Monday, 27 November 2023

10-12-2023 : ஒரு நாள் இன்பச் சுற்றுலா

🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

       🌹🌹 ஒரு நாள் இன்பச் சுற்றுலா 🌹🌹

      🔥10.12.23 (ஞாயிற்றுக்கிழமை)🔥

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹

பார்க்க, பயணிக்க உள்ள  இடங்கள்:

👉 இயற்கை எழில் சூழ்ந்த கோனே பால்ஸ் நீர்வீழ்ச்சி & குளியல்.

👉 வள்ளலார் தரிசனம் செய்த திருத்தணி முருகர் மலைக்கோவில் 

👉 புகழ்பெற்ற திருவாலங்காடு சிவாலயம் 

👉 நேரமிருப்பின் மேலும் சில இடங்கள்

🚌🚎🚌🚎🚌🚎🚌🚎🚌🚎

பஸ் புறப்படும் நாள்: 10-12-2023 (ஞாயிற்றுக்கிழமை)

Reporting Time: 5.30 am.

Bus புறப்படும் நேரம் : சரியாக காலை 6 மணி

(அனைவரும் சரியான நேரத்தில் ஆஜராக வேண்டும்)

இடம்:

நித்ய தீப தருமச்சாலை வளாகம்

7/8, புத்தேரிக்கரை தெரு 

வேளச்சேரி சென்னை -42

google map:

https://goo.gl/maps/D7fddZw3TMsPVMEb7

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

முன்பதிவிற்கு: 

திரு M மாதவன் - 8825611010

தீபம் அலுவலகம் - 044 4335 8232

கீழுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்:

https://forms.gle/ktQtodXMd8PMeBP87

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

பஸ் கட்டணம்: Rs.1,000 (மூன்று வேளை சைவ உணவு உட்பட)

Gpay/Phonepe Number : 8825611010 

Banking Name : Madhavan M

பணம் செலுத்தியவர்கள் Screenshot அனுப்பவும். 

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

இந்த இன்பச்சுற்றலாவின் சிறப்பம்சம்:

1) திரு தல கோவில்களின்  தரிசனம்: திருவாலங்காடு & திருத்தணி

திருவாலங்காடு:

திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு எனும் ஊரில் அமைந்துள்ளது.சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜ பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் ரத்தின சபை ஆகும். இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது.


திருத்தணி முருகன் கோயில்:

திருத்தணி முருகன் கோயில் (Thiruthani Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவின், வடதமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.

இந்த கோயில் தணிகை மலை என்ற மலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரம் மற்றும் நான்கு வளாகங்கள் உள்ளன. இக்கோயிலுடன் தொடர்புடைய பல நீர்நிலைகள் உள்ளன. இத்தலத்தில் முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடி போன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞான சக்திபெற்றவராகக் காட்சி தருகிறார்.



கைலாசகோனா அருவி:

கைலாசகோனா அருவி (Kailasakona Falls) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டத்தில் நாராயணவனம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. அருவிக்கு அருகில் சிவன் மற்றும் பார்வதி கோவில் உள்ளது. அருவி சுமார் 40 அடி உயரம் கொண்டதாகும். மலைப்பகுதிகளிலும் மூலிகைப்பகுதி வழியாகவும் தவழ்ந்து வருவதால் அருவி மருத்துவகுணம் நிறைந்ததாக இருக்கிறது. வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும் என்பது இந்த அருவியின் சிறப்பாகும்.

2)  நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்தல்... குளித்து மகிழ்தல்...

3) பேருந்தில் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகல  கொண்டாத்துடன் பயணம்.

4) முன்பணம் செலுத்தி பதிவு செய்பவர்களுக்கு முன்சீட் கொடுத்து ( சீட் நம்பர்) முன்னுரிமை தரப்படும்.

5) சுற்றுலாவின் நோக்கம்:  "மகிழ்வித்து மகிழ்தல்"

குடும்பத்துடன் வருபவர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு.

7 வயது குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை.

மூன்று வேளையும் சுத்தம்,  சுகாதாரம் நிறைந்த சைவ உணவு.
(பாக்குமட்டை தட்டில்... வாழை இலையில்...)

தேவைப்பட்டால் இரண்டு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும்.

🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊

சென்னை திரும்புதல்: இரவு 9 மணி அளவில்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

மகிழ்ந்து மகிழ, மகிழ்ச்சி பொங்க, பரபரப்பான பணி நாட்களுக்கு இடையே இளைப்பாற, இயற்கையோடு இசைந்து வாழ வருக! வருக! என அன்புடன் அழைக்கின்றோம்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

நிகழ்ச்சி ஏற்பாடு:

தீபம் அறக்கட்டளை

வேளச்சேரி, சென்னை.

💐💐💐💐💐💐💐💐💐💐

சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள்,

திரு M மாதவன்

88256 11010

தயவு.D ஆனந்த்

9884997545

தயவு.நாகேஸ்வரி ரங்கராஜ்

9952044504

தயவு.ஜானகி ஜெயசேகர்

9444629404

தயவு V  குமரேசன்

9283452409

Monday, 6 June 2022

ஏழை மாணவ-மாணவிகளுக்கு 13ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப் பணியாக, சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் வசதியின்மையால் குடும்ப ஏழ்மை நிலையில் உள்ள பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மேற்படிப்பை தொடர தீபம் அறக்கட்டளை  ஒவ்வொரு வருடமும் 100 ஏழை எளிய மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.

இதுவரை கடந்த பத்தாண்டுகளில் 1107 மாணவச் செல்வங்களுக்கு மொத்தம் ₹60,95,165/- ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சமுதாய அக்கறையோடு ஏழை மாணவர்களின் கல்விக்கு கடந்த 12 ஆண்டுகளில் ₹60 லட்சங்கள் அள்ளிக்கொடுத்து உதவிய அருளாளர்களை, நன்கொடையாளர்களை, வாழும் தெய்வங்களை, தீபம் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது.

மேலும் வரும் 2022-23 கல்வியாண்டில் டிப்ளமோ, டிகிரி, என்ஜினியரிங், மெடிக்கல், பயில விரும்பும் அல்லது படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏழ்மை தகுதியின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு, ஆன்லைன் மூலம் நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலுக்கு பிறகு "தீபம் கல்வி உதவி குழு" பரிந்துரை செய்த மாணவ மாணவிகளுக்கு, கல்வி உதவித் தொகையை மாணவர்கள் பயிலும் கல்லூரிக்கு நேரடியாக காசோலையாகவோ அல்லது வங்கி பரிமாற்றமாகவோ செலுத்தப்படும். 

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் எந்த அறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும். தீபம் அறக்கட்டளையின் கல்வி உதவி குழுவின் முடிவே இறுதியானது.

கல்வி உதவி குழு பரிந்துரை செய்யும் மாணவர்களுக்கு அதிகப்படியாக, ரூபாய் 10,000 வரை உதவித் தொகை வழங்கப்படும். நிதி நிலையை பொருத்து கல்வி உதவி அதிகரிக்கக்கூடும்.

தீபத்தின் வெள்ளி விழா ஆண்டு, இந்த வருடம் தமிழகத்தின் ஏதாவது ஒரு கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னையில் கல்லூரி படிப்பு படிக்க வரும்  மாணவர்களுக்கு இலவச தங்கும் அறை மற்றும் உணவு வழங்கி கல்வி கட்டணம் முழுவதும் செலுத்த தீபம் தயாராக உள்ளது. நல்வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளலாம்.

விண்ணப்பிக்க இந்த லிங்கை பயன்படுத்தவும்:



பதிவு செய்ய கடைசி நாள்: 
முதல் வருட மாணவ மாணவியர்களுக்கு  - 31.07.2022
இரண்டு - நான்காம்  வருட மாணவ மாணவியர்களுக்கு  - 15.07.2022


குறிப்பு:
1) பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
2) தாய் தந்தை இல்லாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3) முதல் தலைமுறை பட்டதாரி, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்கள், அரசு கல்லூரிகளில் பயில்பவர்களுக்கு, கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு, முன்னுரிமை தரப்படும்.

Monday, 25 April 2022

தீபம் அறக்கட்டளையின் 25வது ஆண்டு மலர்

 தீபம் அறக்கட்டளையின் சமுதாய பணிகள் 


PDF வடிவில் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

https://drive.google.com/file/d/1w5yGPJxJ8gKzrlfxg7DvFM5AxOMmy5Ot/view?usp=sharing



















































வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...