Tuesday 20 November 2018

டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்க, கைகோர்க்க அழைக்கின்றோம்

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
- திருஅருட்பிரகாசர்



கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம்,  உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உணவின்றி தவிக்கின்ற, ஆகாரத்தை எதிர்பார்த்து வருந்துகின்ற சகோதர, சகோதரிகளுக்கு நேரடியாக சென்று, கிராமம் கிராமமாக பார்வையிட்டு, அந்தந்த இடங்களிலும், கிராமங்களிலும் ஒரு வார காலம் உணவு தயார் செய்து பசிப்பிணியை போக்கிட, டாடா ஏஸ்  வாகனத்தில் மூலம்  நடமாடும் அன்னதானம்.

இயற்கையின் சீற்றமான கஜா புயலினால் புரட்டி போடப்பட்ட டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், வேதாரண்யம்,  மாவட்ட மக்களின் கண்ணீர் நம் கண் முன்னே வந்து செல்கிறது. வேதனையின் விளிம்பில் வாழும் மக்களின் பசிப்பிணி போக்க, துயர் துடைக்க 21-11-2018 புதன் முதல், சுமார் ஒரு வார காலம் கிராமம், கிராமமாக ஆங்காங்கே  தங்கி உணவை தயார் செய்து அன்னதான சேவை புரிந்திட, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை, விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை அறக்கட்டளை இணைந்து நிகழ்த்தும் ஜீவகாருண்ய திருப்பணிக்கு சேவாதாரிகள் புறப்பட இருக்கிறார்கள். அது சமயம் தொண்டு செய்ய ஆர்வம் உள்ள அன்பர்களை வணங்கி வரவேற்கிறோம்.

அன்னதானத்திற்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறி, எரிபொருள், மற்றும்  கருணை நிதியை வாரி வாரி வழங்கி  ஆன்ம லாபம் அடைய அன்புடன் வரவேற்கிறோம்.

சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையிலிருந்து இரண்டு வாகனங்கள் இன்று இரவு (21.11.18-புதன்) புறப்படுகின்றன.

தொடர்பிற்கு.-
தீபம் அறக்கட்டளை
www.deepamtrust.org
வேளச்சேரி, சென்னை.
கைபேசி: 9444073635
ஜோதி சதுரகிரியார்
கைபேசி: 9789494009

விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை அறக்கட்டளை.
ஜெய. அண்ணாமலை
கைபேசி:9994856314

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...