டவனுடைய அருள் பெறுவோம். *வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்* என்ற குறளுக்கு ஏற்ப நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அரிதிலும் அரிதான மனிதப்பிறவியின் மேன்மையை உணர்ந்து வாழ்வாங்கு வாழ்வோம். தங்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து நன்கொடைகளும், திரும்பவும் *சமுதாயத்திற்கே பயன்படுத்தப்படுகின்றன* என்பதை தீபம் உறுதி செய்கிறது. தீபம் அறக்கட்டளை ஓர் அரசு பதிவுபெற்ற, தணிக்கைக்கு உட்பட்ட, வரிவிலக்கு அளிக்கப்பட்ட, பொது தர்ம ஸ்தாபனம். 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 மேலும் தீபம் அறக்கட்டளைக்கு எல்லாம் வல்ல இறைவன், அன்னதான பணிகளுக்காக, அறப்பணிகளுக்காக, சொந்த தர்மசாலை கட்டிடத்தையும், அதற்கான இடத்தையும், சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவில் அருகில் *"நித்ய தீப தர்மசாலை வளாகமாக ... வள்ளலார் கோட்டமாக..."* அமைத்துக் கொடுத்திருக்கிறார். தருமச்சாலை கட்டிட திருப்பணிக்காக இதுவரை தீபம் சில லட்சங்களை வட்டி கடனாகவும், வட்டியில்லா கடனாக பெற்று, தருமச்சாலை கட்டிடத்திருப்பணியை முடித்து இருக்கிறது. *அறக்கட்டளைக்கு இன்னும் சில லட்சம் கடன் இருக்கிறது.* கடனை வட்டியுடன், இன்னும் ஒரு சில மாதங்களில் திருப்பி தரவேண்டிய சூழ்நிலையில் தீபம் இருக்கிறது. தர்மசாலை கட்டிடத்திற்கு அவரவர் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு, ஆயிரங்களாக ...லட்சங்களாக... தர்மம் செய்து, பாகம் செய்து, எல்லாம் வல்ல இறைவனுடைய அருள் பெற்று, உடல்நலம் மனநலம் பொருள்வளம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நீடூழி வாழ்க ! பல்லாண்டு வாழ்க! மரணமில்லா பெருவாழ்வு வாழ்க ! என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். நன்கொடைகளை அளிக்க விரும்பும் அருளாளர்கள், தங்களுடைய நன்கொடைகளை வங்கி பரிமாற்றம் அல்லது காசோலையாக தீபம் அறக் கட்டளையின் பெயருக்கு அனுப்பிய பிறகு, நன்கொடை விவரங்களை 9444073635 என்ற எண்ணுக்கு தெரியப்படுத்தவும். 🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚 *Bank Transfer* Let Dharma Spread from Door to Door; Heart to Heart; Person to Person. For Donation thro Bank Transfer: State Bank of India, IIT Madras, Current A/C No.30265475129, DEEPAM Trust, IFS:SBIN0001055; by cheque i.f.o. DEEPAM TRUST No.30, Droupathi Amman Koil Street, Velachery, Chennai 600 042. After transfer, please send your Donation details such as, email ID, purpose, date of AD etc.to: 9444073635 🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚 தீபம் ஓர் பதிவு செய்யப்பட்ட அறத் தொண்டு நிறுவனம் என்பதால், *ரொக்க நன்கொடைகளை முழுவதுமாக தவிர்க்குமாறு விண்ணப்பிக்க

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...